இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில்
சொக்கித் தான் போனது காதலும்;
சொக்கித் தான் போனேன் நானும்
சொக்கவைத்தவள் அவள்!

அவளொரு –
மரத்த தமிழச்சி,

அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில்
இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது..

தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற
பனைமரக் காலமது,

வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும்
ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது,

அந்தக் குழாயின் –
வாயடிச் சண்டையில்
கைகட்டி நின்றவளின் பார்வையிலிருந்து
பூத்ததெம் காதல்.

கண்களின் –
காட்சிப் பிழைபோல் தெரிந்த உலகத்தை
சற்று திருத்தி –
என் ஆண்டைகளின் வீரத்தை
போதித்தது காதலே.

அதோ…
சல் சல் சலங்கை ஒலியிட்டு
பவனி வருகிறாள் அவள்;
அவளின் கால் கொலுசு சப்தத்திலிருந்து
கரையத் துவங்குகிறது என் மனசும் காதலும்

அன்றெல்லாம் –
அவளை காணும் தினமே – நான்
வாழும் தினமென்றுக் குறித்துக் கொள்வேன்,
கானாதப் பொழுதுகளை –
கவிதைகளால் கிருக்கிச் செல்வேன்;
அதில் –
கவிதையில் – காதல் பூத்தது;
காதலில் –
அவளும் நானும் கரைந்தோம் கலந்தோம்
காற்றில் நடந்தோம்
கைவீசி போட்ட ஒய்யார நடையில்
ஜாதியின் மதத்தின் கண்களில் குத்தினோம்!

விழித்துக் கத்திய சமூகத்தை
உடைத்துப் போட்டதெங்கள் காதல்.

ஆம்;
ஜாதிக்கு மதத்திற்கு தலைவிரித்தாடும்
ஆட்டம் சொல்லி என்
நேற்றைய தலைமுறையை ஒரு நூற்றாண்டிற்கு
தட்டிவைத்ததிந்த சமுகமில்லையா?

மனித உயிரின் உயிர்பயமில்லாது
தன் சுயநல வெறியின் பசிக்கு
என் இளைய சமுதாயத்து உயிர்களை
தின்றதிந்த சமுகமில்லையா……?

இதோ கைகோர்த்துக் கொண்டு
கிணற்றில் வீழ்கிறோம்
முடிந்தால் பிரித்துக் கொள் உன் ஜாதியை என்றோம்,

வாய் பிளந்துப் பார்த்தது சமூகம்
எண்களின் பிணத்தை!

அதற்காக –
இறந்து விட்டோமென்று நினைக்காதீர்……..
என் தம்பி காதலிப்பான்
என் மகன் காதலிப்பான்
என் மகள் கூட காதலிப்பாள்
ஜாதி
மதம்
நாற்றமெடுத்துப் போகும்;

மனிதம் காதலில் மிஞ்சும்; காதல்
கவிதையாகும்!
கவிதையில் காதல் பூக்கும்!!
———————————————-
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு!

அன்புடையீர் வணக்கம்,

ண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா.

மது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

ளமை கனவுகளை
ஈழத்தில் தொலைத்தவரே,

விடுதலையின் எழுச்சிக்கு
எட்டுதிக்கும் பறந்தவரே,

ஈழதேசம் என் நாடென்று
எல்லை தமிழனுக்கும் சொன்னவரே,

எம்மின மக்களுக்காய்
தன்னலம் துறந்தவரே,

அண்ணன் தம்பி நீயென்று
என் சனத்தொட வாழ்பவரே,

லட்சியம் ஒன்றென்று
சத்தியம் காத்தவரே,

கத்தி கத்தி பேசி பேசி
எம் அடையாளம் மீட்டவரே,

சுட்டெரிக்கும் வார்த்தையினால்
எதிரியை சுண்டி; சுண்டி எறிந்தவரே,

எரிக்கும் கனல் பேச்சாலே
எமக்கு சுதந்திர தாகம் கொடுத்தவரே,

பணம் பார்க்கும் திரையில் கூட
பாடம் சொல்லி தந்தவரே,

மொழிக் குற்றம் முதல் குற்றமென
எம் காதுகளில் அறைந்தவரே,

அண்ணன் தம்பி பாசம் ஊட்டி
இளைய பட்டாளம் வலைத்தவரே,

தமிழென்னும் அமுதுக்கு
தவமாய் கிடப்பவரே………

சீமானே….. சீமானே…………

வடுகப் பட்டியிலிருந்து வாட்டிகன் சிட்டி வரை
தமிழர் உள்ளம் நிறைந்த சீமானே –
இளையோர் சொல்லி மகிழும் சீமானே….

உனை சிறைக்கம்பி என்ன செயும் – பார் உன்
நரைமுடிக்குக் கூட பயந்து போகும் சீமானே……….

மண்டைக்கேறிய பயமும்
கட்டிப் போடும் சூழ்ச்சியும் – உனை
ஆயுள் முழுக்க என்ன அடக்கியா போட்டு விடும் சீமானே…..?

அடக்க இயலா எழுச்சியின்
பெருந்……….. ‘தீ’ ………… நீயென அறியாமலா
இருந்துவிடும் சீமானே……?

நீ கிளறிவிட்ட சுதந்திர புரட்சி – இனி நீ
சொல்லாமலும் சுடர் விட்டெழும் சீமானே…….

மேஜை தட்டி தட்டி நீ பேசிய தமிழ்
கையினை தூக்கி தூக்கி மேலே நிறுத்திய உன் தமிழ்
உனை காக்கும் பொருட்டே
விரைவில் ஓடிவரும் சீமானே………………

பொருள் படைத்தவர் அழைத்ததை எல்லாம்
உதறிய உன் மனமும் உண்மையும் உனை
எப்பொழுதுமே காக்கும் சீமானே…………..

எங்கள் இதயம் முழுதும் நீயிருக்க
உனக்கு சின்ன சிறையென்ன
அந்தமானில் கூட வைக்கட்டுமே சீமானே;
அந்த – அந்தம்மான் கூட – உனைபெற்று
தனை திருத்திக் கொள்ளும் சீமானே……..

உன்னோட தமிழ் கேட்டு
அந்நிய மொழியை அறுத்துக் கொண்டதெம்
தமிழ்மக்கள் சீமானே……….

திருத்திக் கொண்ட மொழியின் –
மண்ணின் –
நன்றிக் கடலெனப் பொங்கி – உனை
வெல்லும் பலம் கொள்ளச் செய்யும் சீமானே……

உன் அன்பில், அக்கரையில், வேகத்தில், விவேகத்தில்..
உடைபடும் சிறை – பார் சீமானே………

விரைவில் –
வெற்றி கொள்ளுமுன் லட்சியமென்பேன் – காரணம்
லட்சியத்தில் எனக்கும்; தமிழர்க்கும்; பங்குண்டு சீமானே!!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;

தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;

பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;

மறக்க இயலா மரணச் சூட்டின் –
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் –
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் –
முளைத்தெழு உறவுகளே;

டிப்பவனை மன்னிக்கலாம்
அவனே திருப்பி அடிபானெனில் – திருப்பி அடித்தவனை
திருப்பி அடிக்கும் வரை
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;

செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்
சுப்பனும் குப்பனுமல்ல;
எம் விடுதலையை ‘உயிர்விடும் வரை காத்த வீரர்கள் –
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;

தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்
தாலி பறித்தவன் சிங்களவன் –
அவன் பொட்டில் அரைந்து சொல் – எம்
விடுதலை எத்தனை வலிதென்று; எம்
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!

ணைந்து வாழும் வேடம் பூண்டு
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,

தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,

இரண்டாம் தர இடம் தந்தே எமை
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை
ஆணவத்தை –
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;

யிர் பறிக்கும் கழுகுகளுக்கு
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?

உயிர் பறித்து
ஆடை களைந்து
நிர்வாணம் ரசித்து
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?

உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு – நாம்
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???

மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் –
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!

ன்று அடங்கும்
எம் வீரர்களின் –
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!

அதுவரை ஓயாதீர் உறவுகளே…………………..
——————————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில்
என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக
உன் பெயரை பரிந்துரைக்கிறேன்;
நட்பின் வாசம் –
பூங்காற்றெங்கும் பரவட்டும்!!

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

வீழும் நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் –
இரவு வணக்கம்!
———————————————————————–

மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது,
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது,

…தேடியவரை பெறாத நிம்மதியை
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

வ்வொரு வணக்கத்திலும் கேட்கிறது
தமிழுக்கான இசையின் வாசனை;
தமிழுக்கான வாசனையில் மிளிர்கிறது
வணக்கமும்!
———————————————————————–

ரு மனக்குயிலின்
ஒயிலாக உள்ளே சப்தமெழுப்பி
நிற்கிறேன் ;
சப்தம் நட்பாய் நிறைகிறது
சப்தம் ஒரு வணக்கத்திற்குள்ளே
முடிகிறது!’

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு நிலவு பூத்த
இரவின் நிசப்தத்தில்
எண்ணிடாத நட்சத்திரங்களாக கனக்கும்
மனதின் சுமையை
வணக்கம் சொல்லும் ஒரு தோழமையின் குரல்
உடைத்துத் தான் விடுகிறது;

அன்பு வணக்கம்!
———————————————————————–

ணர்வூட்டும் பொழுதுகளில்
எங்கேனும் கிடைத்து விடுகிறது
கவிதைக்கான கரு –
சிறு வணக்கத்தில் கூட!

அன்பு வணக்கம்!
———————————————————————–

சி
வார்த்தைகளை மட்டுமே
தேட அவசியமின்றி
அன்பிருந்தால் உடனே வந்துவிடுகின்றது
வணக்கமென்று!

அன்பு வணக்கம்!
———————————————————————–

வாழ்வின் வெற்றிடங்களை நிரப்ப
ஏதேனும் ஒரு உயிர்
எங்கேனும் ஓரிடத்தில்
நமக்குமாய் பிறந்துகொண்டுதானிருக்கிறது;
பிறருக்காக நாமிருக்கும் பட்சத்தில்!

அன்பு வணக்கம்!

———————————————————————–

ழுதுகோலின்
நுனிவரை வந்துவிடுகிறது
வார்த்தை-

எடுத்து வணக்கமாய்
சேர்த்ததில்
கவிதையானது…

இனிய காலைவணக்கம்!
———————————————————————–

ரெல்லாம்
இட்டுக் கொண்டிருக்கும்
கூச்சலுக்கு இடையேயும்
ஒரு கவிதை கேட்கும் இசை போல
தந்திரம் கொள்கிறது உன்
வணக்கத்தின் ஓசை;
ஒரு நான்குவரி கவிதைக்கேனும்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

முகங்கள் –
என்னவாக வேண்டுமாயினும்
இருக்கட்டும்,

உயிரை –
தமிழாகவே
வைத்திருப்போம்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு கதைசொல்லியாக வாழ்வதைவிட
நாம் வாழ்ந்ததை
ஏதேனும் ஒரு கதை சொல்லட்டும்.

என்றாலும், நம் கதைகளும்
யாரேனும் வாழ்வதற்கான
வழியை சொல்லலாம்;
அதற்குத் தக்க எழுதுவோமெனில்!
அன்பு வணக்கம்!
———————————————————————–

போவது உயிரென்று
தெரிந்தும்,

…விடுவது உயிரென்று
தெரிந்தும்,

உயிரை விட்டனர் தமிழர்
தமிழை விடவில்லை.

இருப்பினும்,
தமிழ் –
உயிர்கொள்ளவில்லை;

தமிழை –
தமிழரை கொள்வதாய் எண்ணி
தன்னைதான் கொண்று கொண்டிருக்கிறான்
சிங்களவன், என்பதை –
காலம் உணர்த்தும்.

காண –
நாமிருப்போமா யெனில்
கேள்வி தான்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு காதலியோடு போகும் போது மட்டும்
மிக சாதாரணமாக யாரிது என்று கேட்கும்
மக்கள் –
எப்படியோ; தங்கையோடு போகும் போது மட்டும்
யாரிது ‘காதலியா என்று கேட்க
…நா கூச மறுக்கிறது!

அன்பு வணக்கம்!
———————————————————————–

தயம் இரும்பாலானது இல்லை எனினும்
நேரமும் இருபத்தியெட்டு மணிநேரமாக
இல்லையே தோழி –

எனவே இருக்கும் நேரத்தில் வணக்கம் சொல்லக் கூட
இருபத்தி நான்கு மணிநேரம்
குறையென்று எண்ணிய இடையில்
அன்பால் அதை கடந்து ஓடி வந்து
விடுகிறது மனசு; அன்பு வணக்கம் சொல்ல!

இனிய இரவு வணக்கம்
———————————————————————–

ணர்வெல்லாம் நிறைந்த
மொழியின் அழகை கைகளில் குவிப்போம்;
வாய் வணக்கமென்று சொல்லும்,

அதில் கலந்த அன்பு
மனதை வெளியே புன்னகையாய் காட்டும்;

புன்னகை வணக்கத்தில்
பூக்கட்டும் இந்நாள் உறவுகளே!!
———————————————————————–

ல் போல இறுகிய மனதிற்கு
அல்லது சதையாக பிணைந்த இதையத்திற்கு
தன்னை மனிதம் மிக்கதாக மாற்றிக் கொள்ள
பெரிதாக ஒன்றுமில்லை –
அன்பொன்றே தேவை படுகிறது;
அன்பு செய் உறவுகளே..

இனிய காலை வணக்கம்
———————————————————————–

ரவினை கவலம் கவலமாகவே விழுங்கும்
வலியான மனப்போக்கினை
இயல்பாய் வந்து மாற்றிவிடுகிறது
நட்ப்பின் ஒரு சின்ன வணக்கம்!
———————————————————————–

கோடிக்கு மேலான
நட்சத்திரங்களின் எண்ணிக்கையாக,

ஒற்றை நிலவின் ஒளியாக
உலகமாய் விரிந்த மனதாக
பெரிதாக எல்லாம் ஒன்றும் வேண்டாம்
ஒரு புன்னகைக்கும் அன்பு செய்; போதும்!
அன்பு வணக்கம்!

———————————————————————–

ள்ளிக் கூடத்தில் நட்பு பெற்று
நட்புகூடத்தில் பாடம் கற்று
பாடத்தில் வராத புத்தகத்தில்; மனம் புதைத்ததில்
முகங்கள் பல கிடைத்தன,
மனங்கள் பல இணைந்தன,
ஒன்றுக்கொன்று முகம் பாராமலே –

முகநூல் தெருவெல்லாம்
நட்பென்றே கொடி நாட்டின!!

அன்பு வணக்கம்!

———————————————————————–

யிர்மீட்டும் வீணையின்
ஓரிழை நட்புமெனில் –

உடன்பிறக்காமலே உயிர்புகும்
உறவென்னும் இசைக்கு …
நட்பே உயிர்ப்பென்று கொள்க!

அன்பு வணக்கம்!
———————————————————————–

காதலின் காதலை பகிர்ந்தும்
காதலை கலக்காத நட்பில்,
அண்ணன் தங்கை ராக்கி கட்டாத
நட்பில் இறுகிய மனதில்;

சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட
பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில்,
உதவிக்கு முன்னிலாவிட்டாலும்
ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்;

வாழ்வின் சுவரெல்லாம்
இதயத்தின் பலமாமாக பூசிய உறவில்,
உயிர் பதிக்கும் அன்பின்
நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே –

உலகின் வெற்றி கோபுரம் மீதேறி
நமக்கான நம் பெயரெழுதி
நம்மை நண்பர்களாக மட்டுமே
பதிவு செய்வோம்……………….வா!!!!!!!!!

அனைத்து உயிர் சுமந்த நட்புறவிற்கும்

இனிய தோழமை தின வாழ்த்துக்களும் அன்பும்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

தோ ஒரு அலைவரிசையிலல்ல
அன்பென்னும் ஒரு வரிசையில் மட்டுமே
ஏங்கி நிற்கிறது நம்மை போல்
சில் இதயங்கள் –
வணக்கத்திலாவது நம் நினைப்பை பரிமாற்ற!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்றோ பிரிந்த
ஏதோ ஒரு உறவின்
நெருக்கமாய் –
ஏங்கி திரியும் ஒரு மனதின் பிரதியாய்
நாமும் நம்மை
வணக்கத்தால் புதுப்பிப்போம்;

அன்பு வணக்கம்!
———————————————————————–

வ்வொரு உயிர்களுக்கும்
இடையே ஏதோ ஒரு நெருக்கம்
இருக்கத்தான் செய்கிறது.

அது ஏதேனும் ஒரு அருகாமையில் தன்னை
அடையாளம் கண்டுகொள்கிறது.

அங்ஙனம் நமக்கு நெருக்கமானவர்களை
அடையாளப் படுத்த இணையம் ஒரு வரமென்று சொல்லி
வணக்கத்துடன்… நன்றிகளுமாய்….. நிறைகிறேன்..
———————————————————————–

ருட்டென்று நாம் உணர்கிறோமாயினும்,
சிறு வெளிச்சத்திலிருந்து வந்த
பெரு வெளிச்சக் காலையில் –

வாழ்வும் சிறு தவறுகளிலிருந்து விலகி
…பெரு நன்மையாய் அமையட்டும்
அனைத்து உயிர்களுக்கும் –

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பிற்கு ஏங்கும் மனசு தான்;
அன்பிற்காக பொறாமை கொள்ளும்.

பொறாமை எல்லோருக்கும் இருக்கும் உணர்வு
எல்லோரும் வெளியே காட்டிக் கொள்வதில்லை.

முயன்றவரை பொறாமையிலா தன்மை வேண்டும்
பொறாமை அறுத்தல் என்பது
நம் வெற்றிகளோடு நில்லாமல்
பிறரையும் வெற்றிக் கொள்ளவைக்கும்.

ஒருவேளை தான் தோற்றாலும்;
பிறரின் வெற்றியில் மகிழும்.

பொறாமை வளர்ப்பது;
சமூகம் எரிப்பதற்கு சமம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரெல்லாம் சிரிப்பு சத்தம்…
அதில் உன் சிரிப்பு மட்டும்
எனை தொட்டதில்
சிரித்தது நீயுமென்றுணர்ந்தேன்;

அன்பு வணக்கம்!
———————————————————————–

வானத்திற்கு ஒரு கவிதையின் போர்வையிட்டு
உள்ளே மனிதத்திற்கான சப்தமெழுப்பி
அன்பெனும் மைகொண்டு
அகிலம் முழுதும் நம்மை
உறவென்று பதிந்து வைப்போம்; வா..
சகோதரா சகோதரி உறவு –

அன்பு வணக்கம்!
———————————————————————–

வானம் வசப்படாத பொழுதுகளில்
வசப்பட்ட அனுபவத்தின் கற்றை சிந்திப்பில்
மீண்டுமான முயற்சியில் விழித்துக் கொள்கிறது
கவிதை; வானம் கவிதைகளில் வசப்படுமென்று!

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

வேலைக்கு விடுமுறை
விடுமுறை இல்லாத நிறைய வேலைகள்
எழுத்தில் பொதிந்துள்ளதால்
என்றுமில்லை விடுமுறை;

எனினும் நலமோடு அன்பு வணக்கம்!
———————————————————————–

லகின் எந்த புள்ளியில் இருந்தாலும்
நேரங்கள் மாறுகிறது
நம் அன்பு மாறுவதேயில்லை’ என்ற
ஒற்றை புள்ளியில் தமிழால் இணைந்தோம்;

இனிய மாலை வணக்கம்!

———————————————————————–

சிரிப்பில் கண்ணீரில் கோப கனலில் வெறுமையில்
தோல்வியில்
ஆற்றாமையில் உதிரும் நாளாக இன்றி
சிரிப்பில் மலரும் வாழ்க்கையாய்
துவங்கட்டும் இந்நாளும்; எல்லாம் உயிர்க்கும்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

சிரிப்பில்
கண்ணீரில்
கோப கனலில்
வெறுமையில்
தோல்வியில்
ஆற்றாமையில் உதிரும் நாளாக இன்றி
சிரிப்பில் மலரும் வாழ்க்கையாய்
துவங்கட்டும் இந்நாளும்; எல்லாம் உயிர்க்கும்!

அன்பு வணக்கம்
———————————————————————–

பூக்கும் மலருக்குப் பின் செடியும்
செடிக்குப் பின் வேரும் போல
இந்த கவிதைக்குப் பின் இருக்கும்
அன்பிற்கு வணக்கமும்!
———————————————————————–

லக துயர் மறந்து;
தனக்கான கனவுகளோடு விடை கொள்வோம்;
நாளைய விடியலுக்காய்; உறங்கி விழிப்போம்!

இனிய இரவு வணக்கம்
———————————————————————–

ணினி கண்களை குருடாக்கியும் ஓயாத
எழுத்தார்வத்திற்கு இடையே வந்த கடமை
மறுக்க முடியா இடைவெளி என்பதால் –

இப்போதே வணக்கம் சொல்ல இயன்றது
இப்போதே காண முடிந்ததால்!

அன்பு வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்!
———————————————————————–

சிறு உளிகொண்டு
செதுக்கும் சிற்பம் போல்

அன்பெனும் பெரும் வேதத்தை
வார்த்தைகளென்னும் –
உளியும் செதுக்குகிறது;

அதிலொன்றை
அன்பு
வணக்கமென்றுக் கொள்வோம்!
———————————————————————–

யிர்சொட்டும் உறவுகள்
வணக்கத்தில் நட்பூர
வெறும் வணக்கமென்று சொல்லாமல்
நட்பாகவே கரைகின்றேன்;

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

நேரம் கிடைக்கையில்
என் மனம் போர்த்தி கொள்கிறது
இந்த இணையம்..

தமிழாய்..
நட்பாய்..

கரைதலில்
மிட்சப் படாத நேரத்தில்
தொக்கி நிற்கிறது சில எழுதிப் பதிந்திடாத
கவிதைகளும் படைப்புக்களும்..

நேரம் அமைகையில் கண்டிப்பாக வருவேன்
அன்பு வணக்கம்!
———————————————————————–

முறியாத சோம்பலை உடைத்தெறிந்து விட்டு,
விண்ணை எட்டும் நம்பிக்கை பலமேற்றி,
சாதிக்கும் முயற்சிகளை பார்வையில் இருத்தி,
உலகவலம் வரும் ‘இணைய உறவுகளுக்கு

இனிய காலை வணக்கம்!
———————————————————————–

ன்பிற்கா பஞ்சம்;
அழைத்தால் பழகுவதிலே மனசு துஞ்சும்.

பேச பேச தமிழ் கொஞ்சும்,
இருப்பினும்; நேரம் கருதியே உடன்பட அஞ்சும்!!
தமிழாய் கவிதைகளாய்.. படைப்புக்களினூடே நிறைய பேசுவோம்

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பில் கலந்த தமிழ்;
ஆண்ட மொழியை ஆட்கொள்ளும் வேகம்.
உட்புகும் நெருப்பிற்கு கூட – சிரிப்பு
நிறம் போர்த்திவிட்டதில்; இனிக்கிறது போல்
எதற்கோ ஏங்கி எரியும் தணல்; தமிழென!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பு; மொழியெனில்,
என் தாய்மொழி
அதுவென்று கொள்க!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பின் இதயத்தால் கட்டுண்டு போவோம்
அன்பினால் மனிதம் நிலைக்க செய்வோம்
அன்பிற்காய் உலகை தமிழ் கொண்டு வெல்வோம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

கேட்டார்க்கு
கேட்டதை கொடுப்போம்
முகநூலை உறவு
பாலமாய் அமைப்போம்
உறவில் அன்பை வளர்ப்போம்…
அன்பில்… …சகோதரத்துவம்
மலர்விப்போம்;

அந்த சகோதரத்துவத்தில்;
இங்கேனும் ஒற்றுமை
ஓங்கி
தமிழர்களாய் இணைவதில்;
ஒரு இனத்தின் பண்பை புதுப்பிப்போம்!

புதுமையில் பொலிந்த நம் பண்பிற்கு
உலகம் –
மீண்டும்
தமிழர்
என்றே பெயர் வைக்கட்டும்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | Tagged , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்