Monthly Archives: நவம்பர் 2010

22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..

கனவுகளை சேகரிப்போம் காடுபோல கூடி நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்; சமத்துவத்தை சொல்லி – தமிழர் பண்பில் மிஞ்சி எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம் தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!! ———————————————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து!!

எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை – எம் உணர்வை – மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை – விடுதலை வேட்கையாகக் கொண்டு – மொழி உணர்வை தமிழ் உணர்வென – என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட – பாடம் உண்டென மீண்டு – எமை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள், வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே செல்போனாய் அழைப்பவளே ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே! டிவி போல இருப்பவளே சீரியல் போல வளர்ந்தவளே விளம்பரமாய் வந்து வந்து பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே! எஃப் எம்மை போன்றவளே எது கேட்டாலும் தருபவளே பாட்டை விட இனிக்க இனிக்க நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே! லப்பு – டப்பாய் அடிப்பவளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்