50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;

பிறக்கையில் –
பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும்
புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த
மலரைப் போன்றவள்;

எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து
எள்ளி நகைப்போரை தினங் கடந்து
வாழப் பழகும் –
வலிமையானவள்..

செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் –
வயிறு கேட்பவள்;

கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில்
பஞ்சுத் தலையணை தினம் நனைய
கொஞ்சு(ம்)சுகம் மறந்து மறந்தே
வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்;

பிறக்கும் வயிறு பற்றியெரிய
பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும்
பாதி பங்குக்குச் சுமக்க –
ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்;

பாவம் அனாதைக் குழந்தையென்று
வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும்
தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும்
ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்;

நடக்கும் பிறக்கும் நாளே போ
போவென்று –
நாளும் கணவனைத் தாங்கிக் தாங்கி
கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்;

கொஞ்சம் விசமேனும் கொடுத்து
உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால்
அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க
மனசெல்லாம் வலி சுமப்பவள்;

விளையா மண்ணின் வாசம்போல – பிறவாவயிறும்
பாவி கணக்கு,
பிறந்த பாவம் ஒழியட்டுமென்று
தினம் தினம் – தனை
மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!!
—————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to 50, தொட்டில் ஆடாத வயிறு..

  1. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    அருமை!!

    Like

  2. munu. sivasankaran's avatar munu. sivasankaran சொல்கிறார்:

    ”செய்தக் குற்றம் தேடி தேடி
    செய்யா தெய்வப் பாதம் நாடி
    தொட்டில் ஆடும் –
    வயிறு கேட்பவள்;” nalla varigal..!

    Like

  3. munu. sivasankaran's avatar munu. sivasankaran சொல்கிறார்:

    ”தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
    வயதைத் தொலைக்கும்
    மாசற்றவள்;” anbu seiyum aangal pengalaip pethaiyaagap paarkkiraargal..! athikaaram seiyum aangal avargalaip bothaiyaagap paarkkiraargal..! saga uyiraaga unarbavargal avargalai AATHIPPENNAAGAK kaangiraargal..! nanri nanbare…!

    Like

Umah thevi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி