Tag Archives: கவிதை

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்! உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்! விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்