நீயும் நீயும் நானாவேன்..

1
கிழித்துப்போட்ட
காகிதங்களைப் போல கிடக்கிறது
உனக்காக காத்திருந்த மனசு;

அள்ளி தீயிலிட நினைக்கிறேன்
நீயில்லா தனிமைதனில்…
——————————————–

2
நீ நிலவிற்கீடு
ஒரு படி அதற்கும் மேல்..

எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய்
நானந்த ஒளியின்
ஏதேனுமொரு மூலையில் நின்று
உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்..
——————————————–

3
உயிரைவிட
எதைப் பெரிதாகச்
சொல்வதென்று புரியவில்லை;

உன்னைவிட எனலாமா..?!!
——————————————–

4
மழையின்று சோவெனப்
பெய்யுமென்றுச் சொன்னால்
ஒரு விவசாயிக்கு மனசெல்லாம் பல்லாய்
சிரிப்பு வரும்;

எனக்கும் நீ இன்று
வருவாயென்று நினைக்கையில்
நினைக்க நினைக்க ஆனந்தம்..
——————————————–

5
இந்தப் பிரபஞ்சம்
காற்றால் நிறைந்திருப்பதைப் போலத்தான்
நானும் உன்னால் நிறைந்திருக்கிறேன்..

என்னுலகம்
உன்னிலிருந்து துவங்கி
உன்னோடே முடிகிறது..
——————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்மையின் வெளிச்சமேந்து..

58FF5231-2CB3-4F31-BFED-2E041CB1E8D6

உயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே..

வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே சரிதவறை நட்புறவோடு பகிர்ந்துகொள்வோம். யார் மனதும் யாராலும் காயப்பட்டிட வேண்டாமென்பதே பண்பெனப் பழகி உயர்வோம்.

புரட்சியொன்றை தேடியலையும் மண்ணாக நம் நிலத்தை மாற்றிக்கொண்டும் நம்முள் ஏனைய அதிகாரங்களை திணித்துக்கொண்டும் வருகின்றனர். எம்மக்களோ அவர்களுக்கு இயற்கை நல்லுறவை தரட்டும்.

என்றாலும் இன்றைய சூழலில் எதிர்த்து போராட அல்ல தடுத்து நிற்கவேனும் ஒற்றுமை எனும் முழு பலத்தோடு நாமிருத்தல் வேண்டும்.

நமை சுற்றியுள்ள மக்கள் பதைபதைத்தத்துள்ளனர். அரசு முறையாக செயலாற்றுவதில்லை அலுவல்கள் அதிகாரிகள் எல்லோருமே முழு நன்னடத்தையோடு செயல்படவில்லை, ஊடகங்கள் மருந்து படிப்பு ஆன்மிகம் என அத்தனையுமே ஏறயிறங்க வரும் விலைக்கு விற்கப்படும் வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒருசிலர் முகம் தெரியாத பலருக்காய் உழைத்தும் உயிர் கொடுத்தும் கொண்டுள்ளனர். அவர்களை போற்றி மதித்து நாமும் முன்னிற்க முயல்வோம். அவர்களைத் தாண்டித்தான் சுயநலப் பேய்களின் நமை துரத்தி துரத்தி சூரையாடிக்கொண்டுள்ளன.

இடையே இங்குமங்குமாய் ஓடித்திரியும் சிற்றுயிர்களைப் போல நாம் நமக்கான காட்டைத் தொலைத்துவிட்டு கூடற்றவர்களைப்போல பயத்ததோடு ஓடிக் கொண்டுள்ளோம்.

எனினும் நம்பிக்கையை வெல்லுஞ் சக்தியும் நம்பிக்கை ஒன்றாகவே இருக்கும். எனவே ஒட்டுமொத்தமாய் நம்புவோம் எல்லாம் மாறும் எல்லாம் நன்மைக்கே என்று. உறுதியோடு உண்மை வெளிப்பட’ வெல்ல’ உண்மை வேரூன்றிட எழு எம் மக்களே..

உண்மைக்கு நேர்க்கோட்டில் வருவது புரட்சியாயினும் சரி போராயினும் சரி அது நம் அமைதிக்கானதாய் இருக்க நடைபோடு.. நம் நடை நமக்கொரு நல்ல நாட்டை தரட்டும்!! நல்ல தலைவர்களை தரட்டும்!!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதலால் காதல் செய்வீர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ?
பெண்களின் தூரம் நிற்கும்
வேதனையை அறிந்ததுண்டா ?
பெண்ணின் பிரசவ நாட்களை
அருகில் சென்றுக் கண்டீரா ?
பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

ண்’ அப்பனென்றால் வலிக்கிறது
ஆண்’ பிள்ளை என்றால் தவிக்கிறது
ஆண் அண்ணனோ தம்பியோ யெனில்
மனது சுமக்கிறது,
கணவனென்றால் இடைவெளி இருக்கலாமா?
ஆணென்றோ பெண்ணென்றோ சபிக்கலாமா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

ந்து வயது பெண்ணை காமத்திற்கு
தெரியவில்லை,
அடுத்தவர் மனைவியை காமத்திற்கு
தெரியவில்லை,
ஆழிசூழ் உலகே காமத்தை கடந்து
காதலிப்பாயா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

டிக்கவும் எரிக்கவும்
சாதியால் முடிகிறது,
அன்பையோ நட்பையோ சாதியே பிரிக்கிறது,
அன்னமோ தண்ணியோ சாதியில் தெரிகிறதா ?
ஒரு சொட்டு ரத்தமேனும்
சாதியால் சுடுகிறதா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

லக்கு தெரியவில்லை
சுயனலமொன்றே எழுகிறதா?
இயக்கமோ இலக்கியமோ
சுயனலத்திற்கென்றே அரும்புகிறதா?
இன்சொல் வன்சொல் எங்குமே
நான் நான் நானா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

யம் நெஞ்சை பிளக்கிறதா ?
ஆசை நெஞ்சை அடைக்கிறதா ?
பொறாமைத் தீ தலைமேல் ஏறி சிரிக்கிறதா ?
கோபம் காண்பவரையெல்லாம்
வதைக்கிறதா ? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..

காதலொரு தீ
நீதி விளக்கேற்றும் தீ
தீண்டாமை பேதமொழித்து
ஞான விளக்கேற்றும் தீ,
மேல்கீழ் எரித்து சமநிலை பயக்கும் தீ
மொத்தமாய் நமை விழுங்கும் பேராழி
அனைத்தையும் விழிங்கிகொண்டு அன்பாக மட்டுமே
வெளிப்படும் பிம்பம்
மனதின் இனியமொழி காதல்;

எனவே காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர், அன்பு அது ஆதலால்
காதல் செய்வீர்..
காதல் செய்வீர்..
————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மாக்கள் வாழ்க..

உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து..

உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி..

குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ?

இது அவள் தந்த வீனை, அவளழகை பாட, அவளிசையை மீட்ட, அவளுக்கான சப்தமாய் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும் அம்மா அம்மாவென்று..

வேர் ஊன்றியவளே, உன் பாதம் தான் எங்களுக்கு ஆலய கலசம்போல, உனது கர்ப்பப்பை தான் எங்கள் கோயில், நீ மட்டுமே என்றென்றும் எங்களுக்கு சாமி..

சாமிக்கென்ன வாழ்த்து; வெறும் வணங்கிக் கொள்கிறோம் உன் பிள்ளைகள் வாழ நீயிருந்து வாழ்த்திக்கொண்டேயிரு முடிவற்றவளாய்..

ஆதியும் மூலமும் வேரும் நீதானே, உனது விரல்பிடித்தே பிடித்தே மகிழ்வோடு தீரட்டும் இவ்வாழ்வு, இந்நாள் போல எந்நாளும் உனக்கே முதல் வணக்கம் உனதே முதலன்பும்..

வாழ்க அம்மா.. வாழிய அம்மாக்கள்.. அன்னையருக்கு அரும்புகளின் பெருவாழ்த்து!!

வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

வளில்லா தனிமை
நெருப்பைப் போல சுடுகிறது
அவளைக் காணாத கண்களிரண்டும்
உலகைக் கண்டு சபிக்கிறது..

இரண்டு பாடல்கள் போதுமெனை
உயிரோடு கொல்கிறது..
ஒரு தனியிரவு வந்து வந்து
தினம் தின்றுத் தீர்க்கிறது..

 

பிரிவைவிட பெரிதில்லை யேதும்
அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது,
வரமான காதலையும் மண்ணில்
பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது..

ச்சீ.. என்ன சமூகமிது (?)
யாருக்குத் தெரியுமென் வலியை, உள்ளே தவிக்கிறது
யாரறிவார் அதை’ மெல்ல மெல்ல
என் மரணமும் உள்ளே நிகழ்கிறது..

எவருக்கு புரியுமெங்கள் தாயன்பும்
அவளுயிர் சினேகமும்..?
எவருக்குப் புரியுமென் கண்ணீரும்
காத்திருப்பும்..?

எம் சிரிப்பைப் பற்றி யாருக்கென்ன கவலை??
எல்லோருக்கும் சாதி வேண்டும்..
மதம் வேண்டும்..
எனக்கு வேறொன்றும் வேண்டாம் அவள் போதும்..

வயதாகி விட்டால் அன்பு மறக்குமா?
வயதாகிவிட்டால் நினைவு ஒழியுமா?
வயதாகிவிட்டால் அவள்தான் எனை மறந்து
நிம்மதியாய் வாழ்வாளா?

பாழும் சமூகமே..
அவளுக்கு வலித்தால்
எனக்கு வலிக்குமென உனக்கெப்படித் தெரியும்???

உனக்குத் தெரியுமா ?
அவளென்றால் அத்தனை இனிப்பு
அவளென்றால் அத்தனை ஆசை
அவளென்றால் அத்தனை அன்பு
அவளுண்டென்றால் மட்டுமே’ இந்த
ஒற்றை யுயிரும் உண்டு..

நாங்கள் எங்கோ உலகின் வெவ்வேறு
மூலையிலிருந்தால்கூட பிரிந்திருப்பதில்லை,
உடலை தனித்துவிட்டதால்
பிரித்துவிட்டதாய் அர்த்தமா உனக்கு ?

வா வந்துயெனை மெல்ல
உயிர்க் கொல்லென் தாய்மண்ணே,
உயிர் எங்கிருந்து பிரிகிறதெனப் பார்
பார்த்து பார்த்து பிறகு நன்கு அழு..

உனக்கென்ன நீ யொரு வரம்பு
நீயொரு பிடிவாதம்
நீயொரு ஏமாற்றம்
நீயொரு துரோகி,

ஆம் எனது கலாச்சார உலகே
உனக்கென்ன; யார் மடிந்தாலென்ன (?) பிரிந்தாலென்ன (?)
இதோ எனது சாபம் உனக்கு –
நீயுமினி காதலித்துப் போ..

காதலென்ன தீதா?
ஒருமுறை காதலி
பிறகு பிரிந்து போ
உயிரோடு சாகும் வலி’ என்னவென்று புரியுமுனக்கு

அழுகையை மறைத்துக்கொண்டு சிரிக்கும் வலி
என்னவென்று அறிவாய் நீ
உணவோடு உண்ணும் அவளுடைய பிரிவுமெப்படி
நஞ்சாகுமென அறிவாய்’ போ காதலுறு..

காதலின் வெப்பந்தனில் வேகு
காதலால் வானம் உடை
பெய்யுமொரு புது மழையில்
காதலோடு நனை,

அதன் ஈரத்தில் பிறக்கட்டும் நம்
எவருக்குமான சமத்துவம்,
அதன் மழைச்சாரலில் ஊறட்டும்
எல்லா உயிர்க்குமான இரக்கமும், அன்பின் மகா கருணையும்..
———————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்