Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

மிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை!

ஒவ்வொரு இடமாக நகர்கிறது வாழ்க்கை; கேட்டது கிடைத்ததோ இல்லையோ தேவைகள் கூடி கூடி குறைத்துக் கொண்டே வருகிறது – நமக்கான உயிர்ப்பை! உள்ளும் புறமும் உண்மை ஒழித்து பொய்மையில் புழங்கிக் கிடக்கும் – நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில் தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்! மனம் சொல் சிந்தனை செயலென அத்தனையிலும் வீரியம் கொண்ட … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை! ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்!

என் பத்துமாத சுமப்பில் என் பிரபஞ்சமாய் பூத்தவளே; என் பெண்மைக்கு – நெற்றி பொட்டிட்டு எனை அம்மாவாய் பெற்றவளே; ஊர் தூற்றிய மலடிக்கு – உன் ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே; உயிர் பிரிந்து செல்கையில் – என் கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே; என் இரவுபகல் வலி தின்று – என் ரத்தத்தில் சமைந்தவளே; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த மூடர்களின் கடவுள்; நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் சொல்லி விளம்பரத்திற்காய் – வீடு வரும் பித்தன்; ராகுகாலம் எமகண்டமென்று ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி; காசுவாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் கால துரோகி! நாட்களின் நகர்தலை அளந்து காட்டுவதாலும் – நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும் மட்டுமே – பணம் கொடுத்து வாங்கிவரும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை; வானவில்! வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு வானம் காட்டும் வர்ண ஜாலம்; வானவில்! கல்வியறிவை கடன் வாங்காது இயற்கை நெய்த கணினி வித்தை; வானவில்! ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த வான தேவதையின் வண்ண மாலை; வானவில்! காற்றில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்