Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்.., வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

11 உடைந்த கடவுள்..

உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

10 உடைந்த கடவுள்!!

சந்து பொந்துகளிலெல்லாம் வீழ்கிறது மனிதம்; எந்த புள்ளியில் பிறர் மன்னிக்கப் படுகின்றனரோ அந்த புள்ளியிலிருந்தே மனிதம் வீழாதிருக்கலாம்; வீழ்ந்தும் போகலாம்! ————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

9 உடைந்த கடவுள்!!

வட்டிக்கு பணம் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி உடைகிறது சேமிக்கும் மனப்பான்மை; இல்லாமலே போகிறது மனசாட்சி!! ——————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8 உடைந்த கடவுள்!!

எங்கெங்கோ யார் யாரோ பேசிக் கொள்கிறார்கள் – அவன் சரியில்லை அது செய்தது உலகமே அப்படித் தான் என்றெல்லாம்; நான் இப்படித்தானென்று ஒத்துக் கொள்ள – யாருக்குமே துணிவில்லை!! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்