இது உனக்கானது..

3

நீ தான்
நீதான் எனக்குள்
இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்..

உனக்காக மட்டும்தான்
என் இதயம்
நினைவின் கனத்தோடு துடிக்கிறது..

ஒரு தொடுதல்
ஒரு பார்வையில்
நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்..

நிலம் சொந்தம்
நீர் சொந்தம்
வானமும் வானத்திற்கப்பாற்பட்ட
அனைத்துமென
நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு
சொந்தமாக்கித் தருபவள் நீ தான்..

நீ உடனிருக்கையில்
மட்டுமே நான்
மூச்சை உள்ளிழுக்கிறேன் வெளியே விடுகிறேன்
நீயற்று வாழ்கையில்
மூச்சு போகிறது
அதுவாக வருகிறது; நான் ஏதோ
ஏதோ ஒன்றாக அசைகிறேன்..

அசைகிறேன்
அசைகிறேன்
நீயில்லாத நான்
ஏதோ ஒன்றாக
உயிரற்றும்
உயிரோடசைகிறேன்..
———————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக