Category Archives: கவிதைகள்

43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!!

கண்ணிரண்டை விற்றுவிட்டு கண்ணாடியை வாங்குறோம், விளக்கை அணைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுறோம்; நாலும் தெரிந்தவர்கள் தனியாளா நிக்கிறோம், சொந்தபந்தம் இல்லாம செத்த பிணமா அலையுறோம்; நல்ல நாலு ஏதுமில்லை நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை கல்யாண  நாளைக் கூட தொலைபேசியில் தீர்க்கிறோம்; இயக்கிவிட்ட எந்திரமா இரவு பகல் உழைக்கையில வியர்வையில் சரித்திரத்தை காய காய எழுதுறோம்; காற்று போல மண்ணு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ??? கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

85 அவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு!!

இதோ இதோ என் கண்ணே என்னைக் குத்துதே மழை மழை அதன் சாரல் தீயாய் சுட்டதே, அவன் அதோ தூரம் நின்று கொல்வதேன் உயிர் உயிர் இருந்தும் இல்லா தானதேன்; இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே இரு விழி; திறந்தும் கனவுக் கொல்லுதே; கணம் கணம் அவனைத் தேடி வாடுதே கண்ணீர்மட்டும் காதலின்வழியே; உயிரைக்கொண்டுச் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மரணம் இரைந்த தெருக்கள்..

கைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம்! தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!! காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம்! ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்