மழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்.. (வித்யாசாகர்)

beads-e-fr-mtpmcg615-sm-8185

யற்கையின் சீற்றத்தை இயற்கையே மாற்றிக்கொள்ளும். என்றாலும் இழப்பு இழப்புதான் என்பதில் எல்லோருக்குமே வருத்தமுண்டு. ஆனால் ஒரு மரத்தை பிடுங்கியதன் கோபம் கூட இந்த மழைக்கு உண்டெனில் அதன் கோபமும் நியாயம்தானே? அப்போ நம் நிலை? நம் நிலையென்ன, நம் நிலை இனி இயற்க்கைக்கு ஒத்தாற்போல மாறவேண்டும். ஒரு மரம் பிடுங்கினால் இரண்டு மரத்தை நடும் தர்மம் நம் வாழ்க்கையோடு நமக்கு வசப்படவேண்டும்.

இம்முறை மழை நமக்குக் கற்றுத்தந்த பாடத்தைக் கொஞ்சம் நாமும் நினைவில் கொண்டு, மழைநீர் சேமிப்புத் திட்டம்போல, இனி மழைக்கால பாதுகாப்பு திட்டங்களையும் வெகுவாகக் கற்றுக்கொள்ளல்வேண்டும். முற்றிலும் சரிக்கு ஈடாக பல முன்கூட்டிய அறிவுசார் திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும். ஏரி குளம் ஆறு என தக்கவாறு அமைத்துக்கொள்வதும், தூர்வாரி நீர்நிலைகளை சீர்செய்துக் கொள்வதுமாய் இனி மழை குறித்தும் புயல் குறித்தும் ஒவ்வொரு காலநிலை குறித்தும் முன்னாட்களைப்போலவே நாம் கூடுதல் கவனமாகவே இருத்தல் வேண்டும்.

இங்கே அந்தளவு மழை வராதுதான் என்றாலும், வந்துவிட்டால் எனும் கேள்வி இனி நமக்குள் எப்போதும் இருக்கும்தான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் கால ஓட்டத்தில் இதையும் கடந்துபோய் அடுத்துவரும் தலைமுறைக்கு மீண்டும் இச்சிக்கலை நாம் விட்டுச்செல்வோமெனில் பின் நாமும் குற்றவாளிகளே.

வாழ்க்கை என்பது வெவ்வேறு. அவரவர் சுற்றம் சூழல் மனிதர்கள் எண்ணம் என அவரவருக்கு மாறுபடுவது. ஆனால் நாம் வாழுமிந்த இயற்கைச் சூழல் எல்லோருக்கும் ஒன்றுதான். அது எல்லாம் வல்லது. வீரியம் மிக்கது, அதை எதிர்ப்பதைக் காட்டிலும் அதோடு சேர்ந்து வாழப் பழகிக் கொண்டால். வீட்டை எரிக்கும் அதே நெருப்பு வீட்டிற்கு விளக்காயும் இருப்பதைப்போல; தலைமூழ்கி உயிரை வாங்கும் அதே தண்ணீர் உயிராகி நம்முள் ஊறியும் கிடக்கும்..

மாற்றம் இயற்கையின் இன்னொரு பங்காக வாழும் நம்மிடமே இன்னும் நிறைய தேவை. அத் தேவைக்குச் சிந்திப்போம். மெல்ல மெல்ல அது புரிகையில் இயற்க்கை நிச்சயம் நம் நலத்திற்கு வேண்டியும் அதுவே தானாக இயங்கிக்கொள்ளும்.

அதன்பொருட்டு; நலம்சூழ்ந்த வாழ்வும் வளமுறும் சுற்றமும் எல்லோருக்கும் வாய்க்குமாகலாம்.. எல்லோருக்கும் வாய்க்க வாழ்த்து!!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்..

url

ருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம லாரன்ஸ் ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர்.

மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் அவசர உதவிக்கு மனிதாபிமானத்துதோடு தன் வாசலைத் திறந்து உறங்க இடம் தந்திருக்கிறது.

என்றாலும், சென்னையின் நன்றிக்குறிய நிறையக் கோடிகளைக் கேட்டு கையேந்தி நிற்கிறது வீடுதோறும் தேங்கிய மழைநீரும் இனி வரவிருக்கும் மழைத்தொற்று நோய்களும்..

உதவி என்பது உயிர்க்கேட்டு நிற்கும் இவ்வேளையில் எங்கே போனார்கள் நம் அரசியல், திரைத்துறை, மருத்துவம், வியாபாரம் மற்றும் இதர பல தொழில்சார்ந்த ஜாம்பவான்களெல்லாம் ?

வெளியே வாருங்கள். வெட்கமின்றி வெளியே வாருங்கள். பணமுள்ளோரே; உதவிசெய்வதற்கு நெஞ்சுரமேன்? நெஞ்சிலீரம் உண்டென்றுக் காட்ட தயங்காது வந்துவிடுங்கள். நாளைக்கே மழை நினைத்தால் உங்களையும் மூழ்கடிக்கலாம்.

சென்னையே மிதக்கிறதெனில் நாமெல்லாம் எவ்வளவு..?

இருப்போர் இல்லார்க்குக் கொடுத்து உதவாததைவிட பச்சைதுரோகம் உலகிலறிய வேறில்லை..

உண்மையில்; இளைஞர்களும், நினைத்ததுமெடுத்துக் கொடுத்துவிட இயலாதோறும் தெருவில் இறங்கி இரைஞ்சும் மனநிலை பணமிருப்போருக்கெல்லாம் இம்மியளவு இருந்துவிட்டால் போதும்; இயற்கையின் இப்பேரிடரை நாம் நம் மனிதத்தால் இலகுவாக கடந்துவிடலாம்..

மனிதம் கொள்ளுங்கள். பணமிருப்போரே மனிதத்தோடு சிந்தியுங்கள். பணத்தை உதவிக்கு விதைத்துச்செல்லுங்கள், நாளை பணம் இரட்டிப்பாய் விளையும் நம்புங்கள்!!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மழைக்கால அவசர மடல்..

Rain_Beautiful

உறவுகளுக்கு வணக்கம்,

மழையால் தவிக்கும் உறவுகளின் நிலையையெண்ணி மனசு பாடாய் படுகிறது.

முடிந்தவரை ஒருவருக்கொருவர் அக்கறைக் காட்டுங்கள். எவரவர் வீட்டில் மழை நனைக்காது ஒதுங்கி நின்றுக்கொள்ள இயலுமோ அவரவர் இடம் தந்து உதவுங்கள்.

எத்தனை காசு பணம் வைத்திருந்தாலும் இந்த உயிர் ஒருமுறை போனால் வராது; போகும் முன் உதவ முன்வாருங்கள்.

நம் ஒவ்வொருவராலும் நமக்குக் கீழுள்ளோருக்கு ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் உதவமுடியும், அதை செய்ய சிந்தியுங்கள். உடனே செயல் படுங்கள்.

இனி அரசு கடவுள் அவன் இவன் என யாரை எதிர்நோக்கியும் உடனடி பலனில்லை. தண்ணீர் கழுத்து வரை மூடியவரால் தலைமூடும் மற்றவரை ஒரு கையில் இழுத்து மேல்விடமுடியுமெனில் செய்து ஒரு உயிரைக் காப்பற்றுங்கள்.

உடலால் உதவி வருவோர், உணவு செய்து வழங்குவோர், மருத்துவ உதவி புரிவோர் போன்றோருக்கு அவசியப்படுகையில் பணத்தைமட்டும் வைத்திருப்போர்; அதையும் ஒரு உயிர்காக்கும் ஆயுதமென்று எண்ணி வேண்டுமிடத்தில் கொடுத்து நிறையுங்கள்.

இது மட்டும் தான் தருணம் நமது மனிதத்தைக் காட்டி நமை நாம் இயன்றவரைக் காத்துக்கொள்ள. எனவே விரைந்து உடனிருப்போருக்கு ஒருவருக்கு ஒருவரென எல்லோருமே தன்னால் முடிந்த உதவியைச் செய்து, இயலாமையில் பிறருக்கு உதவினேன் எனும் சின்னதொரு நிம்மதியையேனும் பெற்று மனதால் வானளவிற்கு நிமிர்ந்து நில்லுங்கள்.

மிக முக்கியம்; இது மழை, நாம் வேண்டி வேண்டி கேட்ட மழை. நீரில்லை மழையில்லை நதியோடவில்லை என்று நாம் கதறி கதறி யழுது சாபமிட்டதன்பேரில் கோபத்தோடுப் பெய்யும் பேய்மழை. இதை இனி இதோ நின்றுவிடுமென்று எண்ணி எண்ணி நாமே நிறுத்துவோம்.

எல்லோருமே மனதில் மழை நின்றுவிடும் என்று எண்ணுங்கள். விரைவில் நின்றுவிடுமென்று எண்ணுங்கள். இதோ நின்றுவிடும், இனி நமக்கெல்லாம் ஒன்றும் ஒரு கேடும் விளையாதென்று மனதால் உறுதியாக நம்புங்கள். எல்லோரின் ஒன்றுகூடிய எண்ண வலிமையால் கண்டிப்பாக இந்த மழையை நம்மால் நிறுத்தமுடியும்.

இயற்கைப் பெருஞ்சக்தி எல்லா உயிர்களையும் தீமையிலிருந்துக் காத்து நன்மைக்காய் விரைந்து இடம்பெயர்க்கட்டும்..

நன்னீர் பெருகப்பெருகநிலைகுலையா வளத்தோடு நிலைத்துஎம்மக்கள் நீடு வாழி தாயே..
————————————————————————
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

38, காதலின் திராவக நொடிகள்..

Sad_love_music1_largeனக்காக
உள்ளே கரையும் மிட்டாய் நினைவுகள்
அத்தனை இனிப்பு..

உன் கண்களில் ஒளிரும்
புன்னகைப் பேரலையால் – என்
உயிரெல்லாம் வெளிச்சம்..

நெஞ்சைச் சுடும் உன்
செந்தீ பார்வை
பட்ட இடமெல்லாம் காதல்..

உன் கரும்புப் பேச்சை
மென்றுத் தின்ற காதோரம் பல
கனவுகளின் சப்தம்..

உன் தெளிந்தப் பேச்சில்
துளிர்க்கும் ஆசையை ஒடித்து ஒடித்துநான்
மெல்ல எனக்குள் மரணம்!!
—————————————————————

2

3d5bf937cddcef63b41e2c95fb8914a3

 

 

 

 

 

 

 

 

யிரை ஒருப்பார்வைக்கே வாங்கிக்கொண்டாய்
உலகையுன் சிரிப்பிற்குள் பூட்டிக்கொண்டாய்
உன்னிடம் பேசிக்குவித்த வார்த்தைகளுள்
வெறும் கனவுகளோடு எனை மிச்சமாக்கினாய்..,

எரும்பூரித் தேய்த்த இடம்போல
மனசெல்லாம் நீ வலியாய் பதிந்துப்போனாய்
நினைவுகளுள் கனத்து கனத்து – நீயில்லாத
இடத்திலெனை தொலையவைத்தாய்..,

கல்சுமக்கும் நீரைப்போல – உனைத்
தாங்கித் தாங்கியே எனைக் கண்ணீரிள் மூழ்கடித்தாய்
நான் தீர தீர நீ உள்ளேச் செல்கிறாய்
என்னுள் இன்னும் ஆழ ஆழப் பதிகிறாய்..

அழுவதும் சிரிப்பதும்
இப்போதெல்லாம் அதுவாக நடக்கிறது
உண்பதும் உறங்குவதும் – நீயின்றி உன்
நினைவோடு நோகிறது

வருவாய் என்றுச் சொன்ன வார்த்தையிலிருந்தே
வாழ்க்கை – புதிதாய் முளைக்கிறது
இந்தப் பிரிவு மட்டும்
பிரிவு மட்டும் நெஞ்சை அப்படிப் பிளக்கிறது..

இதோ.., நீ விட்டுப்போன நினைவுகளில்தான்
இப்போதும் அமர்ந்திருக்கிறேன்;
இன்னும் கொஞ்சத்திற்காய்
கண்ணீரால் உயிர்த்திருக்கிறேன்

வா; நான் என்பதும் நீ என்பதும் மறையும் முன் வா..
—————————————————————

3

tumblr_mz58olyykB1sncodwo1_500

தோ அவள் மாடிவீட்டின்
மேல்தளத்தில் நின்றிருக்கிறாள்
நான் ஊர்தலைவர் மகனுக்குத்
திருமணமென்று வெளியூரிலிருந்து வந்திருக்கிறேன்.,

 

மாப்பிள்ளை ஊர்வலத்தில் பத்தோடு ஒன்று
பதினொன்றாய் –
நானும் வந்துக்கொண்டிருக்க
எனை தேடிதேடி சுழல்கிறது
அவளுடைய கண்கள்..

எனக்கும் அவளெப்படி இருக்கிறாளென்று
பார்க்கத்தான் ஆசை,

அதே நிறத்து ஆடை
தோற்றம்
அதே இடத்தில நிற்கும்
அவள்;

நிச்சையம் அவள்தானென்றுத் தெரிகிறது,
ஆனாலும் அவளை சரியாகப்
பார்க்க ஆசை,
அவளெப்படி இருக்கிறாள் என்று
கேட்க ஆசை,
நேராக ஒரேயொரு முறை அந்த விழிகளை
இறக்குமுன் பார்த்துவிட மாட்டோமா யென்று
தவம் நிகழ்வதுண்டு எனக்குள்;

ஆசைதான் ஆனால் எப்படிப் பார்ப்பது?
கூட்டம் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது
நானும்
உடன் வருவோர்களோடு பேசிக்கொண்டே
நகர்கிறேன்..

மனசு மட்டும்
மாடி மீதேறி அவளுக்கு
அருகில் நின்று
என் காதலியை தேடிக்கொண்டிருக்கிறது,

என்றாலும் எப்படி நேராகப் பார்ப்பேன்
அவளை?
எல்லோரின் முன்புமாக அவளை நானெப்படிப் பார்ப்பது ?
இன்று அவள் யாரோ
நான் யாரோ
எங்களுக்குள் நாங்கள் வாழ்வதற்கான
கதையைத்தான் ஒரு இருபதாண்டுக்கு முன்
சாதிக் குப்பையினுள் போட்டு புதைத்துவிட்டோமே;

காதலின் புதைக்குழிகளாகத்தான்
இன்று
குடும்பத்துள் நிறைய இதயங்கள் சிரித்துக்கொண்டு
விளக்காய் எரிவதை
வலிப்பவருக்குத் தானே புரியும்;

காதலென்பது அன்பென்று
புரியாத இச்சமூகத்தில்தான்
நானின்று தெருவோரக் கூட்டத்திலும்
அவள் தனியே மாடியிலுமாய் நிற்கிறோம்..,

அவள் பார்க்கும் தேடும்
கண்களைக் காணதவன்போல
இரண்டு மனங்களை மிதித்தேறி – இதோ
தூரத்தில் செல்கிறேன்..
நண்பர் பேசப்பேச சிரித்துக்கொண்டே போகிறேன்
என்றாலும்
கண்களில் நீர் கூடி கூடி வழிகிறது
என்னாச்சு என்னாச்சு என்கிறார்கள்
ஒன்றுமில்லை தூசி என்கிறேன்,
அவளும் தூசி என்றுச் சொல்லி கண்களைத்
துடைத்துக்கொண்டிருப்பாள்; ஒருமுறையேனும்
கேவி அழுதிருப்பாள்;

பிரிவு
எப்பேர்பட்ட வலியென்று
பிரியாதவரை தெரியாது,
பிரிந்ததும்தான் தெரியும்
அது வலிமட்டுமல்ல நினைவுதோறும் உயிரறுக்குமென்று,

எங்களுக்கும் அறுத்தது
ஆனால் – ஏன் பிரிந்தோம்
எப்படிப் பிரிந்தோம்
எதற்காக திருமணம் செய்துக்கொள்ளவில்லை
இப்படி நிறையக் கேள்விகள்
பொதுவாக எழலாம்,

பதில்களை வேண்டுமெனில்
உங்களுக்குள்ளும் தேடிப்பாருங்கள்
எனக்குத் தெரியும் –
நம்மில் நிறையப்பேர் இப்படி
தெருவிலும்
வீட்டிலும்தான் இதயக் கதவடைந்து
வெறும் நினைவுகளின் கூடாகத் திரிகிறோம்..,

வேண்டுமெனில்
கண்களைமூடி மனதிற்குள்
இரண்டுச்சொட்டுக் கண்ணீரை விட்டுக்கொள்ளுங்கள்
அந்தக் கண்ணீரில் கழுவப்பட்டு
இந்தச் சமூகம்
தனது சாதிவெறியை கழுவிக்கொள்ளட்டும்.,

அதற்குப்பின் –
காதலைப் பற்றி
பிரிவைப்பற்றி
நாங்களிப்படி திரும்பிக்கூட பார்க்காமல்
கண்ணீரோடு போவதுபற்றியெல்லாம் சிந்திப்போம்..
—————————————————————
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, பிஞ்சுப்பூ கண்ணழகே..

image_preview

1
கை
யில் அழுக்கென்கிறேன்
அப்படியே முத்தமிடுகிறாய்..

அச்சோ!!!!! வியர்வை என்கிறேன்
அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்..

அம்மம்மா போதும் போதும்
என்கிறேன்
பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய்

இயற்கை
உன்னைத் தாயாகவும்
என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்..
——————————————————————–

2
ண்சிமிட்டி
கண்சிமிட்டி
அத்தனை அழகாகப் பேசுகிறாய்,
மொத்தத்தில் உயிரென்பதை
நீயேத் தாங்குகிறாய்,
நீ பேசும் சொற்களும்
சிரிப்பும் மட்டுமே
பொக்கிசம் ஆகிறதெனக்கு;

நீ பேசாத
சிரிக்காத
எனும் இரண்டே சொற்களுள்
தற்கொலைப் புரிகிறதென் நிகழ்காலம்!
——————————————————————–

3
பு
துத்துணி
உடுத்திக்கொண்டு
அப்பாவைத் தேடுகிறாய்,

சாப்பிட யாரேனும்
மிட்டாய் வாங்கித்தந்தால்
காட்ட அப்பாவைத் தேடுகிறாய்,

வீட்டுப்பாடதைத் திருத்தி
ஐந்து நட்சத்திரத்தை ஆசிரியை போட்டுவிட்டால்
சந்தோசத்தில் அப்பாவைத் தேடுகிறாய்,

அண்ணன் அடித்துவிட்டான்
அம்மா கடிந்துக்கொண்டால்
சொல்ல அப்பாவைத் தேடுகிறாய்..

நீ தேடுவாய் தேடுவாய்
என்றுதான்
நான் அதற்குள் மட்டுமே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்!
——————————————————————–

4
ம்மா திட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

அண்ணன் வாலாட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

பள்ளிக்கூடத்தில்கூட
சக மாணவிகள் சண்டையிட்டாலோ
திட்டிப் பேசினாலோ அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்..

எல்லோரும் கேட்கிறார்கள் உனை
உனக்கு அப்பா மட்டும்தான்
கண்ணுக்குத் தெரியுமா ?

நீ சொல்கிறாய்
ஆமாம், எனக்கு எங்கப்பா மட்டுமே எங்கும் தெரிவார்..
——————————————————————–

5
பொ
ம்மைன்னா
உனக்கு ரொம்பப் பிடிக்கும்

அதுக்கு நீ
பொட்டுவைத்து
சட்டைப்போட்டு
சோறு ஊட்டி
அலமாரியிலிருந்து பேம்பசைக் கூட
பொம்மைக்கென எடுத்துவைத்துக் கொள்கிறாய்

எங்களுக்கு சிரிப்பு ஒருபக்கம்
உனதறிவின் முதிர்ச்சி ஒருபக்கம்..

குழந்தை வளர்ந்தால்
சந்தோசப்படலாம் தான்;
பெண்குழந்தை வளர்ந்தால்
இந்தச் சமூகம் அப்பாக்களை
அதிக சந்தோசப்பட விடுவதில்லை..
——————————————————————–
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக