41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில்
சிணுங்கி பிறந்தவளோ,
ஒரு சிங்கார சிரிப்பிற்குள்
எனை உயிரோடு கொள்பவளோ;

டக்கும் பொழுதெல்லாம்
எனை காதலால் குடிப்பவளோ,
ஒரு கையளவு மனசாலே –
எனை காலத்திற்கும் சுமப்பவளோ;

தொடும் காற்றோ;
தொடாது சிலிர்க்கும் பூவிதழோ,
உள்புகும் ஆசை நெருப்போ –
உயிர்வரை பதிபவளோ;

ணர்வுகடலில் உயிர்த்தெழுந்த
ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ;
எதுவாகியும் –
எனக்காய் வாழ்பவளோ;

டலோர மணற்பரப்பாய்
மனசெல்லாம் நிறைந்தவளோ,
நான் தொட்டிடாத ஒரு கணத்தில் –
கவிதையாய் சிலிர்ப்பவளோ;

டைத்தெரு நடக்காமல்
முகத்தில் தாவணி வீசிய புன்னகையோ,
கனவுகளுக்குள் புகுந்து பகலை –
இருட்டிற்குள் தொலைப்பவளோ;

காற்றிடம் பேசி எனை
தென்றலாய் தரிப்ப்பவளோ
நதியிடம் சொல்லிக் காதலை –
இதயக் கடலுக்குள் கரைப்பவளோ;

னசெல்லாம் பல் தைத்து
ஒரு ஓரப் பார்வையில் தின்பாளோ,
ஒரேயொரு யுத்தம் செய்தேனும் –
என்னை ஏழுபிறப்பிற்கும் கொள்வாளோ;

தென்றலோ; நிலவோ; மலரோ;
எல்லாம் கடந்தவளோ நீ;
இவை ஏதுமற்ற காதலியோ –
எனக்கே எனக்காய் பிறந்த நீ – என் எல்லாமாய் ஆனவளோ!!
———————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 41) என் எல்லாமாய் ஆனவளே…

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    கதாநாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்று ஒரு பாட்டு எழுதும் காட்சி. அந்த காட்சிக்கு இந்த பாடல் பதிவானது..

    Like

  2. lakshminathan சொல்கிறார்:

    kathanayaganin kathal vetri yada valthukkal

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s