அவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)

kamalllllllllllllனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் கண்டெடுக்கப்பட்ட முத்தது சிரிப்பு. அந்த முத்தினை முகத்தில் அணிந்துக்கொள்ளவும் ஒரு மனித தரம் தேவையிருக்கிறது. அந்த தரத்திற்கு உரியவர் கமல்; என்கிறதிந்த உத்தம வில்லன்.

மனிதர் நோகாது நடப்பது முள்ளில்மேல் நடப்பதற்குச் சமம், வலியைப் பொறுத்துக்கொள்ள மனதுக்குப் பிடித்தத் தோள்கள் தேவையிருக்கிறது. வலி மறப்பதற்கு சில குறுக்குச்சந்து புகுந்து நேராய் வந்ததாய் காட்டவேண்டியிருக்கிறது. நேராய் வந்ததாய்ச்சொன்ன பொய்யை செரிக்கவும், பொய்யுண்ட வாயை மறைக்கவும் நஞ்சாகத் தைக்கும் வேறுசில சந்தர்ப்பத்தை மனிதர்களை தாங்கியும் சகித்துக்கொள்ளவும் அவசியமேற்பட்டும்விடுகிறது. ஆக வாழ்க்கையொன்றும் வேறேதோ தான் காணாததொருக் காட்சியோ, புரியாததொரு புதிரெல்லாமோமெல்லாமில்லை; நாம் விதைத்து, நாம் வளர்த்த மரத்திலேறி நாமே பறித்து, நாமே சுவைக்கும் கனியும், உண்ட வலியால் துடித்துச்சாகும் நிசமுமன்றி வேறில்லை என்கிறதிந்தப் படத்தின் நீதியும்.

கமல் சரியானவரா தவறானவரா என்பதெல்லாம் அவரவர் பார்வைக்கிணங்கி வளைந்துப்போகும் ஒன்று. நல்ல மனிதம் மிக்க மனிதர் அல்லது சமூக நன்மைக்கு ஏங்கும் அக்கறைக்கொள்ளும் அருமையானப் பிள்ளை, மிக உத்தமமான மகா கலைஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படிப்பட்ட, அவரின் முகம் மாறாதப் பாத்திரத்தோடு துவங்கி நம் முகம் கோணாது முடிகிறதிந்த திரு. கமல்ஹாசனின் எண்ணம் வென்ற உத்தம வில்லன்.

பொதுவாக, கடவுள் என்பதற்கு உலகம் பெரிய சிறிய என பலவாயிரம் காரணங்களை விளக்கங்களைக் கொண்டு கோடான கோடி ஆண்டுகளை குடித்துவிட்டு மீண்டும் புதியதொரு குழப்பத்தோடும் விடைகளோடும் உண்மையோடும் பொய்யுனோடுமே புரண்டு புரண்டு சுழன்றுக்கொண்டுள்ளது. சத்தியத்தோடுப் பார்த்தால் நம்பிக்கையோடு ஏறியமரும் உண்மையின் நாற்காலியில்தான் கடவுளெனும் புனிதம் மிக கம்பீரமாய் அமர்ந்திருப்பதாக எனக்கு நம்பிக்கை. மனப் பீடத்தில் சுத்தமாய் அமரும் வார்த்தைகளும் எண்ணங்களுமே புனிதம் பூசிக் கொள்கின்றன. அடுத்தவருக்கு வலிக்கையில் அழுவதும், முடியாமல் துவண்டு விழுகையில் தோள்சாய மனதை தருவதும், இருப்பதில் பாதியில்லை என்றாலும் கொஞ்சத்தையேனும் இல்லாதவருக்கு கொடுத்து இருப்பதில் நிம்மதியடையும் மனக்கூட்டில்தான் தெய்வத்தின் வாசனை நிரம்பிக் கிடப்பதாய் எனக்கு நம்பிக்கை.

எனக்கில்லாவிட்டாலென்ன அவனுக்கிருக்கட்டுமே, அவனால் இயலாவிட்டாலென்ன என்னால் எதுவும் முடியுமே எனும் நம்பிக்கையில் பெருந்தன்மையில் சுயநலம் புகாதவரை, கர்வம் வந்து சேராதளவில்; கடவுள் தன்மைக்குள் வாழும் மனிதராகவே இயற்கை நமை உச்சிமுகர்ந்து ஏற்றுக்கொள்கிறது.

மரம் ஒடிக்கையில் மலர் பறிக்கையில் கூட மனசழுகிறது, உயிர் எடுக்கையில் வலி கொடுக்கையில் கூட மனிதம் நோகிறதுப்போன்றதொரு இரக்கத்தின் மானுடப் பதத்தில், மேல் கீழ் விகிதாச்சாரமகற்றி தோளோடு தோள் நிற்கும் ஒற்றுமையின் பலத்தில், அவன் அவள் அது இது ஏதும்’ எல்லாமும்’ இயற்கையெனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளிருந்து வெளிவந்த கோடுகளே எனும் சமப்பார்வையின் புரிதலில், அவைகள் அத்தனையும் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டாலும் மூலத்தில் எல்லாமும் சமம், எல்லாம் ஒன்றே எனும் தத்துவத்தில்; சமயம் கலந்து’ சாதி பிரித்து’ இன்று அதிலும் வேறு பலவாய் திரிந்துகிடக்கும் உலகத்தீரே; சற்று அறிவுகொண்டும் பாருங்களேன் எனும் பதைபதைப்பினைத் தாங்கியே தனது நடிப்பெனும் சக்கரக் கால்களோடு படங்கள்தோறும் வளையவருகிறார் திரு. கமல்ஹாசன். இந்தப் படத்திலும் அப்படி நிறையக் காட்சிகளுண்டு.

ஒருவனைக் குற்றவாளியாகக் காட்டி, கடைசியில் அவனுக்கே நரசிம்ம வேடம் புகுத்தி, இதுவரை கேட்ட கதைக்கு மாறாக இரண்ய கசிபுவின் கையினால் நரசிம்மரைக் கொள்வதாகக் காட்டி அதற்கு பார்ப்போரை ஓ வென்றுவிட்டான் மன்னனென கைத் தட்டவும் வைத்த திறமை திரைக்கதையின் வலிமை என்றாலும், அன்றெல்லாம் திரைப்படங்களின் இத்தகைய வலிமையைக் கொண்டுதான் இன்று வணங்கும் பல கடவுள்களுக்கு நாம் அன்றே அத்தனை அழகிய முகங்களையும், கதைகளுக்கேற்ற காட்சிகளையும் தந்தோம் என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.

ஆனால் அதெல்லாம் ஒரு நன்மையை மனதில் கொண்டு, நேர்மையை புகுத்த எண்ணி, கண்ணியத்தை கற்றுத் தருவதற்காக, புண்ணியம் இதுவென்றும்’ பாவம் இதுவென்றும்’ நன்மையை பெருக்கவும்’ தீமையை அகற்றவும்’ நீதியை நிலைநிறுத்தவும்’ அநீதியை எதிர்க்கவும்’ வீரம் புகட்டவும்’ கர்வம் அழிக்கவும்’ வெறும் காற்றுவழி வந்தச் செய்தியோடு நில்லாமல், மனசு வழி கண்ட ஞானத்தையும் பாடமாக்கிய கதைகள் அவை என்பதையும் இங்கே ஏற்கவேண்டியுள்ளது.

ஒரு சாதாரண மனிதன், பணம் புகழ் வெற்றி உறவு என எல்லாவற்றிலும் நிறைவாகி போனாலும், குறையாய் மனதில் சுமந்துள்ள வலிகளும் ஏராளம் இருக்கலாம். அதிருப்பதை தெரியாமல்தான் எருதின் புண்மீது குத்தும் காக்கைகளாக நாம் நம்மோடு சுற்றியுள்ள நிறைய பேரை வலியறியாமலே அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் படம் உணர்த்துகிறது.

மனோரஞ்சன் சற்று பிரபலமான நாயகனாக மாறியதும் மாற்றிய பெரியவரின் மகளை மணப்பதற்காக தான் நேசித்த பெண்ணின் வாழ்வை தனையறியாது கண்ணீருக்குள் ஆழ்த்திய உண்மை தெரியவருகையில் காதலி இறந்துப் போயிருக்கிறாள். காதலியின் மகளுக்கு உண்மை தெரிகையில் மனோரஞ்சன் இறந்துப் போகிறான். ஆக, அவன் காதலித்த, அவனை காதலித்த இருவரின் மன பாரத்தையும் பகிர்ந்துக்கொள்ள மூன்றாவது ஒருத்தி தேவைபடுகிறாள். இந்த மூவரையும் காதலித்த நியாயத்தை எடுத்துச் சொல்லித்தான் உத்தமமான வில்லனாகிவிடுகிறார் மனோரஞ்சன்.

மனோரஞ்சன் பாத்திரம் மனதை வருடவும், காமத்தின் வெப்பத்தில் குழந்தைகளோடு சென்றிருப்பதால் சற்று உடல்கூசவும், காதலின் வலியில் கண்ணீர் உதிர்க்கவும், வாலிபந்தோறும் திமிரும் வாஞ்சையில் ரசனை மனதிற்குள் இனிக்கவும் செய்தாலும், உத்தமனின் பாத்திரமே திரு. கமல்ஹாசனை நடிப்பின் உச்சத்தில் கொண்டுபோய் கனகம்பீரமாய் காட்டுகிறது.

கடைசியில் நரசிம்மராக திரு. நாசரும், இரண்ய கசிபுவாக திரு. கமல்ஹாசனும் இளவரசியாக திருமதி. பூஜா குமாரும் அவர்களோடு இதர பாத்திரங்களாக நடித்த அனைவரின் நடிப்புமே அழகு அழகு அத்தனை அழகு.

ஆங்காங்கே வரும் கமலின் நையாண்டியில் சில சிலருக்கு நெருடலாம். வசீகரம் எனும் பெயரில் உள்ளே நடப்பதைகூட வெளியே திறந்துக்காட்டும் காட்சியும் வசனமும் பெண்களை ஒருசில இடத்தில் ச்ச.. சொல்லவைக்கலாம்.

ஆனாலும் இப்படி ஒருசில மறப்பின் தெரியும் அனைத்து கலைஞர்களின் உழைப்பையும், நளினமாக எல்லோர் நாக்கிலும் வளைந்தாடும் தமிழின் சுவையையும், மனதை கொள்ளைக்கொண்டு வேறொரு காலத்திற்கு நமை கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் பழங்காலத்துக் காட்சியமைப்பையும், திரைக்கதை ஓட்டத்தையும் மனசு மெச்சாமலில்லை.

மிக முக்கியமாக ஒரு ஆசானுக்கு ஒரு மாணவன் செய்யும் மரியாதையாக; இதுவரை காமிராவின் கண்களுள் கதாப்பாத்திரமாக சிக்காதிருந்த இயக்குனர் சிகரம் திரு. பாலச்சந்தரை படமெங்கும் நிறைத்து அவரின் நிஜமுகத்தை நமக்குக் காட்டி இறந்தப்பின்பும் அவரை கதையினூடே வாழவைதிருக்கிறார் கமல். அதிலும் ஐயா திரு. பாலச்சந்தரின் குரலைக் கேட்கையில் நாகேஷின் முகமும் குரலும் தனையறியாது நமக்கு நினைவினுள் வந்துவிடுகிறது.

கமலின் மீது எழும் மரியாதை இப்படித் தான் எழுகிறது; ஒரு நட்பாக, பகுத்துச் சிந்திக்கும் அறிவாக, உடனுள்ளோரையெல்லாம் சேர்த்து பெருமை செய்யும் மனதாக, பார்த்ததும் சிரிக்கவைத்திடும் புன்னகையாக, மெல்ல மெல்ல மனதினுள் புகுந்துவிடுகையில்; ச்ச சின்ன சின்ன முரண்களையெல்லாம் தூக்கிப் எறி, யாரிங்கே நேர்? எல்லாம் அகற்றி அவரை ஒரு நல்ல திரைகலைஞராக மட்டும் பாரென்று ஒரு கட்டத்தில் நம் மனது நமக்கே அவரை சிபாரிசு செய்துவிடுகிறது.

குறிப்பாக, குடிக்கையில், கள்ளத் தொடர்பு கொள்கையில், தனக்கான கண்ணியத்தை மீறி நடக்கையிலெல்லாம் அதைப் பார்க்கும் எத்தனையோ பேருக்கு ச்ச இவன் உண்மையிலேயே இப்படித்தான்போல் என்று எண்ணம் வரலாம், ஆயினும் அதற்கெல்லாம் சமரசம் செய்துக்கொள்ளாது, அந்த கதாபாத்திரமாக மட்டும் வந்து நடித்திருப்பது கமலின் தனித் தன்மைதான்.

அதிலும், ஒரு புற்று நோயாளி ஒரு நல்ல கலைஞனாக வெல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. அந்த ‘இயக்குனர் சிகரம்’ காட்டும் நாடகத்தின் இறுதிக்காட்சி, அதுவாகவே மாறும் கமலின் முகபாவங்கள் அத்தனை அபாராம். நடிப்புத் திறமையின் உச்சமது. கூடவே கவிதையின் குரலில் தமிழின் அழகு கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது. அதற்கேற்றாற்போல் ஒலிக்கும் இசையும் ஒவ்வொரு காட்சி நகர்கையிலும் மனதுள் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஈரத்தோடு சென்று உணர்வினுள் அப்பட்டமாய் ஒட்டிக்கொள்கிறது.

எது எப்படியோ; இந்த உத்தம வில்லன் உண்மையில் வில்லன்தான்; ஆனாலும் உத்தமமுமானவன். உத்தமமான அனைத்துக் கலைஞர்களும் பல்லாண்டு பல்லாண்டு பெருவாழ்வு வாழ்க..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..

457239_313519048741399_1835410716_o
வானத்திலிருந்து வெள்ளி விழுந்து
வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி..
காத்திருந்தக் குயிலுக்கு – பாட
ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி..

பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும்
பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி..
வாழுங்காலம் வழியெங்கும் – இனி
இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி

பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின்
திறமை எங்கும் படர மகிழ்ச்சி..
ஒலியோடு ஒளியாக – உன்னவள் சிரிப்பில்
நீ பூப்பூவாய்ப் பூத்திருக்க மகிழ்ச்சி..

சிறகடிக்கும் காக்கைக்கும் புதுப்
பாட்டு வந்தளவு மகிழ்ச்சி..
புத்தம்புதிய ஆடையைப்போல நீ – புது
ஆயுளையும் உடுத்திக்கொள்வது மகிழ்ச்சி..

கனவு சுமந்து கனவு சுமந்து நீயவள்
கண் குடிபோனது மகிழ்ச்சி..
இனி கண்ணொன்று கண்ணிரண்டென நீ – பல்கி
பெருகி பெருகி நன்னிலமெங்கும் நிலைத்திருக்க மகிழ்ச்சி..

குறள் போல அளவாய்
குறள் போல ஆழமாய்
குறள் போல எழிலாய்
குறள் போல அழியாமல் உன்புகழ் நிலைத்திருக்க மகிழ்ச்சி..

வனமெங்கும் மலர்களின் சிரிப்பு
நிலமெங்கும் நிம்மதியின் வாசம்
கடலெங்கும் உனை வாழ்த்தி ஓசை
புவியெங்கும் உன் திருமணம் நடக்கும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

எங்கும் மகிழ்ச்சியே நிறைந்திருக்க
மணமகன் முனு. கோட்டீஸ்வரன்
மணமகள் கு. யுவராணி நீவீர் இருவரும்
வளமோடும் நலமோடும்
செல்வங்கள் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்..

பேரன்புடன்..

கடல்கடந்த அன்போடு.. முழு நினைவோடு..

வித்யாசாகர்

(வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், குவைத்)

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

30, இரண்டு சொட்டுக் கடல்..

sabdhathai mownathaal udaikkiren

 

 

 

 

 

 

 

 

 

 

த்தத்தில்
மறையும் உலகை
மௌனத்தால் திறக்கிறேன்.,

ரத்தத்தில்
உறையும் மனிதத்தை
அன்பினால் பிரிக்கிறேன்.,

முத்தத்தில்
ஊறும் மனதிரண்டை
இதோ இதோ –
உனக்காக ஒன்றும்
எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்..

உலகெங்கும்
பூக்கும்
புன்னகையனைத்தையும்
மனதால்
பறித்துக்கொண்டு வா பெண்ணே

முத்தங்களின்
சிறகு ஒன்று நீ
மற்றொன்று நானாய்
அன்பிருக்கும் வானமெங்கும் பறப்போம்
.
அன்பு தீரும்போது
அங்கேயே
இறப்போம்..

நம் இறப்பு சொட்டும்
மழைதோறும்
ஈரந்தோறும்
கடல்
கடலாய் கடலாய்
இப்பூவுலகு
வனமாய் வனமாய்
வெளியெங்கும் அழகு சொட்டச் சொட்ட
மீண்டும் –
புதிதாய்ப் பிறக்கட்டும்!!!
————————————————-

idhu aanalai adhu pennalai

து ஆணலை
அது பெண்ணலை
ஆனால் –
இரண்டுமே கடல்..

இது நீலம்
அது வெள்ளை
ஆனால் –
இரண்டுமே வானம்..

 

இது காற்று
அது நீர்
ஆனால் –
இரண்டுமே உயிர்..

இது உயிர்
அது உடல்
ஆனால் –
இரண்டுமே நீ..

என் நீ!!
——————————————–
வித்யாசாகர்

 

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)

karthi_142553655400

கொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை? எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று மன்னிச்சிக்கன்னு போய் மன்னிப்புக் கேட்கிற குணம் கொம்பனின் குணம் தான். கோயிலுக்கு மனசு சுத்தமாப் போகணுமே யொழிய சாதி புத்தியாப் போகக் கூடாதுன்னு நினைக்கிற சீர்திருத்த அறிவு கொம்பனுக்கான அறிவு தான்., பெண்களை இழிவு படுத்துறது தவறு’ பெண்களை வெறும் போக பொருளாப் பார்ப்பது பிறப்பிற்கு இழுக்குன்னு உணர்றது உத்தமம் தான், பெண்களை பெருசா மதிச்சா அவர்கள் பெருசா நடக்கும் பண்புல ஒரு பரம்பரையே நாளைக்கு புரண்டுபடுக்கும்னு நம்பும் நம்பிக்கையான ஆணை ஒரு கொம்பனா பார்ப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

நிறைய இடங்கள் சுவாரசியம் கூட்டியும், நிறைய வசனங்கள் ஆமென்று தலையாட்டவைக்கவும், நிறைய காட்சிகள் நம் ஊரை மனிதர்களை உறவுகளை நினைவு படுத்தவும் செய்கிறது. அந்த ராஜ்கிரண் சாமியாடி ஓடிவருகையில் காட்டும் ஆக்ரோசம் நடிப்பின் உச்சம் மட்டுமல்ல கலையம்சதின் நிதர்சன சாட்சியாகத் திகழ்கிறது. அவரை ஒரு அப்பாவாகவே உள்வாங்கிக் கொண்டது அவரின் திறன் என்றாலும் அவரை இத்தனை நேர்த்தியாக இடம்பார்த்துப் பொருத்திய பெருமை இயக்குனரையும் சாரும்.

“இந்தா மோதிரம் மாட்டிக்கோ.. இந்தா பட்டுவேட்டி கட்டிக்கோ.. இனி மாமனார்ங்க இல்லை’ பெண்ணைக் கட்டின மருமகனுங்கதான் இப்படி மாமனார்களுக்கு வாங்கித் தருணமாம்; அப்படின்னு நான் சொல்லலைப்பா உங்க மாப்பிள்ளைச் சொன்னாருப்பா” என்று கண்ணடிக்கும் பழனியும் பழனியின் அப்பாவும் அசத்தல்.

கதாநாயகி பழனி வந்துப் போகுமிடங்கள் மிக நேர்த்தி. அப்பாவிற்காக வெறுமனே பறிந்துப் பேசாமல் பாசத்தின் வெளிப்பாடாக மட்டுமே அவர் வரும் காட்சிகள் மனசுக்குள் சற்று கூடுதலாகவே கைதட்டவைக்கிறது. அடிதடி காட்சிகள், குத்து, கொலை என்று கொஞ்சம் ரத்தத்தால் மிரட்டி இருந்தாலும் அதற்கான நியாயத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடும் காட்சியிடம் முகம் சுழிப்பு வரவில்லை; மாறாக இவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியையும் நினைவில் இட்டுச் சென்றதில் இயக்குனர் கொஞ்சம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம் தான்..

karthi_142751888740கொம்பனின் அத்தனை அசைவுகளும் அழகு. மாமனார் என்பதைக் கூட உணராது தாண்டும் மூர்கமான கோபத்தின் யதார்த்தத்தைக் கூட கார்த்தி அச்சுபிசகாமல் நடித்துள்ளார். உடம்பின் வளைவு, பேச்சின் நளினம், உணர்வில் சுழிக்கும் முகம், சிரிப்பில் மலரும் பார்வையின் அழகு என காட்சிதோறும் மிளிர்கிறார் தம்பி கார்த்தி. நிறையக் காட்சிகளில் சிவக்குமார் எட்டிப் பார்க்காமலில்லை என்றாலும், அதையும் தாண்டிய மிகப்பெரிய நடிப்புத்திறன் அவரிடம் உண்டென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

குறிப்பாக, பெண்ணைப் பெற்ற அப்பா நெற்றி மாதிரி கணவன் என்பவன் அதில் வைக்கும் சின்ன பொட்டு மாதிரி, சின்னதா இருந்தாலும் பொட்டு அழகு எனும் வசனங்கள் சமகாலத்தின் உறவுகளின் மீதான மதிப்பீடுகளை முன்வைப்பதாகவும் அதேநேரம், ஒரு பெண்ணைக் கட்டித்தந்த அத்தனை அப்பாக்களும் மருமகன்களுக்கு மாமா மட்டுமல்ல இன்னொரு அப்பாவிற்கு நிகர்தான் எனும் வசனமுமெல்லாம் உறவில் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி வாழ்வை அழகுபடுத்துவதாக இருந்தது.

“ஐயோ சம்மந்தி வீடா மனுசன் போவானா அங்க” எனும் வாழ்வைச் சொரியும் வசவு வசனங்களையெல்லாம் உடைத்துக்கொண்டு “இருண்ணே நானும் வரேன்னு” கொம்பனின் அம்மா அவனுடைய மனைவி மாமனாரோடு கொம்பனின் அடாவடியை எதிர்த்துக்கொண்டுப் போவது கதையம்சத்தின் உயர்வு. இப்படி அங்கங்கே படம்தோறும் அவர் அண்ணே அண்ணேன்னு ராஜ்கிரனோடு பாசத்தில் குழைய குழைய வளையவருவதெல்லாம் “நமது தற்கால உறவுகளின் தனி நியாயங்களை மாற்றி; பொது சமூகத்தின் சமதர்ம நியாயத்துள் கொண்டுச்சென்றுப் பார்த்தவரின் பார்வையாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

???????????????????????????????????????????????????????????????????????????கோவைசரளா ஒரு செதுக்கப்பட்ட அம்மா பாத்திரம். இன்னொரு ஆச்சிக்கு இப்படத்தின் பாத்திரம் முதற்புள்ளி என்பதை கொம்பன் வரலாற்றின் நினைவுள் தனது பெயரையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதுபோல தம்பி ராமையாவும் ஒரேபோன்ற சில  உணர்வுமருத்த நடிப்பை வசனத்தைப் போன்று ஏதுமில்லாமல் புதுப்பொலிவுடன் அழகாக நடிப்பின் வெளிப்பாடாகவே வந்துப் போகிறார்.

“எனக்கு கல்யாணம் ஆகலைன்னு கூட சொல்லுக்கா ஆனா எனக்குப் புள்ளை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதேக்கா என்று அவர் உருகுவதும், கார்த்தி வீட்டினுள் நுழைய “தோ இவன் தாக்கா ஏம்புள்ளைன்னு கொம்பனைக் காட்டுவதும் நெகிழ வைக்கிறது. அதுபோல, சமூக அக்கறை என்பது யாரோ ஒருத்தரைச் சார்ந்தது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதாநாயகன், வீரன், திறமைசாலி இருக்கிறான் அவனை வெளிக்கொண்டு வா என்று சிரிப்பின் ஊடே யதார்த்தமாகச் சொன்னவிதமும் நிறையப்பேருக்கு புரிந்திருக்கும். கருணாஸ் கூட கொஞ்சம் இப்படத்தின் மூலம் ஒரு நல்ல பாத்திர நடிகராக நினைவில் நிற்கிறார்.

மெல்ல வளஞ்சது ஆகாயம்., அப்பப்பா பச்சைவிட்டுப் போச்சே., அடி பிச்சுப்பூ உன்னைப் பார்த்தப்போ பேச வார்த்தை வல்லே.. போன்ற இனியப் பாடல்களும், பாட்டுக்கு ஏற்ற ஆட்டமும், அதற்கு ஏற்றாற்போன்ற காட்சியமைப்புமென ரசிகர்களை எழுந்துப் போகாமல் பாட்டிலும்கூட இருக்கையில் அமரவைத்தது சிறப்பு தான்.

karthi-lakshmi-menon_142553655450

கணவன் மனைவி, அம்மா பிள்ளை, அப்பா மகள் எனும் உறவுகளெல்லாம் மனிதராகப் பிறந்ததன் பயன். பொக்கிஷ நினைவு என்பது குடும்பத்துள் வாழும் மனிதர்களின் கூடிய சிநேகமும் மன்னிப்பும் ஏற்பும் விட்டுகொடுப்பும் பெருந்தன்மையும் தானில்லையா? அதனால் தான் இந்தக் கொம்பன் மனதில் சிம்மாசனம் தேடுகிறான்.

லட்சுமி மேனன் எங்கோ சேரநாட்டில் பிறந்தவள் என்றாலும் தமிழரின் ஆதிசொந்தம் என்பதை ரத்தத்தில் கொண்டுள்ளாற்போல் அத்தனை அசாத்திய அசைவு பேச்சு நடிப்பென பளிச்சென மனசுக்குள் தமிழச்சியாய் சிரிக்கிறார்.

ஒரு சிறந்த திரைப்படம் என்பது வேறென்ன; நல்ல நடிகர்கள், நல்ல கலைஞர்கள், சரியான ஆளுமை, அதற்கேற்ற திட்டம், எல்லோரின் ஒத்துழைப்பு என்பதுதானென்றால்; இந்தக் கொம்பன் அந்த வட்டத்தில் வெற்றியடைவான்.

சிலருக்கு அடிதடி காட்சிப்படம் என்பதாலும், கூடும் குறையும் யதார்த்தம் மீறிய சில எடுத்துக்காட்டத்தக்கக் காட்சிகளாலும் படம் மறுப்பு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் உறவுகளின் மனிதர்களின் யதார்த்தத்தை, உயர்ந்த குணத்தை, பாசம் பொங்கும் அழகு முகங்களை சிறந்த காமிராக் கண்களுள் கொண்டுவந்துக் காட்டியதன்மூலம் இந்த கொம்பன் வெற்றியடைவான். வாழ்த்துக்கள்!!

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு..

5715686277_4e0583acbe_b

1
ங்கொன்றும் அங்கொன்றுமாய்
இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே
இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென
நாளுக்குநாள் இறப்பவன் நான்..

எனது இறப்பில் எல்லோருக்கும்
பங்குண்டு..

எனது மரணம்
எப்போது நிகழ்ந்தாலும்
எனது உடலைச் சுற்றி இருப்போர்
அத்தனைப் பேரும் –
தானுமொரு கொலையாளி என்பதை
மறந்துவிடாதீர்கள்..

ஒருவேளை –

இந்தச் சமுதாயம் நாளை
தனது
தவறுகளை
விட்டொழிந்து நிற்குமெனில் – அன்று
மீண்டும் நான்
பிறந்துவருவேன்..

அப்போது
எனைப் பெற்றவர்களும்
நீங்களாகவே இருப்பீர்கள்!!
—————————————————————

2
ங்கெல்லாம்
என்னால்
போராட முடியவில்லையோ
அங்கெல்லாம் நான்
இறந்துக்கொண்டிருக்கிறேன்..

எங்கெல்லாம்
யாரையோ அடிக்கமுடியாமல்
அழுகிறேனோ
அங்கெல்லாம் அடி
எனது உயிர்மீது விழுகிறது,

கன்னத்தில் வழிந்தோடா
உள்ளத்துக் கண்ணீரில்
உயிர்மட்டுமே கரைகிறது..

வாழ்தலின் ஆசைகள் அத்தனையும்
நல்லதை எண்ணி எண்ணி
தீயதின் தடமகற்றும்
நேர்மையின் பாதை தேடி
முடமாகி முடமாகி விழுகிறது..

ஆனால் –

பிறரின் முடம்
இறப்பைப் பற்றியெல்லாம்தான்
உங்களுக்குக் கவலையில்லையே
மனிதர்களே.. (?)

நீங்கள் வாழுங்கள்
நீங்கள் உயிரோடிருக்கமட்டும்
எப்படியோ வாழ்ந்துப்போங்கள்!!
—————————————————————

3
யா
ருக்காகப் பெய்கிறது
மழை ?

யாருக்காகச்
சுடுகிறதிந்த வெளி ?

யாராலின்று
அசைகிறதிந்த நிலம் ?

யாரை நோக்கி விடிகிறது
என் பொழுது?

எல்லோருக்காகவும் அது
இல்லாதபட்சத்தில்;

ஏய் பொழுதே
சற்று கேள்
நாளைக்கு நீ எனக்காய் விடிந்துவிடாதே..
—————————————————————

4
தீ
ப்பந்தம் எடுத்தோடும்
வீரர்களைப் போல
யாராரோ விட்டுச்செல்லும்
மூச்சைத் தூக்கிக் கொண்டு
இன்னும்
எவ்வளவு தூரம் ஒடுவதோ..(?)

ஓடுவதில் எனக்கு சலிப்பில்லை
அது வாழ்க்கை
இயற்கை

இயல்பை எண்ணி இதோ
ஓடிக்கொண்டே
இருக்கிறேன்

ஆனால் –
சுயநலத்தில் வாழும்
தனக்காய் மட்டுமே வாழ்ந் திறக்கும்
பொது நலச் சிந்தனையே
அற்ற
பலரின்
நினைவுகளையெல்லாம்

சுமந்துக் கொண்டு
ஓடுவதைக் காட்டிலும்
அது நின்றுவிடுவது மேல்!!
—————————————————————

5
தொ
ண்டை கடந்ததும்
அது என்னவென்று தெரியாது

உயிர் போனதும்
நிர்வாணம் விளங்காது

எரிந்துப் போனவர்
சாமபல்கூட கரைந்துபோகும்

நினைவு கூட
காலத்துள் மறைந்துபோகும்

மொத்தத்தில்
யாதுமற்றவன் நீ மனிதா..,

எல்லாமுமாய் உனை
கற்பனைச் செய்தவைகள் தான்
யாதுமற்றதா யுனை
தொலைத்தும் விடுகிறது.,

கண்ணீருக்குப் பின்னேயும்
சிரிப்பிற்கு முடிவிலும் ஒரு
மயானம் காலத்துள்
எல்லோருக்குமாய் அகன்று விரிந்து
நீண்டு கிடக்கிறது;

அங்கே நீ
கொண்டுசெல்ல
மௌனத்தை வேண்டுமெனில்
சேமித்து வை!!
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக