33, நிலா தெரியும் கடல்..

 

 

 

 

 

1)
ரு மரத்தில் ஆயிரம்
இலைகள் முளைப்பதைப்போல
மலர்கள் பூப்பதைப்போல் நாமும்
இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்..

நமக்கு வேர் ஒன்று
கிளைகளின் வகை ஒன்று
இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும்
நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே;

உலகம் வெளியில் உள்ள
மரத்தைப் பார்க்கிறது
அதற்குத் தெரிவதில்லை; நாமும்
அந்த மரத்தின் ஒரு இலைதானென்று…
———————————————————————————-

2)
நி
லா எத்தனைப் பிரகாசமனதோ
அத்தனை வெப்பமுமானது,

சூரியன் எத்தனை வெளிச்சமானதோ
அத்தனை நெருப்பைக் கொண்டது

பழங்கள் எவ்வளவு இனிப்புடையதோ
அதேயளவு காய்த்து கசப்பையும் செரித்ததே,

மனிதருக்குள்ளும்
வெப்பமுண்டு கோபமுண்டு
கசப்புண்டு பொறாமையுண்டு
ஈரமுண்டு வெறுப்புண்டு
சதையும் எலும்புமாய் ஆசையும் சலிப்பும்
அகல விரிந்த குளம்போல
உள்ளேக் கொட்டிக்கிடக்கும்
நாற்றமாய் காமமும் உண்டு,

அதத்தனையும் பழுத்தால் செரித்தால்
அன்பில் அணைத்தால்
வெறும் அமைதியும் இனிப்பும் வெளிச்சமும்
பிரகாசமும்
நம்மிடையேயும் உண்டு தோழர்களே..,

நமக்குத்தான் –
நமக்குள் இருக்கும் நிலவும் சூரியனும்
காற்றும் நெருப்பும் நீரும் கடலும்
எங்கோ தூரத்தில் மட்டுமே தெரிகிறது..
——————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 33, நிலா தெரியும் கடல்..

  1. பிங்குபாக்: 33, நிலா தெரியும் கடல்.. – TamilBlogs

பின்னூட்டமொன்றை இடுக