28. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை –
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;

காதல் –
ஆறாம் பூதம்.

ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் –
அன்றே இல்லை!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

27. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

துசரி –
எந்த புள்ளியில்
நாம் காதலிக்கத் தயாரானோம்?

நினைவில்லையென்றாலும்
பரவாயில்லை –
இந்த புள்ளியை நினைவில்
கொள்;

இந்த புள்ளி –
ஒன்று நம் வாழ்வு
அல்லது –
மரணம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

26. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நில் –
கவனித்திருப்பாய்

இல்லையென்று சொன்னால்
நான் ஏற்கப் போவதில்லை;

ஆமென்று சொல்வதிலும்
அடங்கப் போவதில்லை;

வா..
அதோ நமக்காக
வானமேறிக் காத்திருக்கும்
அந்த கற்பனை தேர் ஏறி –
உலகம் முழுக்கச் சொல்வோம்
நாம் காதலர்களென்று!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

25. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் –
மலர் கூந்தலின்
வாசமும்
அழகும்
சண்டையிட்டுக் கொண்டன –
யாரால் உனக்குப்
பெருமை என்று;

உன்னால் –
அவைகளுக்குப் பெருமையென்று
சொல்லவே
இக்கவிதை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் –
காது தோடு தொட்டு
கன்னம் தொட்டு
கழுத்து தொட்டு
உள் புகும் காற்றை
சபிக்கிறேன்;
ஏ காற்றே, இனி
நானாக இருக்கக் கடவாய்!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்