1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

Ram_singh_mother_2518586b

காய்கறி
வாங்கி வருகையில்
ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா

வெண்டைக்காய் வாங்கி வருகையில்
கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா

தக்காளி நறுக்குகையில்
ஒரு துண்டு கேட்கும் தம்பி

வெங்காயம் நானுரித்தால்
கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட
அண்ணன்

பூண்டுரிக்கும் போதே
நுனி தேய்த்து
கதைகள் பல சொன்னப் பாட்டி

கட்டம்கட்டி ஆடுகையில்
கூதலாட்டம் ஆடிய தோழி

காத்திருந்தேன்
நெஞ்சே வெடித்துவிட்டதென சொன்ன அவன்

கவலை வேண்டாம்
நானிருக்கேன்னு சொன்ன அவர்

இது உன் வீடு
உள்ளே வான்னு அணைத்துக்கொண்ட
மாமியா(ர்)

அம்மான்னா அம்மாதான்’ வளர்ந்ததும்
கொஞ்சியப் பிள்ளைகள்

அவ இல்லைன்னா
நானில்லை ம்மா – முளைவிட்ட
தலைமுறை

நானும்
அம்மான்னே கூப்பிடவா அத்தே’
வலதுகால் பாராமல் உள்நுழைந்த மறுமகள்

அப்பத்தா
அம்மம்மான்னு
உயிர்விடும் அன்புப் பெயரப்பிஞ்சுகள்..

இப்படி
இன்னும்
யார் யாரை நினைத்துக்கொண்டு
சொட்டுகிறதோ தெரியவில்லை

படுக்கையிலிருக்கும்
அம்மாவின் கண்களிலிருந்துச் சொட்டுமந்த
ஒவ்வொருச் சொட்டுக் கண்ணீரும்..
—————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக