Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “ “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “ “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , | 22 பின்னூட்டங்கள்

37 வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!

‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது – எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. ‘நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்திட்ட ஆசைகள் மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது.. ‘வருடத்தில் பூக்கும் வளைகுடாவின் பசுமையை போலன்றியும் வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள் தூரத்தின் இடைவெளியில் – சிக்கிக் கொண்ட பாரங்களாகவே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 19

உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே இருக்கும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 18

ஒரு சின்ன ஊரில் தெருவில் வீட்டில் பிறக்கிறது ஒரு தேசத்திற்கான வன்முறை. வீடுகள் சரியெனில் நாடும் சரி! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்