Tag Archives: தமிழ்

21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..

கனவுகளை சேகரிப்போம் காடுபோல கூடி நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்; சமத்துவத்தை சொல்லி – தமிழர் பண்பில் மிஞ்சி எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம் தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!! ———————————————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து!!

எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை – எம் உணர்வை – மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை – விடுதலை வேட்கையாகக் கொண்டு – மொழி உணர்வை தமிழ் உணர்வென – என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட – பாடம் உண்டென மீண்டு – எமை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள், வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும் முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும், காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும் தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்! வானம் தொடுங் காலம்வரை சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்; எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு தோல்விசாசனம் எழுதிப் போனாய்! மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை ஓயாது … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாபத்தின் விடிவு; பெரியார்!!

கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்! கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்! என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்! கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து ஜாதியில் அறுந்த இதயங்களை – காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்! காலச் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்