பிரிவுக்குப் பின் – 22

ன்று சம்பளம்!
வாங்கிய உடனே உனக்கனுப்பினேன்
அம்மாவிற்கு அனுப்பினேன்
அக்கா வீட்டிற்கும் –
தங்கச்சி சீதன பணமும் அனுப்பினேன்
அண்ணன் குழந்தைகளுக்கு ஏதேதோ
கேட்டிருந்தார் வாங்கியனுப்பினேன்
எல்லாம் முடித்துவிட்டு வந்து
படுக்கையில் வீழ்கையில் –
அப்பாடா என்றொரு நிம்மதி;

அவைகளை எல்லாம் தாண்டி –

தனிமை இரவின் தவிப்பில் –
தலையணை நனைத்த ஒரு சொட்டுக் கண்ணீரில்
உனை விட்டுப் –
பிரிந்திருப்பதும் தெரியாமலில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

கடைபிடி; முதல் படி! (கோபம்)

நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள் வந்து நிற்பதுமா வாழ்க்கை?

படுத்த உடன் தூக்கம் வருவது வாழ்க்கை. பசித்து உணவு உட்கொள்வது வாழ்க்கை. சொந்தம் கூடி மகிழ்ந்ததில் மனது நிறைந்து சிரித்திருப்பது வாழ்க்கை. கண்மூடி அமர்கையில் உள்ளம் கோவிலாகி – உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்த பக்தியில் நம் நன்னடத்தை தெய்வமாகத் தெரிவது வாழ்க்கை.

வாழ்வின் விசாலமான தெருக்களின் வெளிச்சத்தை இருட்டாக்கி விடுவதே நம் கோபமென்னும் ஒற்றைப் பல் அரக்கன் தான். நிறைய இடங்களில் நாம் தன்னை முன்னிலை படுத்த முனைவதே முந்தி வரும் கோபத்திற்கான காரணமெனக் கொள்வோம்.

தெளிவாக சிந்திப்பதிலும் உண்மையை விளங்கிக் கொள்வதிலும் கோபம் கடை தூரம் விலகிவிடுகிறது. உடன் பிறந்தால் தான் உறவு; பழக்கமுற்றால் தான் நட்பென்றில்லை, அசைவுறும் அத்தனை உயிர்களுமே யாரிடமோ அன்பு கொண்டவை தான். எதையோ நேசிக்கத் தெரிந்தவை தான். அன்பு வைப்பின் ஒரு மரம் கூட நமக்காக அசைவது புரியப் பட்டுவிடும் என்பதென் கூற்று.

ஆக, அன்பு கொள்ளுதலில்; விட்டுக் கொடுக்க மனம் விசாலப் பட்டுவிடுகிறது. விட்டுக் கொடுத்தலில் கோபம் அர்த்தமற்றுப் போகிறது. கோபமில்லாதிருத்தலில் நெருக்கமுன்டாகிறது. நெருக்கமான அன்பில்; வெளிச்சம் பளிச்சென பரவுவது கூடி வாழும் சிரிப்பு சப்தத்தில் கேட்கிறதென்பதால், வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய முதல்படி “எங்கு கோபம் கொள்வதென தெளிவு கொள்வதே” யென்று உறுதிக் கொள்வோம்.

நான் தெருவாசலில் நின்றிருக்கிறேன். மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஒருவர் தெருவில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் வண்டியை விட்டுவிட சாக்கடை நீர் சொலீரென என் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. கோபத்தில் மிதிவண்டி ஓட்டியவனை அசிங்கமாக திட்டிவிட, அவன் எங்கம்மாவை பத்தியாடா திட்டினன்னு இறங்கி வந்து மூக்கில் ரத்தம் வருவது போல ஒரு குத்து விடுகிறான். என் மகன் ஓடிவந்து எங்கப்பாவையாடா அடிச்சேன்னு அவன் கைய கால ஒடைக்க, அவுங்க வீட்டு ஆளுங்க மொத்தமா ஒரு ஆட்டோவுல வந்து எங்களை பின்னி பெடலெடுக்க, காவல் நிலையத்துக்கு புகார் போயி ரெண்டு குடும்பத்து ஆம்பளைங்களையும் ஒரு வாரம் காவல்ல வைக்க, திரும்பி வரும் போது ஊரு கேவலமா பேசி சிரிக்க, கோபத்தில் கொதித்தெழுந்த முகம் சாக்கடை நீரினை விட நாறாமலில்லை.
——————————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 4 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 21

கோடி நட்சத்திரங்களில்
உயிர் பெற்றாவது
ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…?

உள்ளிழுக்கும் –
உயிர்வரை சுவாசத்தில்
சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…?

பொங்கும் கடலெங்கும் – அலை
முட்டும் கரையிலாவது –
உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..?
உயிர் குத்தி விழியசையும்
காட்சிகளிலெங்கிலும் –
நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..?

உயிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது –
நீயாக மாட்டாயா..?

உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து –
உயிர் மீட்டுத் தருவாயா..?

சுடர் மின்னும் தீக்
காட்டில் –
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
ஒரு வானம்; ஒரு பூமி;
ஒரு காற்று; ஒரு தண்ணீர்;
ஒரு உறக்கம்; ஒரு பசி;
இந்த உலகம்.. இந்த வாழ்க்கை-
எல்லாம் உன்முன் – தோற்கிறதே..?

ஒரு தொடுதல் -ஒரு பார்வை;
ஒரு சிரிப்பு – ஒரு சப்தம்;
உயிர் மிஞ்சும் விலை பேசி
குவைத்தின் பணம் தான் –
கொள்ளை கொள்கிறதே..?

இரண்டாய் – மூன்றாய் வருடங்களை
தலை மேல் சுமந்து –
உனக்கும் எனக்குமாய் – இதயம்
அறுகிறதே..?

கடுங்குளிர் – கடும் வெயில்
இங்கே சுடவில்லை;
என்னை தொடவில்லை;

மீளா உன் பிரிவே –
வலியென வலியென.. என்னை வதைக்கிறதே!
————————————————
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 20

இன்று நம் குழந்தைக்கு
பிறந்த நாள்;
ஏதேனும் நல்ல பரிசாக
வாங்கிக் கோடு –
தயவு செய்து
இன்றொரு நாலாவது
‘அப்பா இன்று வந்துவிடுவேனென்று’ சொல்லி
ஏமாற்றாதே!
——————————————————-

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 19

உனக்கும் எனக்குமிடையே
நான்காயிரம் மயில்கள் தூரத்தில்
நகர்கிறது வாழ்க்கை;
நம் அக்கம்பக்கத்தார்களுக்குத் தான்
நான் ஃபாரினிலிருந்து –
செண்டு வாங்கிவரவில்லை யெனக்
கவலை!
————————————————————

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக