சத்தத்தில்
மறையும் உலகை
மௌனத்தால் திறக்கிறேன்.,
ரத்தத்தில்
உறையும் மனிதத்தை
அன்பினால் பிரிக்கிறேன்.,
முத்தத்தில்
ஊறும் மனதிரண்டை
இதோ இதோ –
உனக்காக ஒன்றும்
எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்..
உலகெங்கும்
பூக்கும்
புன்னகையனைத்தையும்
மனதால்
பறித்துக்கொண்டு வா பெண்ணே
முத்தங்களின்
சிறகு ஒன்று நீ
மற்றொன்று நானாய்
அன்பிருக்கும் வானமெங்கும் பறப்போம்
.
அன்பு தீரும்போது
அங்கேயே
இறப்போம்..
நம் இறப்பு சொட்டும்
மழைதோறும்
ஈரந்தோறும்
கடல்
கடலாய் கடலாய்
இப்பூவுலகு
வனமாய் வனமாய்
வெளியெங்கும் அழகு சொட்டச் சொட்ட
மீண்டும் –
புதிதாய்ப் பிறக்கட்டும்!!!
————————————————-
இது ஆணலை
அது பெண்ணலை
ஆனால் –
இரண்டுமே கடல்..
இது நீலம்
அது வெள்ளை
ஆனால் –
இரண்டுமே வானம்..
இது காற்று
அது நீர்
ஆனால் –
இரண்டுமே உயிர்..
இது உயிர்
அது உடல்
ஆனால் –
இரண்டுமே நீ..
என் நீ!!
——————————————–
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
கவிதையின் வரிகளில் உத் வேகம் பிறக்கிறது.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்–
LikeLike
வணக்கம்
அண்ணா
எனது புதிய வலைத்தளம் வாருங்கள் வந்து கருத்து தாருங்கள்
http://www.trtamilkkavithaikal.com/
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழே:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்–
LikeLike
வருகிறேன் பா..
LikeLike