பல்லவி
நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே
நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே;
உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே
நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..
சரணம் – 1
காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத்
தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன்
மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ
பெண்ணே பெண்ணே ஒருமுறைப் பாரு – உயிர்மொத்தம்
உன்னில் பூப்பேன்; உடலாலே ஓவியந் தீட்டி
உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி
என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;
(நீ பார்க்கும் பார்வையிலே)
சரணம் – 2
விளக்கொன்றில் எரியும் சிறகாய் மனசெல்லாம் எரியுதடி
உன் புன்னகையொன்றை மீட்டுக்கொள்ள கடலாய் மனசு ஏங்குதடி
விண்ணின் நீளம் கவலைக் கொண்டு நட்சத்திரமாய் வீழுதடி
ஒரு பார்வைக் கேட்டு கொட்டும்மழையென காதல்காதல் கரையுதடி
மின்னல்பெண்ணே என்னை வெறுக்காதே – என் உலகமிருண்டுப்
போகுமடி, நீ காணும் கனவிலே வாசல்வைத்தேன் – என்
இதயம்நுழைய வேண்டுமடி, நித்தம் எனது நினைவில் நீதான்
உயிர் காற்றாய் கலக்க வேண்டுமடி; இத்தருணம் மட்டும்
என்னில் பூத்தால் வாழ்வே வெளிச்ச(ம்) மாகுமடி..
வித்யாசாகர்
//உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே
நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..//
//உடலாலே ஓவியந் தீட்டி
உனக்குள்ளே வண்ணங்களாவேன், உயிர் காற்று நீயாய் வீசுதடி
என் மொழியெல்லா-முன் பேரே வேதம் ஆனதடி;//
அருமை அருமை மிக அருமை!! உங்களின் உயிர் வரிகள்,அற்புதமான இசையும், குரலும் பாடலை பல முறை கேட்க செய்கிறது.
வாழ்த்துக்கள்!!
LikeLike
நன்றி உமா.. நான் ஆழ்ந்து எழுதிய கவிதையிது. கவிதைக்கான பாடுபொருள் கவிதையின் தேடுதலிலும் மொழியின் வலிமையிலுமேயிருந்தேக் கிடைப்பதாக எண்ணிக் கடக்கிறேன்..
LikeLike
“..நீ போகாத தெருவழி எந்தன்
மௌனத்தை மொழியாய்க் கேட்பாயோ..”
அருமையான வரிகள்.
LikeLike
நன்றி ஐயா. காதல் உயிரில் பசையாக அல்ல; உயிராகவே உள்நிறைந்துப் போன பிறப்பொன்றின் உள்ளேக் கிடந்த வலியிது; வரிகளில் இப்படி சிலநேரம் எட்டிப் பார்த்து விடுகிறது..
LikeLike
காதல் இங்கே கனக்கிறதே
உன் கவிதை வரிகள் ஜொலிக்கிறதே
பாட்டு கேட்டு பரவசமானது
இதை பதிவு செய்ய வெகு நாளானது.
//நீ பேசாத தருணம் மட்டும்
உயிர்செத்து செத்து உடல் வேகிறதே..//
மிக அருமையாகச் சொன்னீர்கள். ஆம், மூச்சு நின்றால் மட்டும் மரணமென்றில்லை, காதலியின்; பேச்சு நின்றால் கூட அதுவுமொரு மரணத்திற்குச் சமம்தான்..
LikeLike
//மூச்சு நின்றால் மட்டும் மரணமென்றில்லை
காதலியின்;
பேச்சு நின்றால் கூட
அதுவுமொரு மரணத்திற்குச் சமம்தான்..// அழுத்தமான வரிகள். உணர்வுகளை அப்பட்டமாய் வெளிக்காட்டும் வெள்ளைத்தன வரிகள். தங்களின் பாராட்டிற்கு நன்றி. எல்லாம் புகழும் தம்பி ஜெயந்தனுக்கே..
LikeLike