Category Archives: கவிதைகள்

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

இரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 60

கனவில் நீ – வருகிறாய், கனவிலிருந்து தொடரும் உன்னையுமென்னையும் பிரித்த சோகம்- கனவுக்கு பின்னும் நீள்கிறது; காலத்தின் கைகளில் நீயும் நானும் எப்பொழுதும் – பிரிந்தே பிரிந்தே கணவனும் மனைவியுமாக!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு சம்பாதிக்கும் பணம் – இரக்கமின்றி தின்கிறது நம் – சந்தோசங்களையும் சிரிப்பையும்; இருந்தும் – உலகிற்கு நாம் நலமென்றே தெரிகிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 56

ஒரு சில பொய்களில் ஜெயிக்கிறது சிலரின் – உண்மையற்ற வாழ்க்கை; நானென் உண்மையை உன் பொய்யற்ற அன்பில் வெல்ல நினைக்கையில் – உனக்கும் எனக்குமிடையே குவைத்தும் இந்தியாவுமாய் எத்தனை பெரிய தூரம்!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 55

உறங்குவதற்கு விளக்கை அணைக்கும் ஒவ்வொரு இரவிலும் – விழித்துக் கொண்டு அலறுகின்ற உன் – அத்தனை நினைவுகளால் உறங்காமலே பூக்கின்றன கனவு பூக்கள் – படுக்கையை நனைத்த கண்ணீரின் ஈரத்தில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்