WORDPRESS -ன் சிறந்த தளமெது?

வணக்கம் அன்பிற்கினியோரே..

WORDPRESS-ல் எது மிகச் சிறந்த (தமிழ்) வலைதளமென கருதுகிறீர்கள்? நேரம் கிடைப்பின் காரணமும் தெரியப் படுத்துங்கள். கிடைக்காதவர்கள் வலைதளத்தின் பெயரை மட்டும் அறிவிக்கலாம். புதிதாக வருவோருக்கு நம் கருத்துக் கணிப்பு நன்மையாகவும். வலைதளத்திற்கென உழைத்து தமிழுக்கும் தமிழர்க்கும் சிறப்பு சேர்க்க முற்படுவோரை கெளரவிப்பதாகவும் இக்கருத்துக் கணிப்புகள் அமையட்டும்.

குறிப்பு: – சரியில்லையென யாரையேனும் நினைத்தால் தெரியப் படுத்தாதீர்கள். போகட்டும். நாம் உலகின் நன்மைகளை மட்டுமே நம் கணக்கில் எடுத்துக் கொள்வோம்!

மிக்க நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | 17 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 26

ருபத்தி நான்கு மணி நேரத்தில்
எங்கு திரும்பினாலும் –
என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..!

காற்றின் சிறகு பிடித்து
உயிர் வரை சென்று பார்க்கையில் –
இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..!

இரவில் உறையும் உணர்ச்சிகளில்
உயிர் கொள்ளும் வழியிலும் –
எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..!

இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின்
அனலாய் கொல்லுமென் தனிமை போரிலும் –
மீண்டும் மீண்டுமாய் ஜெயிப்பவல் நீயடி..!

காலம் கொன்று குவிக்கும் வறுமையின்
சாட்டையடிக்கு-
கடிதத்தில் மருந்திட்ட அன்புக் கவிதையும் நீயடி..!

உன் முதல் கடிதத்திலேயே –
“இப்படிக்கு உன்னவள்” என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!

என்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!

உனக்கும் எனக்குமாய் உள்ளவைகளில்
இல்லாதது – இடைவெளி மட்டுமென
பிரிவிலும் புரியவைத்தவள் நீயடி..!

இரவில் பறக்கும் விமானம் பார்த்து
என்றிந்த விமானம் எனக்காக பறக்குமென
நான் நினைக்கையில் –

வெளியே ஓடிவந்து நீ வானம் பார்த்து
இந்த விமானத்திலாவது நான் – வந்துவிட
மாட்டேனா என – வருடங்களை
நாட்கள் போல் கழிப்பவள் நீயடி!

வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
தொலைபேசியில் – ஒரேயொரு “ஹலோ” சொல்லி
ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!

ஒன்றுமே பேச இயலாத பொழுதிலும்
ஏதேனும் பேசி – பணம் தொலைந்து –
உயிர் தொலைந்தாவது –

உன்னை ஒரு முறையேனும் தொட்டு உயிர்த்திட
கெஞ்சியழுபவள் நீயடி!

பிறந்த பயனிற்கு இறைவன் கொடுத்திட்ட
என் பெரிய்ய்ய்ய.. பரிசு நீயடி;

இறக்கும் வரைக்குமுன் எஞ்சிய வாழ்க்கையை
விடுமுறையில் மட்டும் வந்து தீர்க்க –
நீயும் நானும் செய்த –

பெரிய்ய்ய்ய்ய்ய… பாவம் நானடி!!
————————————————
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 25

நீ
நான்
என்பதில் –
அதிக
வேற்றுமையில்லை;
பெண்
ஆண்
என்பதைத் தவிர!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 24

பெரிய பெரிய
அதிசயங்கள் –
இப்படித் தான் நிகழ்கின்றன;

நீயும் நானும்
நேருக்கு நேர் சந்தித்தோம்
கனவில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 23

லகின் –
ஏதோ ஒரு மூலையில்
உனை விட்டுப் பிரிந்து
எங்கோ –
கடை கோடி தூரத்தில் அலைகையில்
மனம் –
ஏதோ ஒரு பெண்ணின் பார்வையையாவது
திருடித் தான் கொள்கிறது;
ஆனால், உனக்கான இடம் மட்டும்
இதயத்திலிருந்து உயிர் வரை
சற்றும் குறையாமல்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக