உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி
ஏறிநடந்த தூர அளவிற்கு
வந்து விழுந்த சில்லறையில் –
ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா?

கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில்
என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும்
பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம்
வீட்டில் கொண்டாட இயலுமா?

பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, துணி அலசி போட்டு
குழந்தைகள் குளிப்பாட்டி, கூரை முடிந்து, வேலி கட்டி
வந்த பணத்தில் – பழைய துணிகளை தைத்துப் போட முடியும்
புதிய துணி வாங்க முடியுமா?

பேருக்கு இலவசம் கொடுத்து
ஊருக்கு வெளியே எங்களை நிறுத்திய தேசத்தில்
பொங்கல் வரும் போகும் –
போகும் அவ்வளவே!!!

என்றாலும் –

முறுக்கேறிய உடம்பின் திமிரில் கடிக்க அல்ல
மண்மிதித்து நெல் குவித்த என் ஏழைக்குக் –
கடிக்கச் செங்கரும்பும்

கஞ்சிக் கூழ் குடித்து நெஞ்சி நிமிர நடந்த
என் தமிழர் ஜாதி பரம்பரைக்கு –
அஞ்சி வாழா மனித ஆணிவேருக்கு சீனிப் பொங்கலும்..

என உழைத்தவருக்காய் படைத்திட்ட
இம்மூன்றுப் பொங்கலின் திருநாட்களும்
அவர்களுக்குத் தித்தித்தோ இல்லையோ,

வாருங்கள் நாம் மனம் இனிக்க இனிக்க
பொங்கல் தின்று புதுத் துணியுடுத்தி – கூட ஒரு
கவிதையும் எழுதிக் கொண்டாடித் தீர்ப்போம் – அவர்களின்
வியர்வை வாசம் மறந்ததொரு பொங்கலை!!
————————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

  1. Nilaamathy's avatar Nilaamathy சொல்கிறார்:

    பொங்கல் திரு நாளில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துவோம். வேலைப்பளு காரணமாக் வாசிக்க் அதிகம் வ்ருவதில்லை. மீண்டும் வருவேன்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      என்னன்பு சகோதரிக்கு அன்பு வணக்கமும், மனம் நிறைந்த வாழ்த்துக்களும். நேரம் கிடைக்கையில் வாருங்கள் சகோதரி, உங்களின் வருகைக்காய் இச்சகோதரனின் இதயம் காத்தே கிடக்கும்.. நன்றிகளுடன்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக