12, நிழலுக்கு முன் நீ..

சிரித்தது sandaiyittadhuசிரித்தது
சண்டையிட்டது
சைகை செய்தது
மறைந்துப் பார்த்து காற்றுவெளியில்
முத்தமிட்டது

எல்லாவற்றையும்
நினைவில் வைத்திருக்கிறாயா?

எனக்காக நீ முகத்தில்
அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட
எனக்கு மறக்கவில்லை..,

இரும்பு கதவின்
மூடும் சத்தம்,
நீ வந்துநிற்கும்
குழாயடிப் பேச்சு

ஓடிவந்து நீ
எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட –
வானிலும்
மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம்

படித்துவிட்டு
கவிதை
நல்லாருக்கென்றுச் சொன்ன
வார்த்தையும்’
கண்களில் வேறெதையோ பேசிய
பொழுதையுமென

எதையும் என்னால்
மறக்கமுடியவில்லை..

எல்லாமே
கண்ணின் இமையைப்போல
துடிக்கும் இதயம் போல
விட்டிடாத உயிரைப்போலவே
பத்திரமாக இருக்கிறது என்னிடம்..
————————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக