Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

13 தாயுமானவரின் கதைக்கு ‘தோனி’ என்று பெயர்.. (திரைவிமர்சனம்)

ஒரு தாயின் வலி தெரியும், தவிப்பும் கண்ணீரும் புரியும், தந்தையின் ரணம் எத்தனை குழந்தைகளுக்குத் தெரிகிறது? படிப்பின் வாசல் பெரிது, வாசனை அதிகம், அள்ள அள்ள குறையாத செல்வத்தைத் தரும் அமுதசுரபியென எல்லோருக்கும் தெரியும், படிக்க இயலாத குழந்தைகளின் கதி என்ன, அவர்களுக்கென இச்சமுதாயத்தில் நாம் வைத்திருக்கும் இடம் எது? கனவன் மனைவி அம்மா அப்பா … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்