அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

யாரிடம் பேசினாய் இப்போது
என்றார் அவர்

நானா.. ?
எனது அம்மாவிடம்
பேசிக்கொன்டிருந்தேன் என்றேன்

இல்லையே
ஏதோ மனைவியிடம்
பேசுவது போலிருந்ததே என்கிறார் அவர்

நான் சிரித்துக்கொண்டே
ஓ அதுவா
அதனாலென்ன
எனக்கு அம்மாவும் அவள்தான்
மனைவியும் அவள்தானென்றேன்..

ஒரு கிளையில்
குருவியொன்று இலைகளை விளக்கிக்கொண்டு
எனை எட்டிப் பார்த்தது
கீழ்விழுந்த இலையொன்றை எடுத்து
எழுதிப் போட்டது
எனக்கும் அவள்
அம்மா போலென்று!!
——————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக