பிணமென்று ஆவேன் சகியே..

 

 

 

 

 

 

 

 

னக்கான மழைத்துளிகள் தான்
இந்த வனமெங்கும் பெய்கிறது,

உன் மௌனத்தில் கரைந்தொழுகும்
கண்ணீராகவும்

உனது சிரிப்பில்
பூச்சொரிக்கும் மலர்களாகவும்

நீ பேசுகையில்
இசையும் நரம்புதனில் உணர்வாகவும்

உனைப்பார்துக் கொண்டே இருக்கையில்
உயிர்த்திருக்கும் நினைவுடனும்

உனைக் காணாத பொழுதுதனில்
சலனமற்று கிடக்கும் நதியின் முகாந்திரமாகவும்

நீ மட்டுமே எனக்கான
மழைத்துளிகளாய்
இவ்வனமெங்கும் பொழிகிறாய்

இந்த வனத்திற்கு நீயிருக்கையில்
நானென்று பெயர்,
நீயில்லா கணமொன்றில் பிணமென்றும் பெயராகலாம்!
———————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக