70) ஞானமடா நீயெனக்கு..

1
நீ
எட்டி எட்டி
உதைத்துக் கொண்டிருந்த
எத்தனையோ நாட்களின் –
என் தூக்கம்; உன் காலடியில் தான்
இமைகிழிந்துக் கிடந்தது!!
———————————————–

2
நீ
சாப்பிட்டு வைத்த
மிச்சத்தை எடுத்துக் கொண்டு
உடம்பெல்லாம் ஓடியது
என் ரத்தம்!
——————————————-

3
னையும்
பாப்பாவையும் மாற்றி மாற்றி
கொஞ்சுவோம்,

உனக்கு தெரியாமல் அவளிடமும்
அவளுக்கு தெரியாமல் உன்னிடம்
பாசத்தை நிறைக்கையில் – நீ
எதிர்பார்த்த உனக்கு மட்டுமான அன்பு
கிடைப்பதாய் நம்பினாய்,

உனக்கும் பாப்பாவிற்கும்
இப்படி மறைந்து மறைந்து காட்டிய அன்பில்
உங்களின் குழந்தைபருவ மனசு –
கோணக் கூடாதே என்ற அக்கரையில்

என்னம்மா என்னப்பா
என்னை மட்டும் பிடிக்கும் என்றதன் அர்த்தம்
இப்போது புரிந்தது!!
—————————————————————————-

4
னக்கு பாப்பா என்றால்
அத்தனை பிரியம்,

நீ என்னை மாதிரியே போல்
என்று நினைத்துக் கொள்வேன்,

ஆனால் நான் திரும்பும் போது
மறைவாக சென்று நீ அவளை
அடித்துவிடுகிறாய்,

நானும் ஒருவேளை
உன்னைப்போல் தானோ என்று
யோசிக்கத் துவங்கினேன்!!
—————————————————————————-

5
ப்பொழுது தூங்குவாய்
எப்பொழுது எழுந்திருப்பாய்
என்ன சாப்பிட்டாய் தெரியவில்லை;

உன் அவ்வப்பொழுதிற்கான அசைவில்
தூங்குகிறாய்
சாப்பிடுகிறாய்
நாளைய என் தலைமுறைக்கான உயிர்ப்பை
இன்றிற்குமாய் என் கர்ப்ப வயிற்றின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருக்கிறாய்’ என்பது மட்டும்புரிந்தது!!
—————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 70) ஞானமடா நீயெனக்கு..

  1. lakshminathan சொல்கிறார்:

    nalla appavai kan mun niruthiyathu vidya

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s