சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..

unnamed

மிக இனிமையான நாட்கள் அவை
காலையில் வரும் சூரியனைப்போல
அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..

ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின்
ஒருநாள் சிட்டுக்குருவியொன்று
கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை.,

காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி
அன்றைய தினத்தின் பரிசாக
இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு..

விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில்
நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர
நான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து
முகம் பார்த்து பார்த்து தலை சாய்த்து சாய்த்து
கத்துவதைக் கண்டதெல்லாம்
அழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்

அந்த கிரீச் கிரீச்சென கத்தும்
சிட்டுக்குருவிகளின் மொழிக்கான அர்த்தத்தை
மௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்
தங்கையின் இல்லாயிடம்
உயிருக்குள் அப்படி வலித்ததுண்டு

தங்கையைப்போல் சிட்டுக்குருவிகளும்
எனக்கு மறப்பதேயில்லை..

எங்கள் வீட்டு ஜூலி
வாசலிலமரும் சிட்டுக்குருவிகளுக்கு
இன்னொரு தோழி,
ஜூலி சிட்டுக்குருவிகளை விடுவதேயில்லை
ஓடியோடி அவைகளை துரத்தும்
சிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்
வவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்
விடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..

தூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்
பீறிட்டுவரும் சூரிய ஒளியோடு
ரக்கை படபடக்க வந்தமரும்
ஒரு சிட்டுக்குருவியின் முகத்தில்
ஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை
எத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது
எனக்கு சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்
என் வீட்டு கூரைமீதும் ஒன்றுதான்

யாருக்கு எப்படியோ;
எனக்கந்த என் காதலியின் வீட்டு சன்னலும்,
வீட்டுவாசலில் கருப்புசாமியாய் வளர்ந்திருந்த
வேப்ப மரத்தடியும்,
உடைந்தக் கண்ணாடிச் சில்லுகளின் தெரியும்
நினைவுகளாக
அந்நாட்களின் மொத்த வாழ்வுமே
அந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது.,

சிட்டுக்குருவியோடான நாட்கள்
உண்மையிலேயே எனக்கு
மிக இனிமையானவை..
———————————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

Bloodied Children and Brutal Minds (of Syria)

Eagles which were preying on money
have started feasting on human lives,
Mad elephants with lust for religion
standing in the brutal pit and laughing
continual murders!

Alas! Our lead is not trembling at all
with the children’s scream and cry
will the sky shatter?
Should it give birth to poisonous bombs
for rich people’s craving?

A beautiful land
has transformed into drunkard’s house,
Everyone being a maniac
a tiny land is being destroyed!

Having religion and language
is for our identification? Or
For killing others on the same basis? Or
is it proof of our selfishness?

The reddish blood of the kids
is chasing and drenching the country
This never ending war
is sowing fear of poison worldwide.,

Even when I close my eyes to sleep
my heart is aching with the prick of puncture wine
Loads and loads of photos
refusing to see due to dumbness,

There is no black or red in blood
oh man! Then why there is religion and caste? Relax!
Humanity is being killed in all the street
stop it completely with a single apology

Who will salute your flag
after killing every one
In the soil with flowing blood
his country will grin for whom to live in?

From yours and mine
when the life becomes ours
it is special

By leading a peaceful life
with increased moral law
Syria too will change tomorrow
we wish for it..

By
Vithyasagar, Chennai, India

Posted in English Poems | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…

ணந்தின்னிக் கழுகுகள்
உயிர்த்தின்ன துவங்கிவிட்டன..
மதங்கொண்ட யானைகள்
பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன..,

அடுக்கடுக்காய் கொலைகள்
ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி,
பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில்
நாளை உடைந்திடுமோ வானம்..,

பணக்கார ஆசைக்கு
விசக் குண்டுகளா பிரசவிக்கும்??
வயிற்றுக்காரி சாபத்தில்
எந்த இனமினி மூடர்களுக்கு மீளும்..???

குடிகார வீடு போல ஆனதே
ஒரு அழகு நாடு..,
அவனவன் வெறிக்கெல்லாம்
அழிகிறதே யொரு குஞ்சுதேசம்..,

மதம் கண்டதும் மொழி கொண்டதும்
அறிவின் அடையாளமா..(?) இல்லை மதங் கொண்டும்
மொழி கொண்டும் கொல்வது
சுயநலத்தின் கொடூர நகங்கீறும் பெருஞ் சாட்சியா ?

செக்கச்செவேலென்ற பிள்ளைகளின் ரத்தம்
துரத்தி துரத்தி நாட்டை நனைக்கிறதே.,
முடிய முடிய மீளா போராய்
உலகெங்கும் பயநஞ்சுதனை விதைக்கிறதே..,

கண்மூடி படுத்தாலும் நெஞ்சு
நெருஞ்சியாய் குத்தி வலிக்கிறதே.,
வண்டி வண்டியாய் படங்கள்
முடமாய் பார்க்க மறுத்துத் துடிக்கிறதே..,

கருப்பு சிவப்பில்லை இரத்தத்தில்
பிறகு சாதியென்ன மதமென்ன மனிதா ஓய்ந்துவிடேன்,
தெருவெங்கும் சாகும் மனிதத்தை
ஒரு மன்னிப்பில் முழுதாய் நிறுத்திவிடேன்..,

உயிர்க்கொன்று உயிர்க்கொன்று பின்
எவர் வணங்க உன்கொடி பறக்குமோ?
தலைசாய்ந்து குருதியோடும் மண்ணில்
எவர் வாழ தேசம் சிரிக்குமோ..?

ஈழத்தில் அன்றெமைக் கொன்றபோது; உலகே
வாய்மூடிக் கிடந்தாலும் எந் தமிழ் நின்று கதறியது,
இன்று சிரியாவில் பெண்டிரும் பச்சிளம் குழந்தைகளுமாய்
மாள்கையில் ஐநா ஓணானெல்லாம் எங்கே போனது..?

உனதாகி எனதாகி நாளை
நமதாகும் வாழ்வே சிறப்புடா,
அறம் ஓங்கி அமைதியோடு வாழும் வாழ்க்கைக்கு
இச் சிரியாவும் நாளை மாறும்; அதை விரும்புடா..
——————————————————
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பட்டாம்பூச்சி போல அவள்..

1
யிரம் கைகள் எனை
அணைத்துக்கொண்டு தானிருக்கிறது;
என்றாலும் –

மனசு வெளியே சென்று தேடுவது
உன்னைமட்டுமே..
—————————————–

2
றும்புகள்
சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்;

அதிலொரு எறும்பு நானாகயிருப்பின்
உனைமட்டுமே தேடியிருப்பேன்..
—————————————–

3
ன் பார்வையைவிட அழகு
உலகில் வேறில்லை;
கடவுள் ஒருவேளை நேரில் வந்தால்
நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும்
ஒரு வரமாகக் கேட்பேன்..

நீ பார்க்குமொரு பார்வைக்கு
மீண்டுமொரு தவம் கிடப்பேன்..
—————————————–

4
ருசில கணங்களது
உனை நினைத்திடாத கணம்,
மீறி நினைக்கையில் தீபோல் அள்ளி குடிக்கிறாய்
முழு நிலவாய் எனை வெளுக்கிறாய்:

உன் நினைவாக மட்டுமே
வெளித் தெரிகிறேன் நான்..
—————————————–

5
ன்னதான் வேலையென்றாலும்
கூடவே
சுவாசிக்கவும் சுவாசிப்போமில்லையா ?

அந்த சுவாசக்காற்றில் நீயிருப்பாய்..
—————————————–

6
றக்கத்திலிருந்து
கண் விழித்தாலும்
நீ மட்டுமே முதலில் தெரிகிறாய்;

அல்லது
தெரியக் கேட்கிறது மனசு..
—————————————–

7
னை
பெரிதாக நினைப்பதில்லை
மறப்பதுமில்லை;

உண்மையில் –
நீ மறக்கும் இடந்தண்ணில் இறப்பேன்
நீ நினைக்க நினைக்க பிறப்பேன்..

நீ மறுக்கும் இடம் மட்டும்
வலிக்கும், நீ சிரிக்க சிரிக்க
உயிர் சுகிக்கும்..

நீ பார்க்காத பொழுதது
வெறுக்கும், நீ பார்க்கும்
நினைக்கும்
அன்பில் மட்டுமே அது இனிக்கும்..
—————————————–

8
னக்காக
ஒருமுறை சாகத் துடிக்கிறது மனசு,
மீண்டும் பிறக்கையில்
எங்கேனும்
உனக்காகவே பிறந்துவிடமாட்டேனா..
—————————————–

9
னது மௌனத்திற்கு கூட
சப்தமுண்டு
எனக்குமட்டும் கேட்கும் சப்தமது,

உனது பார்வைக்கு கூட
மொழியுண்டு
எனக்குமட்டும் படிக்கயியன்ற
மொழியது,

எனக்கும் உனக்குமான ஒரு
நீயிருக்கிறாய்;
அந்த நீ
எப்போதும் எனக்குள் இருப்பாய்!!
—————————————–

10
பொழுது அடங்குகையில்
படரும் இருட்டோடு
கண்களில் தூக்கம் அடங்குமோ இல்லையோ
உனக்கான காத்திருப்பை சுமந்துக்கொண்டு
படுப்பேன்,

ஒரு சொட்டுக் கண்ணீர்
தலையனையை நனைக்கும்
ஒரு சின்ன கனவு உனைத் தேடி அலையும்
கனவுகளில் உன் மனசுபோலவே
சிரித்துப் பேசுவாய்
நீ பேசியதை சிரித்ததை பார்த்ததை
நினைத்துக் கொண்டிருப்பேன்..

திடீரென குருவிகள்
சன்னலில் வந்து கத்தும்
காகங்கள் கரையும்
பொழுது புலரும்
கனவோ நினைவோ
என் நாள் முழுதும் நீயிருப்பாய்
உன் நினைவிருக்கும்,

நீ எல்லோருக்கும் நீ
எனக்கு நீ மட்டுமே எல்லாம்..
—————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு.

எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்..

உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு பிடித்தாற்போல அப்போ எது சரியோ அதுவா ஆகலாம்டா என்பேன்

இல்லைனா நான் கலெக்டராயிடட்டா என்பார், ம்.. ஆனால் நிறைய புரட்சி செய்யவேண்டியிருக்குமேடா என்பேன். அதலாம் செய்வேன்ப்பா என்பார்.

சரி அப்படி வந்தா சந்தோசம் தான் என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆனா பிடிக்குமென்பார். எனக்கு ஆசிரியை பிடிக்கும்டா என்பேன்.

நல்லவர்கள் சொல்லித்தர வரணும்டா, உன்னைமாதிரி நல்ல பாப்பா எதிர்காலத்துல ஆசிரியையாக உருவாயிட்டா அதனால எத்தனை நல்ல குழந்தைகளை சிறந்த மாணவர்களா உன்னால் உருவாக்கிட முடியும் ல்ல என்பேன். சரி நான் ஒன்னு கலெக்டர் இல்லைனா ஆசிரியை ஆய்டுவேன் சரியா? என்பார்.

கனவுகள் இனிதே; நாளை நடப்பதென்னவோ யாரறிவார், எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென்று நல்லதையெண்ணி நகர்வோம்.

இன்று மகள் வித்யா பொற்குழலி ஆசிரியைக்கான மாறுவேடப் போட்டியில் பங்கேற்கிறார். ஆங்கிலத்தில் ஒலிக்கஇருக்குமவரின் குரலின்று எதிர்கால சரித்திரமாக இக்காற்றெங்கும் பரவி நற் கனவுகளை விதைக்கட்டும்.

“ஆசிரியைகளுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்..,

மாணவர்களே இவ்வுலகின் வளர்ச்சிக்கான பலம். மாணவர்களே நாளைய மாபெரும் மாற்றத்திற்கான மறுமலர்ச்சிக்கான புரட்சி விதைகளாவார்கள். மாணவர்களே பெற்றோருக்கும் தனது ஆசிரியருக்கும் பல பெருமைகளைச் சேர்க்கிறார்கள். மாணவர்களை இம்மண்ணின் அரும்பெரும் செல்வங்களாக நான் மதிக்கிறேன். அத்தகைய பல நல்ல மாணவர்களுக்கு சிறந்ததொரு ஆசிரியையாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி. வணக்கம்!”

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்