Tag Archives: கவிதை

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

86 ஞானமடா நீயெனக்கு…

1 அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொருக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொருக்கி என்றாய்; எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!! —————————————————————————- 2 சிறகடிக்கும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கண்ணீர் வற்றாத காயங்கள்..

1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!! ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)

இதற்கு முன்.. சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர். ‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்