Category Archives: கவிதைகள்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!

எங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்! உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்! விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்