22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம்
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,
இங்கே யார்மேல் வருந்தி
யாருக்கென்னப் பயன்.. ?

ஒரு சொட்டு உண்மை
சிறுதுளி கருணை
உருகாத மனசுருக; உள்ளேப்
பேரன்பு ஊறாதோ…?

கோபத்தை முட்களுள் தொலைக்கும்
நினைக்க மனசு துடிக்கும்
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்
மனசெங்கும் வாராதோ… ?

அன்பிற்கே அணங்கும் உடம்பு
அடுத்தவற்கழவே கண்ணீர்
கொடுக்க உயிர்
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ…?

கைத்தடிபோல் பெரியோர்
ஊனியெழ பாடம்
விளங்கிக்கொள்ள வலி
வாழ்க்கை’ திருத்தத்தைத் தாராதோ…?

திட்டம் விடு இயல்பு உணர்
திருப்பி அடித்தாலும்
திருத்த யோசி
திருந்தா உள்ளமும் வலிக்காதோ…?

நல்லது செய்
கெட்டதைத் தவிர்
கல்லுக்கும் புல்லுக்கும்கூட
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ…?

மொத்தத்தில் – சுயநலம் விடு
மனிதம் கொள்
மனமாசு அறு
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!
————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக