Category Archives: கவிதைகள்

93 ஞானமடா நீயெனக்கு…

1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

86 ஞானமடா நீயெனக்கு…

1 அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொருக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொருக்கி என்றாய்; எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!! —————————————————————————- 2 சிறகடிக்கும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கண்ணீர் வற்றாத காயங்கள்..

1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!! ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்