Tag Archives: அரசியல்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்; போட்டதை தின்று விரித்ததில் தூங்கிப் போகும் புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 20

கனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை!! ——————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 19

மணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்! ———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 18

நகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை! —————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக