Tag Archives: kaadhal

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1 நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————- 2 அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய் என்பாள் குழாயடியில் அந்தக்கா தூக்க முடியலக்கா என்பாய் அக்காவிடம் ஆமாமாம் இதயம் ரொம்ப கனமென்பாள் அந்தக்கா … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..

குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்