வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 14

14. வரதட்சிணை குறித்து தங்கள் கருத்துகள் என்ன?

வரதட்சணை ஒரு குற்றமல்ல. ஜாதி மதமெல்லாம் எப்படி நமக்குள் நன்மையைப் பயக்கும் என்று ஆரம்பித்துப் பின் மனிதனால் மனிதனைக் கூறுபோட்டுக் கொள்ள ஜாதியும் மதமும் தீராப் பிணியாகிப் போனதோ; அப்படி வரதட்சைனை என்று கேட்டாலே பெண்களைப் பெற்றெடுத்த வயிறுகளிலெல்லாம் விஷம் வார்க்கும் செயலாக வரதட்சனை கொடுத்தல் மாறிப் போனது நிச்சயம் சரிசெய்துக்கொள்ளவேண்டிய ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கிறது..

முதலில் இதையெல்லாம் ஒரு சம்பிராதயமாக; திருமணத்தின் கட்டாயப் பொறுப்புகளுள் ஒன்றாக உள்ளதை மாற்றல் வேண்டும். தன் மகளை கனவன் வீட்டிற்கு அனுப்பும் காலத்தில் அவளை பெருமதிப்பாக அனுப்புவதாக மகிழ்ந்து போகுமிடத்தில் உயர்வாக வாழ்வாள் மகள் என்று நம்பியப் பெற்றோர்கள் தன்னால் இயன்றதைச் செய்தனுப்பியது அக்காலத்தின் திருமண முறைகளுள் ஒன்றாக இருந்தது. இப்போது, பெண்களுள் அதிகமானோர் படித்தும் பட்டங்கள் பலதை வென்றும் விண்வெளியிலிருந்து எந்திர ஆய்வு வரை படையெடுத்தும் நடைபோடத் துவங்கியப் பொழுதில், படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு மூன்று முடுச்சிகளுள் அடங்கிப் போகும் நிலையும் சிலப் பெண்களுக்கு வாய்க்கமலில்லை.

அதற்கு ஆண் பெண் என இருவரும் எவ்விதத்திலும் குறையாத காரணமாக இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளை அகற்றி அவர்களை அவர்களின் நிலையில் வாழவிட தனை சரிசெய்துக்கொள்ளும் பல பொறுப்புகள் ஆண்களிடத்தில் அறியப்படாமலேயுண்டு.

ஆண்டாண்டுக் காலமாக கட்டளையிட்டே வாழ்ந்துவிட்ட ஒரு வர்க்கத்தின் நீட்சியாகவே பெண்களின் தற்போதைய பல மாறுதல்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களும் நடந்துவருகிறது. அவைகள் மாறி சரிநிகர் பொதுநிலை அமைய இருபாலரிடத்திலும் நட்பு வலுத்து கண்ணியம் பெருகி காதல் ஊற’ காதல் புரிய’ காதல் பெருக’ வாழ்க்கை அவரவர்களுக்கானதாய் அவரவருக்கு சாசுவதப் படலாம். அதற்குப் பின் வரதட்சணை கொடுத்தல் வாங்கலெல்லாம் அவசியமற்றும் போகலாம்..

பொதுவாக தற்போதைய நிலைப்படி உடனடியாக செய்யவேண்டுவது வரதட்சனையை கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும். சட்டப்படியே அது குற்றம் என்று ஆனபிறகும் வெற்றிலைக்கு கீழ்வைத்து பொருள் மாற்றும் நிகழ்வு போல இது இன்றும் மிக நாகரீகமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் முரணாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு அதலாம் அந்தக் காலமுங்க இப்போ எங்கங்க வரதட்சணை கொடுமையெல்லாம்னு பேசுறாங்க. அவர்களுக்குத் தெரியாமல் ஆங்காங்கே எரியும் குடும்பங்கள் எரிந்தும் வாழ்க்கை விடியாப் பெண்கள் முதிர்க்கன்னிகளாகத் திரிந்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்நிலை முழுமையாய் மாறவேண்டும்.

தன் மகளுக்கு தான் விரும்பிச் செய்யும் எதையும் தவிர இதைக் கொடுங்கள் இதைப் போடுங்கள் என்று நாக்கூசாமல் கேட்போர் வீட்டில் திருமணத்தையே நிச்சயிக்கக் கூடாது. பத்து வீடு அங்ஙனம் மறுக்கத் துவங்கினாள் அது பற்றியதொரு பெரிய விழிப்பு பொதுவில் ஏற்பட வாய்ப்புண்டு.

நல்ல குணமும், போதிய அழகும், பொருந்தும் பண்பும், தீரா அன்பையும் தவிர வேறெந்த பொருளோ நகையோ பணமோ சொத்தோ ஒரு சிறு புன்னகையைக் கூட மனதால் நகைக்கத் தராது. ஒருவரின் உழைப்பு இன்னொருவரை தாங்குமென்றால் அது உழைத்தவரின் சம்மதத்தோடு மட்டுமே தாங்குவதாக இருத்தல் நலம். அல்லாது அது பாவம், பெருங்குற்றம். குற்றத்தைத் தவிர்ப்போம். நம் குலப் பெண்களை நம்மிடமிருந்து முதலில் காப்போம்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 15

15. படித்த பெண்களும் இன்று இல்வாழ்க்கையில் முரணாக நடந்து கொண்டு விவாகரத்து கோருகிறார்களே… கல்வியின் நிலை குறித்து தங்கள் பார்வை என்ன?

சோற்றில் உப்பிட்டுவிட்டு பின் கரிப்பதாகக் குற்றம் சொன்னால்; அது போட்டவரின் பழியன்றி வேறென்ன? எதையும் திருந்தச் செய்யும் பழக்கமொழிந்துப் போனோம். அடிப்படையில் இருந்து வரவேண்டிய ஒழுக்கங்களை எல்லாம் பாதியாக வைத்துக் கொண்டு மேலுக்கு அடிக்கும் வெள்ளையை மட்டும் பளிச்சென்று அடித்த வீட்டைப் போன்றே நமது எண்ணற்ற செயல்பாடுகள் இன்றுண்டு. நல்ல திறமையாக வளர்க்கும் குழந்தைகளை அறிவோடும் தெளிவோடும் வளர்க்க அத்தனை நாம் முழுமையான பிரயத்தனம் செய்வதில்லை. இதைக் கத்துக்கோ அதை கத்துக்கோ முதலா இரு வாழ்க்கையை ஜெயி அளவா சாப்பிடு வாக்கிங் போன்னு சொல்லும்போதே பண்பைக் கற்றுத் தரவும், அன்பைப் பகிர்ந்து பிள்ளைகளை ஈர்ப்போடு வளர்க்கவும் இன்று எத்தனைப் பெற்றோர்கள் நாம் நமது நேரத்தை குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலம் நன்னடத்தைகளோடு அமையவும் அக்கறைக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் ஒட்டுமொத்த பெற்றோரையும் குறை சொல்லவோ எல்லோருமே குற்றவாளி என்றோ கூற வரவில்லை. நமது வாழ்க்கை முறை அங்ஙனம் ஆகிப் போகிறது. நாம் தான் நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். நாம் தான் அவர்களுக்கு உலகத்தைக் காட்டுகிறோம். நாம் தான் அவர்களுக்கான அத்தனையையும் செய்கிறோம். இன்றையப் பிள்ளைகளும் சரி நமது வீடுகளும் சரி நாடும் சரி நம்மால் செய்யப்பட்டது. எனவே நமக்கான அத்தனை அநீதி கொடுமைகளுக்கும் நாமே பொறுப்பு என்பதையே முன்வைக்க எண்ணுகிறேன். எனவே நம் சமுதாயக் கேடுகளுக்கான நல்மாற்றத்தையும் நமது பிள்ளைகளின் வழியே, பின்னான நமது நடத்தையின் மூலமுமே நம்மால் சரிசெய்துக்கொள்ள முடியும்..

அதுபோல் விவாகரத்து ஒன்றும் தொட்டும் ஒட்டிக்கொள்ளும் தீது ஒன்றுமல்ல. அது ஒரு இருட்டின் கதவுகளைத் திறந்து புது வாழ்வின் வெளிச்சத்தைக் காட்டும் வழி. திருந்தாத ஜென்மங்கள் இருபாலரிடையேயும் நிறைய உண்டு. எனக்குத் தெரிந்து ஒரு தங்கையை அப்படி நயமாகப் பேசிக் கட்டிச் சென்ற ஒருவன் இன்று செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. திரும்பினால் குற்றம் நின்றால் குற்றம் எழுந்தால் குற்றமென அத்தனைக் குற்றம் சாற்றும் அவன் குடிக்காத நாளில்லை அவளை அடிக்காத நாளில்லை. இப்போது அவள் எங்களை யாரையுமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு அவன் மட்டும் போதுமென்று வாழ்கிறான். அவளின் நன்மைக்கென்று எண்ணி நாங்களும் அதை சம்மதிக்கிறோம். அவன் அவனின் குடும்பத்தொரு உறவுகளோடு இருக்கிறான். தங்கை மட்டுமொரு தனிக்காட்டில் எங்களின் வார்த்தைகளைச் சுமந்துக் கொண்டு பிரிவில் தவிக்கிறாள். எனக்குக் கோபம் அவன் மீதல்ல. அவனின் பின்னாலிருக்கும் நாம் கட்டிவைத்திருக்கும் அடிமைத்தன மூட்டை மீதுதான் எனக்குக் கோபம். அவன் சரியாக இருப்பதாகவும் அவளும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு ஆணுக்கு மத்தியில் அவனுக்குத் துணையாக இருக்கும் அவனின் அம்மா அக்காள் உறவுகள் எனும் பெண்களுக்கு மத்தியில் எது நாளிடறிக் கிடக்கிறது? நம் சமூகம் தானே? அந்த சமூகச் சாக்கடைமீது காரி உமிழ ஒரு ஆயுதம் அந்த அபலைப் பெண்ணிற்குத் தேவையிருக்கிறது. அதுபோன்ற பெண்களுக்கும் அப்படிசில் வேறு கோணத்தில் சிக்கித் தவிக்கும் ஆண்களுக்கும் ஒரு ஆயுதமாக இந்த விவாகரத்து இருப்பது ஏற்புடைய ஒன்றேயொழிய முழு மருப்பினைக் கொண்டதல்ல.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், உறவுகளை ஒரு வார்த்தைக்குள் முறித்துக் கொள்வதே பிரச்சனை. கத்தி மரம் வெட்டவெனில் அதையேடுத்து செடி கொடிகளை எல்லாம் சீவிப் போடும் சிறுவர்களைப் போல இந்த விவாகரத்தைப் பயன்படுத்துவது நாளைக்குப் பின் வேறொரு கொடூர நாகரிகத்தை வளர்த்துவிட வாய்ப்புள்ளது.

பிரச்சனைகளை அனுசரிக்கவும், பிரச்சனை குறித்து தெளிவுற சிந்திக்கவும், பிரச்சனை பிரச்சனை என்று உறவுகளை அறுத்துக் கொள்ளாதிருக்கவும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு ஆண் பெண் உறவுகளில் பல வேறுபாடுகள் கருத்துமாற்றங்கள் வரவேச் செய்யும் அதை ஸ்நேகத்தால் அணுகி ஒருவருக்கொருவர் வலிக்காமல் வாழ்க்கையை இருபாலருக்கும் இரு வீட்டாருக்கும் பிடித்தமானதாக அமைத்துக்கொள்ளவும் நாம் தான் நம் பிள்ளைகளுக்கு சுதந்திர மனப்பான்மையோடு வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்தல் குறித்து சொல்லித்தரவேண்டும்.

அதிலும் காய்ந்த மண்ணில் வந்துவிழும் நீரை மண் வெகுவேகமாக உரிந்துக்கொள்வதைப் போல, அடங்கியே இருந்துப் பழக்கப்பட்டப் பெண்கள், ஒடுங்கியேக் கிடந்து வலித்துப் போன மனங்கள் இன்று தனித்துப் பறக்கப் பழகிக் கொண்டுள்ளன. எங்கும் சிறகடிக்கத் தக்கவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளன. ஏய் என்றால் ஏனென்று சிந்திப்பதற்கும் முன் ஏய்ய்ய்.. என்று வீரியத்தோடு கத்துவதையே சரி என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கு முதுகில் வாங்கிய அடிகள் ஏராளமாய் அவர்களுக்கு வலிக்கிறது. என்றாலும், இது ஒரு மரத்தை வெட்டி எதிர்ப்பக்கத்தில் சாய்ந்துக் கிடக்க அதையேடுத்து மீண்டும் மறுபக்கம் சைப்பதர்குச் சமமாகவே இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் எழுந்தேனும் நிர்கட்டுமே பிறகு யாருக்கு வலிக்கிறது என்று பார்பபோமென்றே பொது நியாயமொன்று உள்ளத்துள் எழுகிறது.

எனவே எதையும் அலசி சரிபார்த்து மிக எச்சரிக்கையாக இருந்தே நம் சமூகத்தை பட்டைதீட்டும் நிலையில் இருக்கும் நாம் யாரையும் கைகாட்டி நீ குற்றவாளி என்றுப் பெண்ணையோ அல்லது நீதானென்று ஆணையோகைகாட்டி குர்ரப்படுத்தும் சூழலில் இல்லை. நாமெல்லோருமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நமக்கான ஒரு ஒழுக்கத்தை ஒரு சமதர்மத்தை ஆண் பெண் சார்ந்த வாழ்க்கைக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் வேகுனாலாகும் என்பதால் இப்போதைக்கு உடனடி மருந்தாக நாம் அன்பு செய்வதன்றி விவாகரத்தைக் குறைக்கவோ குடும்பப் பிரச்சனைகளை ஒழிக்கவோ வேறு அதிக வழியில்லை. அன்பை ஒழுக்கத்தை நற்பண்புகளைத் தரக்கூடிய உண்மை நிலையை யொழித்து வேறு பெரிய ஆயுதங்களில்லை..

குழந்தைக்குச் சோறூட்டும் போதே தாயும் தகப்பனும் ஒரு நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களிடம் வரும் பிள்ளைகளை அவர்கள் தனது பிள்ளைகளைக் காக்கும் பெற்றோரைப் போலவும் வழிநடத்துமொரு கல்வி நம் பிள்ளைகளுக்கு வேண்டும். திறமைகளுக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் கதவுகளை பாதி பங்கிற்கு அடைத்துவிட்டு, அறிவுக்கு வழிகாட்டும் ஆசான்கள் பள்ளிக்கூடங்களில் மீதிப் பங்கிற்காய் வேண்டும். வெறும் ஆங்கிலம் பேசிவிட்டால் பிறமொழிகளைக் கற்றுக் கொண்டால் பாடவும் ஆடவும் தெரிந்துவிட்டால் வாழ்வின் பாதைகள் தெளிவுற புலப்பட்டுவிடுவதில்லை. நற்பண்புகளைக் கற்கவேண்டும். பிறர் மனம் வலிக்காது நடத்தல் உள்ளூர வேண்டும். எதுவாக வேண்டுமோ அதுவாகமுடியுமெனும் நம்பிக்கையை நாம் நம் வருங்காலத்திற்கு ஏற்படுத்தத் தக்கதொரு கல்வி வேண்டும். பாலினம் பற்றி காதல் பற்றி அன்பு பற்றி சமுதாயம் பற்றி ஆன்மிகம் பற்றியெல்லாம் அவர்கள் வளர்ந்துவரும் போதே அறிந்து புரியப் புரிய வளரவேண்டும். இங்ஙனம் ஒரு விதையை ஊன்றும் போதே உரத்தொடு ஊன்றுவதைப் போல ஒரு குழந்தையை வளர்க்கும் போதே முறையாக சரியாக வளர்த்தலின் பொருட்டு மட்டுமே இல்வாழ்க்கையின் முரண்களைக் களைந்து அவசியமற்ற விவாகரத்தினையும் ஆண் பெண் இருபாலரிடத்திருந்தும் முழுமையாக அகற்றிட முடியும், நல்லதொரு மாற்றத்தினை நம் சமூகத்துள் கல்வியைக் கொண்டும் நிகழ்த்திட முடியுமென்பது எனது நம்பிக்கை..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 16

16. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இன்று மக்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

ஊடகங்களுக்கும் நமக்குமிடையே ஆர்வமென்னும் ஆசையென்னும் ஆடம்பரமெனும் இயல்பிற்கு முழுதும் ஏற்புடையதாக இல்லாத கண்ணாடித் துண்டுகள் பல கொட்டிக் கிடக்கிறது. அந்தக் கண்ணாடிகளின் வழியே அவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள், நம்மைப் பார்த்ததாக எண்ணி எதையோ செய்கிறார்கள். நாமும் மீண்டும் அதே கண்ணாடிகளைப் பார்க்கிறோம், அது மீண்டும் நம்மையே அவர்களின் முகத்தோடு சேர்த்துக் காட்டுகிறது, நாமும் அதை நம் முகமேன்று நம்பி அதன்பின் போகிறோம். இப்படி நாமென்று நம்பி அவர்களும் அவர்களைக் கண்டுவிட்டு நம் முகத்தைக் கண்டதாக நாமும் இன்று இங்குமங்குமாய் நிறைய மாறிப் போய்க் கிடப்பதே ஊடகம் செய்த பெரிய புரட்சியின் பலன்.

உண்மையில் இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஏற்படுத்தியுள்ள முதல் பாதிப்பு நேரவிரயம். இரண்டாவது உணர்சிவயப்படல். மூன்றாவது ஒரேயடியாக கொதித்தடங்கி வீழ்தல். மீண்டும் நமை உசுப்ப இன்னொரு திரைப்படமோ தொலைக்காட்சியோ வசனமோ வரும்வரை முடங்கிக் கிடத்தல். குறிப்பாக காதலைக் கற்குமளவிற்கு வேறெதையும் எளிதாக கற்க இயலாதவர்களாக நமை மாற்றிக் கொண்டுவரும் அபாயம் இந்த இரண்டுத் திரைக்குள்ளும் பதுக்கப் படுகிறது.

லஞ்சத்தை எதிர்க்கச் சொல்லித் தருவது என்றாலும் திரைப்படம் வழியாகத் தான் சொல்லவேண்டும். நூறு புத்தகம் எழுதி சொன்னது போகாத இடத்தில் ஒரு பாட்டு சென்று அமர்ந்துக் கொள்ளும் அளவிற்கு திரைப்படங்களால் மோகித்துப் போயிருத்தல் அத்தனை நல்ல சூழலில்லை. எதைக் காணினும் கேட்பினும் படிப்பினும் செய்பவர்கள் நாமாக இருத்தல் வேண்டும். அதற்கு நம் வாழ்க்கையை நாம் முழுமையாக நமது பிறப்போடு சேர்ந்த உரிமையோடு வாழ்தல் அவசியமாக இருக்கிறது.

இருக்கு என்று சொன்னால் ஆம் என்று சொல்ல ஒரு குழுவும், இல்லை என்று சொன்னால் ‘இல்லையா’ ஆம் இல்லை இல்லை என்று சொல்ல ஒரு குழுவாகவும் நாம் பிரிதல் ஆபத்து. ஆனால் அந்தப் பிரிதலில் உள்ளூறும் குழு மனப்பான்மையை ஊடகங்கள் நிறையத் தருகிறது. ஒரே ஒரு மணி நேரத்திற்குள் ஒரே ஒரு தொலைக் காட்சிக்குள் ஒரே ஒரு நிகழ்ச்சியின் ஊடாக பத்து தேயிலைத் தூளும் இருபது உடம்புத் தேய்த்துக் குளிக்க சோப்பும் தரமாக உள்ளதாக காசுக்கு ஏற்ப விளம்பரம் செய்யும் ஊடகத்து தொழில் தர்மத்தை அங்கீகரிக்கும் மக்களாக நம்மை மாற்றியது யார்? அந்த மாற்றத்தை சுவையுற ஒரு ஊடகம் செய்கிறது எனில் அதை விட்டுவிலகாத அல்லது ஒரு மாற்றத்தையேனுமங்கே ஏற்படுத்தாத நாம் என்ன ஒரு சமநிலைப் புரிதலை அந்த ஊடகங்கள் வழியே நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோம்?

வெறும் உழைப்பதும் சலிப்பதும் அல்ல வாழ்க்கை. பொழுதுபோக்கு வேண்டும். ஆனால் அது ஆடற் கலையின் வழியும், பாடல் கலையின் வழியும், சித்திரக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும், விளையாட்டாகவும் உடற்பயிற்சியகவும் மூளையையும் திறமையையும் தனக்குள் தோன்றியதைக் கொண்டுவருவதாகவும் இருத்தல் வேண்டும். இடையே நாம் நம்மை முகம் பார்த்துக் கொள்ள ஊடகங்களை வைத்துக் கொள்ளலாம். நாம் செய்வதைப் பகிர்ந்துக் கொள்ள ஊடகங்கள் உதவலாம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அதை மட்டுமே ஊடகங்கள் காட்டலாம். லட்சியமென்பது இமையமலையின் மீது ஏறுவதாக இருத்தல் வேண்டும். அதைக் காட்டுவதே கற்பனையாக அமைதல் வேண்டும். இமையமலையை எட்டித் தொடுவதாக காண்பிப்பதும் எண்ணுவதும் அத்தனைச் சரியான கற்பிதமோ கற்பனையோ அல்ல..

அதற்காக இந்நிலை உடனே, ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றை ஏற்றிவைத்துவிடக் கூடிய விளக்கைப் போன்று அணைந்தோ எரிந்தோவிடும் நிலையல்ல. இது அதுவாக மாறிய காலப்போக்கு. இனி அதுவாக மாறும். மாறுகையில் நல்ல மாற்றத்தோடு நம் சமூகம் மாறக்கருதி நாமெல்லோரும் நமக்குள் நன்மைகளை விதைத்துக் கொள்ளல் நலம் தரும்..

ஆய்விற்கு பரிந்துரை செய்த அன்புச் சகோதரர் கவிஞர் திரு. ம. ரமேஷ் (PhD) அவர்களுக்கு நன்றி!!
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..

(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை)

ன் தமிழுக்கு எதிர்வரும் குரலை
தட்டிக் கலைகிறேன்,
ஒரு தூசென மதிக்கிறேன்,
நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில்
கர்வம் கொள்கிறேன்,
பிடி வீரம் உண்கிறேன்,
நஞ்சு நீயென ஒதுக்கி –
வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன்,
எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை
உள்ளே எரிக்கிறேன்,
உணர்வுக்குள் அடக்கி அடக்கி –
என் மொழியை மட்டுமே முன்வைக்கத் துடிக்கிறேன்,
மூத்தமொழி தமிழுக்கு அஞ்சி – என்
வணக்கத்தோடு இங்கே தலைசாய்க்கிறேன்!!
உறவுகள் அனைவருக்கும் என் மதிப்பான வணக்கம்!!
———————————————————————————————-

நெடுங்காலமாகவே நாம்
அதிகமெங்கும் எதிர்த்துப் பேசுவதில்லை. பேசினாலும் நியாயத்தின் வழியே எல்லோரும் நிற்பதில்லை. நின்றாலும் மொத்தமாக நின்று ஒற்றுமையோடு போராடுவதில்லை. போராடினாலும் வெல்லும் வரைக்கான உறுதியோ நம்பிக்கையோ போதுமானதாக நம்மிடத்தே இல்லை. ஏதோ ஒரு நமக்கான தனித்த வட்டத்திற்குள் கிடைத்தது போதுமென்று நாம் அடங்கிநிற்கும் இடத்தில்தான் கிடைக்காதநம் நீதிக்குள்ளிருந்து சுரண்டப்படுகிறது நமக்கான சுதந்திரமும், விடுதலைநாடி வருந்தும்நம் தாய்மண்ணும், ரத்தக்கரைதனிலே உறையும் ஏமாற்றம் மிக்க அரசியலும். அதை வன்மையாகக் கண்டிக்க எண்ணுகிறது இக் கவிதை;

கவிதையின் தலைப்பு: தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..

உடம்பு கூசும் மக்கள் கூட்டம்
உதிரம் கொதிக்கா உயிரின் ஏக்கம்
நரம்பு புடைக்க கத்திவிட்டு –
நான்கு மூடியுள் தூங்கும் இளமைப் பட்டாளம்..

எதற்கு இந்த பிழைப்பு வேண்டும்
எதிர்த்துக் கேட்டால் தலையாப் போகும்
அறுக்க உதிரும் இரத்தம் தேடி
மிச்சம் வீரம் இருப்பின் எழுங்கள் போவோம்;

பட்டப்பகலில் அரசியல் வேஷம்
பதுக்கி பதுக்கி ஒழியுது தேசம்
கத்தி ஈட்டி துப்பாக்கி வேண்டாம்
ஒற்றைக் குரலை கொடுத்திடு தோழா;

அச்சமில்லை அச்சமில்லை
சொன்ன உணர்வு மிச்சமில்லை,
துச்சம் என்று ஒதுங்கி ஒதுங்கி
நாம் தொலைக்கும் மண்ணை பறிக்க எழுவோம்;

பண்பு வேண்டும் அன்பு வேண்டும் – பார்வைப் பட்டதும்
பற்றியெரியும் காதல்வேண்டும்,
கொஞ்சு(ங்)குடும்பம் வீட்டையும்போல
நாடும் மிஞ்சநமக்கு – நல்ல அரசியல் வேண்டும்;

பஞ்சுமிட்டாய் பொம்மையா தமிழன் ?
சுற்றி நடப்பதைக் கண்டால் பொறுக்குதில்லை; எங்கும் குற்றம்
எதிலும் ஏமாற்றம், அரசியல் என்றாலே
அப்படியொரு நாற்றம்’

எழுந்துக் கேட்ட நியாயமெங்கே ?
குடித்தத் தமிழச்சி பாலின் வீரமேங்கே ??
பதைக்க பதைக்க உயிர்களைக் கொடுத்தோம்
இனி அடிக்க அடிக்க திருப்பி அடிப்போம்;

வலிக்க வலிக்க பின்னால் போறோம்
பயத்திற்கும் பதவிக்கும் பணத்திற்குமே தன்மானம் விற்கிறோம்’
விழுந்து விழுந்து அழுவதைவிட்டு – இனி
எதிர்த்து நிற்க போர்க்கொடி எடுப்போம்;

துடி துடி’ கொஞ்சம் துடி’ எழு’ கண்களைத் திற
முடியாததொன்றும் மனிதருக்கில்லை; ஒரேயொரு
முடிவை எடு –
அது அரசியல் வெற்றியென்று சொல்லிவிடு;

தடுப்பவன் கை எதுவாயினும்’ தடுப்பவன் கை, ‘அது எதுவாயினும்
அதை தமிழதன் தீரம் கொண்டு முறித்துவிடு,

இனி தனித்து நடக்க பாதை வேண்டும்
மனிதம் நிலைக்க நடக்கும் வீரம் வேண்டும்
அதை மீட்க தமிழினமே பாடுபடு; நம்
பாட்டன்முப்பாட்டனின் விடுதலையை நீ நிமிர்ந்து நடக்கவேனும் பெற்றுவிடு!!
——————————————————————————————-
வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம்
ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம்
எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம்
எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்;

எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம்
கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம்
வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம்
தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்;

பட்டினியில் ஏழைகள் சாகலாம்
பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம்
லஞ்சத்தை எல்லோருமே வஞ்சமின்றி கேட்கலாம்
மருத்துவம் கல்விக்கூடம் கூட வருமனங்கருதித் திறக்கலாம்

பூகம்பம் வரலாம்
பகையாளி பக்கத்திலிருந்தே போர் தொடுக்கலாம்
சுனாமியோ பெரும்புயலோ திடீரென வீசலாம்; பக்கத்து மாநிலம் கூட
சிரித்துக் கொண்டே அரசியல் பள்ளம் வெட்டலாம்;

விழிப்புணர்வுக் கூட்டத்தை காவலாளிகளே நிறுத்தலாம்
தமிழை அறிந்தே பின்னுக்குத் தள்ளலாம்
ஆபத்தோ அணு உலையோ தமிழகத்தில் திறக்காலாம்
ஏன் பாராளுமன்றத்தில் கூட பாரபட்சத்தைக் காட்டலாம்;

எதுவாயினும் எங்கள் கொடி பறக்கும்
அது இந்தியக் கொடியாகவே இருக்கும்..
—————————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்