Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

திறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வார்த்தை சில்லுகள்..

1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை! 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை! 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல்! 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்