24, குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை)

darkshadow

ரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் அடுக்கியுள்ள ஒரு அறையினுள் நுழைந்து அந்த தங்கம் மின்னும் அறையினை மிகச் சாதரணமாக கடந்துவிடுகிறது. அதற்கு அந்தத் தங்கக் கட்டிகளொன்றும் அத்தனைப் பெரிதாக ஈர்த்துவிடவில்லை. சற்று தூரம் விலகிச் சென்றதும் அங்கே ஒரு பழையபொம்மை விழுந்துகிடப்பது கண்களில் பட்டுவிட அய்…….யென்று கூச்சலிட்டவாறு ஓடிப் போய் அந்தப் பொம்மையை எடுக்கிறது, அதனருகில் இருக்கும் இன்னொரு கதவைத் திறக்கிறது அந்த அறையெங்கும் அழகழகிய வேலைப்பாடுகள் அடங்கிய பல பொம்மைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதென்றே புரியவில்லை ஆனால் தங்கக் கட்டிகளை அலட்சியமாகக் கடந்துபோனது..

அடுத்து ஒரு தொழிலதிபர் ஒருவர் அவ்வழியே வருகிறார். அந்த குழந்தை தனது கை நிறைய பொம்மைகளை வாரிக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு அந்த அறைக்குள் போகிறார். அத்தனை அழகழகான பொம்மைகள் அவருக்கு துளிகூட ரசனையையோ பெரிய ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவேயில்லை. வேறென்ன உண்டென அறையின் மறு கதவை திறக்கிறார். அங்கே காணுமிடமெல்லாம் தங்கம். அதிலும் அவருக்கு அழகாக வடிக்கப்பட்ட சிலைகளோ பல நாகரிகத்தோடு ஒத்துச் செய்யப்பட தங்கநகைகளோகூட அத்தனை பெரிதாக தெரியவில்லை. அந்தத் தங்கக் கட்டிகள் அவருக்கு பெரும்பொக்கிசமாகப் பட்டது. எடுத்து மாறி மாறி முத்தமிட்டவர், எடுக்க முடிந்தவரை எடுத்துக்கொண்டதாக எண்ணி மனதிற்குள் நான்கைந்து பெரிய பெரிய தங்கக்கட்டிகளை சுமந்தவாறே வெளியேச் செல்கிறார்.

அவரை கடந்து அவ்வழியே ஒரு சிற்பி வருகிறார். அவருக்கு தங்கக் கட்டிகள் பார்க்கையில் ஆரவாரம் தாளவில்லை, ஆனால் ச்ச என்னப் புண்ணியம் இதில் ஒரு அழகில்லையே, கட்டியாய் தங்கமிருந்து என்ன பயன் ? அங்கே கலையில்லையே(?) என்று வருந்தினார். அருகே பார்க்கிறார் அத்தனை அழகழகான பொம்மைகள் சிலைகள் வித விதமாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் அச்சில் வார்க்கப்பட்டவை. செதுக்கப் பட்டவையல்ல. ச்ச இதலாம் ஒரு கலையா, செதுக்க செதுக்க எண்ணத்தில் ஊறுவதை அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அழகழகான வடிவத்தில் வடிப்பதில் ஒரு உயிர் இருக்கில்லையா? அதை விட்டுவிட்டு இதை ஏன் இப்படி ஒருபக்கம் வெறும் பொம்மையாகவும் மறுபக்கம் வெறும் கட்டித் தங்கத்தையும் வைத்திருக்கிறார்களே என்று பொருமிக் கொண்டே வெளியேப் போகிறார்.

அடுத்து அந்த வழியே வந்த ஒருவர் ஏதோ ஒரு திறவாத அறைக்குள் நுழைய, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உடம்பிலிருந்த அத்தனை உடையும் காணாமல் போய்விடுகிறது. ஒரு நொடியில் பதறிப்போகிறார். யாரோ இழுத்தாற்போல் இருந்ததே, பொட்டு துணியைக் கூட உடம்பில் காணோமே என்று அதிர்ந்துப் போகிறார். மேலும் கீழும் பார்க்கிறார் சின்ன துணியும் உடம்பிலில்லை. இங்குமங்கும் ஓடி தேடுகிறார், சற்று அச்சத்திற்கு அந்த ரகசிய இடம் மூடக்கூட ஒரு பொருளில்லை அங்கே. எங்கு திரும்பினாலும் கண்ணாடி வேறு. எதைக் கண்டாலும் தனது நிர்வாண உடம்புதான் தெரிந்தது. வெட்கி தலை தெறித்து ஓடுகிறார் இங்குமங்கும். சற்று நிதானித்து வேறொரு கதவை திறக்கிறார். திறந்து பெரிய அந்தத் தங்கவளாகத்துள் நுழைகிறார். எங்கு கண்டாலும் தங்கம். எதைத் தொட்டாலும் தங்கம். ஆனால் தனது மானத்தை மறைக்க ஒரு சின்ன துணியோ அதுபோன்ற ஏதேனும் பொருளோ அங்கில்லை. அப்போது அங்கே ஒரு குரல் கேட்கிறது, அதோ அந்த அறைக்குள் போ ஒரு ஆடை இருக்கிறது, அதை எடுத்து நீ உடுத்திக் கொள்ளலாம், அது உனக்கு மிக சரியாக இருக்கும் போ’ ஆனால் ஒரு நிபந்தனை ‘உன்னால் மீண்டும் இந்தத் தங்கக் கட்டிகள் அடுக்கியுள்ள அறைக்கு திரும்ப வர முடியாது என்கிறது அந்த குரல். அந்த மனிதருக்கு கண்கள் ஒன்றுதான் கலங்கவில்லை, பதட்டத்தில் அறையை விட்டொழியெனச் சொல்லியவாறு ஓடி அந்த ஆடை இருக்கும் அறைக்குள் நுழைகிறார்.

அடுத்து வருபவர் தீராதா தலை வலிக் காரார். அவருக்குக் கொஞ்சம் சன்டுபாம் தைலமோ அல்லது அமிர்தாஞ்சனோ வேண்டும், யாரோ சொல்லி உள்ளே நுழைந்தால் காணுமிடமெல்லாம் தங்கம். ஆனால் சோகம் தலையிலிருந்து கையை எடுத்தாலே தலை உடைந்துவிடும் வலி. ஓடிப்போய் ஓடிப்போய் ஒவ்வொன்றாய் பார்க்கிறார். எல்லாம் தங்கமாக இருந்தது ஆனால் அங்கே கொஞ்சம் கூட சன்டுபாம் தைலமில்லை. அவர் தேடிவந்த அமிர்தாஞ்சனில்லை. எல்லாம் தங்கம்தான், ஆசைதான், ஆனால் தலை வலிக்கிறதே, உடைக்கிறதே, உயிர் போகிறதே, இவ்வளவு தங்கமிருந்து என்னப் புண்ணியம், ஒன்றை கையில் தூக்கினால்கூட தலை வின் வின்னென்கிறது. விட்டு விட்டு வேறெங்கேனும் தைலம் கிடைக்குமா அதை முதலில் தேடுவோமென்றெண்ணி ஓடுகிறார்.

அவரை கடந்து ஒரு துறவி அந்தத் தங்க மாளிகையின் வழியே நுழைகிறார். உள்ளே வந்தால் கண்கள் மலர்கிறது. சுவாசம் தாளம் மாறாது உள்சென்று வெளியே போகிறது. ஆகா ஆனந்தம் பேரானந்தம் காணுமிடமெல்லாம் அமைதி, காணுமிடமெல்லாம் அழகு. எங்கும் அசுர நிசப்தம். இங்கே அமைதியாக அமர்ந்தாலென்ன என்றெண்ணி’ அமைதியாக கண்களை மூடி’ அந்த வளாகத்தின் நடுவே அமர்ந்துக்கொள்கிறார். அமைதியின் ஆரவாரம் அவருக்குள் ஆழமாகச் சென்று அகிலத்தின் தர்மவாய்களை அச்சு பிசகாமல் திறக்கிறது.. உடுத்தும் ஆடையைக் கூட பாரமாக எண்ணும் துறவிக்கு அந்தத் தங்கக்கட்டிகள் ‘இருக்கும் பொருளாக’ கூடத் தெரியவில்லை, எங்கும் சூழ்ந்த அமைதியை மட்டுமே யவர் பெரிதாகக் கண்டார்.

வாழ்க்கை இது தாங்க. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. தனை தீண்டாத ஏதும் தனக்கு பெரிதாகப் பட்டுவிடப் போவதில்லை. தன் அறிவிற்கு எட்டியவாறு, தனது ரசனைக்கு இணங்கியே எல்லோரின் ஆசைகளும் கனவும் கற்பனையும் விரிகிறது. எனவே அவரவருக்கு அவரவர் சரி. எனக்கு நானும் உங்களுக்கு நீங்களும் சரி. பிறகு இடையே வந்து இவரை அவரோ அல்லது அவரை இவரோ குறைச் சொல்லி நடப்பதென்ன உலகில்?

——————-XXX——————-XXX———————–

வெறும் கோபமும் கர்வமும் மோகமும் பெருத்து நம்மால் எத்தனை வருடத்தைக் கூட்டிவாழ்ந்திட இயலும்? வாயில் மென்றுவிழுங்கும் அமிர்தம்கூட தொண்டை கடந்தால் கசந்து விழுங்கியதொரு காயிற்கு சமம்தான். மனது பூரிக்கும் அழகு என்றாலும் கூட அனுபவித்த நான்கைந்து நாளிற்குப் பின் அதுகூட பழசுதான். உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. உலகிலுள்ள யாருமே ஒரே மனநிலையில் ஒருமித்த கருத்தில் இல்லை. கருத்தோடு தன்னைக் கட்டி இறுக்கிவைத்துக் கொள்ளமுடிகிறது’ என்றாலும், அதற்குள்லிருந்தும் ஒரு கேள்வி முரணாக எழுவதை தனக்குமட்டும் தெரியும் மனசாட்சி அறிகிறது. அத்தகைய தனது உணர்வை ஆராய்ந்து தன் பிறப்பின் வழியே உலகின் தொடர்புகளை அறிந்தவருக்கு உலகம் குற்றமாகத் தெரிவதில்லை. உண்மையில் இந்த உலகம் குற்றமெனில் அதில் நாமும் அடக்கம். இந்த அகிலம் அழகு எனில் அதற்குள்ளும் நாமும் அடக்கம். எப்படி பார்க்கப் போகிறோம் நாம் நம்மை? அழகாகவா அல்லது குற்றப்படுத்தியா என்பதை நாம்தான் தீர்மாணிக்க வேண்டியுள்ளது.

——————-XXX——————-XXX———————–

அதற்காக; யாரையும் விட்டுவிடு, யாரேனும் எக்கேடுகெட்டும் போகட்டுமென்று விட்டொழிதல் அர்த்தமல்ல. தவறை எடுத்து கூறி உண்மையை விளம்பி ஒருவரை திருத்துவது வேறு, குறைச் சொல்லி அல்லது குறையாக பிறரை எண்ணி தானும் குறைந்துபோவது வேறு.

ஒருவரை இகழ்ந்து பேசுகையில் மனம் தன்னைத்தானே எண்ணி உள்ளுக்குள் வெட்கிப் போகிறது. அறிவிற்குள் ஒரு குற்றவுணர்வு கறையாக படிந்துக்கொள்கிறது. அதே ஒருவரை பாராட்டுகையில் மனசு விசாலமடைகிறது. கொடுக்க கொடுக்க சுரக்கும் கிணற்றைபோல பிறருக்கு நல்லதை நினைக்க நினைக்க நமக்கும் நல்லதொன்றே நடக்கத்தக்க சூழலாக நமைச் சுற்றிய அனைத்துமே மாறிக்கொள்கிறது. எனவே குறை சொல்லாதீர்கள். யாரையும் குற்றப் படுத்தாதீர்கள்.

——————-XXX——————-XXX———————–

எனக்கு அருகிலிருப்பவன் தவறுசெய்தால் நான் வாழுமிந்த சமுதாயம் சரியில்லை என்று அர்த்தம். பிறகு அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்குண்டுதானே? பிறகு எனக்கு அருகிலிருப்பவன் குறைகளோடு வீழ்ந்தால்’ நான் நிறைவோடு வாழ்ந்துமகிழ்தலும் தீதே இல்லையா? பிறருக்கு தீங்கு எனில் அஞ்சு. வருந்து. அவர் பாவம் என்று கருணை கொள். பிறர் தீங்கிலிருந்து விடுபட எந்தப் பொருளாயினும் சரி இருப்பதை முடிந்தவரை எடுத்து கொடு. இயற்க்கை உனது விரிந்த மனதை மூடாதக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும். உனை குறையாத நன்மைக்கிணங்க வளர்த்துக் கொண்டேயிருக்கும். நல்லது செய்தவர் வீழ்ந்ததாய் வரலாறில்லை. தர்மம் தோற்றதாக இலக்கியமோ நமது கலாச்சாரங்களோ எடுத்துச் சொல்லவில்லை. அது நமை துன்பத்திலிருந்து காக்கிறது. சேமித்துவைக்கப்பட்ட அறையின் பொருளைப் போல நாம் செய்த நன்மைகள் நமக்கு இரட்டிப்பாகக் கிடைக்கிறது. நமது ஒவ்வொரு செயலும் விதையில் முளைக்கும் செடியாக முளைத்துக்கொண்டே இருக்கிறது. பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள், எதை நாம் விதைப்பது, நன்மையையா ? அல்லது தீமையையா ?

——————-XXX——————-XXX———————–

நன்மையையே எங்கும் விதைப்போம். எல்லோருக்கும் நன்மையே விளைந்து நன்னிலம் பெரிதாய் மகிழ்வாய் பெருகட்டும். நல்லது செய்து நல்லதை எண்ணி நானிலம் சிறக்க நம்மோடுள்ளவர்கள் சிறக்க மேன்மையோடு வாழவே நாம் ஒவ்வொருவரும் முற்படுவோம். குறைச் சொல்லி’ குற்றம் கூறி’ புறம் பேசி அழுக்காகும் நாக்கினையும்’ எண்ணத்தையும்’ கண்ணியத்தாலும், உண்மையாலும், கருணைவலுக்கும் அறிவினாலும் சுத்தம் செய்வோம்.

——————-XXX——————-XXX———————–

கருணையூரிய மனசாட்சியின் அதிர்விலிருந்து வெளிப்படும் அறிவு பலப்பட பட அருகிலிருக்கும் அத்தனையும் பலப்படும். பிறகங்கே இல்லையென்றுச் சொல்லவே ஒன்றுமிருக்காது. கொடுக்க மட்டுமே நிறைய இருக்கும். அங்ஙனம் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்கையில், பெற்று பெற்று எல்லோரும் பொதுவாக மகிழ்கையில், பெற்றவருக்கும் ஒரு கட்டத்தில் கொடுக்கவே எண்ணம் வரும். பிறகென்ன, பெற்றவரும் கொடுப்பார். உற்றவரும் கொடுப்பார். ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கீழ் மேல் நீங்கி, அனைவரும் சமமாக இல்லார்க்கு இயன்றதை செய்து செய்தே பழகிக்கொண்டால் பின்னிந்த நிலத்தில் எடுக்கவோ குறைக்கவோ மோசம் செய்யவோ யாருக்கிங்கே எண்ணம் வரும்? இருப்பதில் ஏகாந்தம் குறையாது மகிழ்ச்சிப் புன்னகை பரப்பி இந்த பேரண்டம் நன்னடத்தையால் நிறையத் துவங்காதா? நிறையத் துவங்கட்டும். கருணை எங்கும் பெருகட்டும். நன்மையினால் இந்நிலம் சுற்றி சுற்றி எங்கும் நிம்மதியே நிறையட்டும்!! எல்லோரும் வாழ்க!! எல்லாம் மகிழ்க!!

வித்யாசாகர்

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20, குடியும் கோவில்வாசலும்..

1
எப்படியேனும் நாளையிலிருந்து
குடிக்கக்கூடாது என்றெண்ணும்
குடிகாரனைப்போலத்தான் – நானும்

நாளைக்கேனும்
தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று
தினமும் எண்ணிக்கொள்கிறேன்..
——————————————————————–

2
உளி அடித்த சப்தம்
பாறை உடைந்த வலி
மனிதர் சிந்திய வியர்வை
குழந்தை அழுதக் கண்ணீர்
காக்கை குருவிகள் விட்ட உயிர்
மரம் பிடுங்கிய இடத்திலிருந்து –
வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள்
ஒரு காலையில் இறந்துபோன யானை
விபத்தில் இறந்த அவனோ அவளோ
இத்தனையும் நடந்த இடத்திற்கு
ஒற்றைப் பெயர் வைத்தனர்
கோயிலென்று..
——————————————————————–

3
கலதரிசனம் கண்டு
பூரிக்கமுடியவில்லை
காலடியில்
பிச்சைக்காரி!
——————————————————————–

4
கோயில்வாசலைக் கூட
தாண்டவில்லை சாதி,

பெரிதாகவும் சிறிதாகவும்
உள்ளேயும் வெளியேவும்
ஏக தாண்டவம் ஆடுகிறது;

சாமிக்குத்தான்
செம வேட்டை..
——————————————————————–

5
கண்ணைக் குத்திவிடுமென்று
பயந்தவன்
தட்டில் காசு போட்டான்,

குத்தாதென்று
தெரிந்தவன்
வாசலில் பிச்சைப் போட்டான்,

சாமி தட்டிலும் இருந்தது
வாசலிலும் நின்றது..
——————————————————————–

6
தினமும்
மூட்டையைச் சுமந்துக்கொண்டுதான்
பிள்ளைகள்
பள்ளிக்கூடம் போகின்றன,

முட்டைபோடும் பாவம்
அவர்களைச் சேராதுபோகலாம்..
——————————————————————–

7
கடைக்கு கடை
ஆக்கிரமிப்பு,

மளிகை வாங்க வரிசையில் நின்ற
தமிழன் சொன்னான்
விட்டுக்கொடுத்தானாம்..
——————————————————————–

8
காசு
பணம்
பொருள்
உடம்பு
ஏதேனும் கொடு;

எதைவேண்டுமோ செய்யுமிந்த
மனித இனம்..
——————————————————————–

9
மதுக்கடையோரம்
மென்றுத் துப்பிய
எலும்புச் சில்லுகளை தேடி போனது
இரண்டு பூனைகள்;

எனக்கு பயம்
எங்கு ஒரு துளி மதுவோ
அல்லது சிகரெட்துண்டின் எச்சிலோ
பூனைகளின் உதட்டில் பட்டுவிடுமோ’ என்று!
——————————————————————-

10
மதுக்கடையோரம்
நடந்துச்செல்லும் பள்ளிமாணவர்களில்
ஒருவருக்கு அந்த நாற்றம்
பிடித்துவிட்டால்கூட போதும்;

அந்த ஒரு மாணவனிலிருந்து
சரிய துவங்கும்
நாளைய நம்
முழு சமுதாயத்தின் ஒழுக்கமும்..
——————————————————————-

11
பள்ளிக்கூடத்தையும்
அருகே மதுக்கடைகளையும்
ஒரே தெருவில் வைத்திருக்கும் மனிதர்களால்
முரணாகவே
உருவாகிறதிந்த சமுதாயமும்..

முடிவில்
மதுக்கடைகளை மூடுவதற்கு
சுடுகாடுகளைத் தாண்டியே
போராட வேண்டியிருக்கிறது..
——————————————————————-

12
மதுக்கடைகளில்
வேலைச் செய்யும்
சிறுவர்களின் வாழ்க்கையை
அங்கே குடிக்கச்செல்லும் பல
போராளிகளின் கண்களும்
பார்க்கத்தான் செய்கின்றன,

பல கல்வியாளர்களின்
கண்களிலும்
அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலம்
வெறும் சாராய நாற்றமாகவே தெரிகிறது..
——————————————————————-

13
குடித்துவிட்டு
ஒருவன்
பேருந்திலேயே வாந்தியெடுக்கிறான்

அந்த பேருந்து
தான் அரசு பேருந்தாக இருந்ததில்
வெட்கப்பட்டுக் கொண்டது..
——————————————————————-

14
போதையில்
பாதை விளங்காமல் சென்று
லாரியில் இடித்த இளைஞனை
சாகடித்தது லாரியா?
போதையா?

குடித்த இளைஞன்
குற்றவாளியா?
அல்லது விற்கும் அரசு
குற்றவாளியா ?

கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்
குடி நம் கண்களை
குத்திக்கொண்டுதான் இருக்கிறது..
——————————————————————-

15
உழைத்து
குடித்து
சரிவதைவிட,

உழைக்காமல்
குடிக்காமல்
சாகலாம் போல்;

அப்போது
சாவது பெரிதாகத் தெரியும்
குடி ஒருவேளை
மலிந்துபோகலாம்..
——————————————————————-
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..

il_570xN.595458556_orfp

 

 

 

 

 

 

 

 

 

 

 

1
நீ
கொடுக்கையில் தான்
முத்தம்
அத்தனை இனிக்கிறது;

நீதான் முத்தத்தை
உதட்டிலிருந்து தராமல்
உயிரிலிருந்து தருகிறாய்..
—————————————————————–

2
ல்லோரும் என்னை
தொப்பை தொப்பை என்று
கிண்டல் செய்கிறார்கள்;

நான் யாரிடமும் சொல்லவில்லை
உனக்கு என்
தொப்பைதான் ரொம்ப பிடிக்குமென்று..
—————————————————————–

3
னக்கு அடித்தால்
வலிக்குமென்பாய்

நானும் கோபத்தில்
அடித்துவிடுவேன்,

அடித்ததும் நீயழுவாய்
நானும் யாருக்கும் தெரியாமல் அழுவேன்..
—————————————————————–

4
பொ
துவாக அப்பாக்கள்
யார் யாருக்கு யாராரோ;

ஆனால்
மகள்களுக்கு மட்டும்
அப்பாக்கள் அப்பாக்கள் தான்..
—————————————————————–

5
மீ
ட்டினால் இசைக்கிறது
வீணை,

நீ மட்டும் தான்
எனை மீட்டி
நீ இசைகிறாய்..
—————————————————————–
வித்யாசாகர்

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

IPFG00027

1
ன் காதலிக்குக் கூட
கடிதம் எழுதுபவன்
நீயாகவே இருந்தாய்..

உன்னிடமிருந்து பேசி
வளர்ந்துதான் உலகமெனக்கு
இத்தனைப் பெரிதாக தெரிந்தது..

என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு
வண்ணமடித்தவனும்
உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்..

நீ வரும்நாளில்தான் என்வீட்டுச்
செல்லநாய்க்குட்டி கூட என்னிடம்
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
அதைக் கொஞ்சவில்லையென்று..

உனக்கும் உயிர்க்கும்
பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை
உயிர் போனாலும் நான் பிணம்தான்
நீ போனாலும் பிணம்தான்..
—————————————————————————————-

friendship-card01

2
ள்ளிநாட்களில்
நாம் பார்த்த உலகைவிட அழகு
வேறில்லை..

பட்டம் விடுவதுகூட இன்று
மாடிக்குமேல் நிகழ்ந்துவிடுகிறது
நாம் பக்கத்தில் அமர்ந்துபேசிய கதைகளை
காணவில்லையே..

கொம்பு தள்ளி தள்ளி
ஊரெல்லாம் ஓடினாலும்
உன் செருப்பிட்டு ஓடிய கால்தடம் தான்
நினைவெல்லாம் இருக்கிறது..

நீச்சல் அடிக்க குளம் தேடி
அலைந்ததும்
மீன்பிடிக்கப் போய் தவளை பிடித்துத்
தின்றதும்; இன்று நினைக்கையில்

ச்சீ.. என்றுத் தோன்றினாலும்
இன்றும் நெஞ்சிலினிப்பது
அந்த நாம் நடந்தோடி திரிந்த நாட்களின்
நினைவொன்று தான் நண்பா..

காதலிக்கும் உனக்கும் ஒன்றுதான்
பெரிய வேறுபாடு
அவள் நெஞ்சில் இருப்பாள்
நீ நெஞ்சாய் இருக்கிறாய்..
—————————————————————————————-

images

3
ரவின் விளக்கொளியிலமர்ந்து
படித்ததும் சரி
எங்கோ எவர்நாட்டு அரசியல் குறித்தோ
பேசி வருந்தியதும் சரி
நாளெல்லாம் பேசிமுடியாமல்
நம் விடுதலைப் பற்றியும்
சமூக விடிவு பற்றியும்
நல்லொழுக்கம் குறித்தும் அலசி அலசி
அயர்ந்துப்போன இரவு நிலா குறிப்பில் கூட
அந்த நட்பின் நாட்கள்
பேசிய நினைவுகளெல்லாம் அழிந்துப்போயிருக்கலாம்

ஆனால் நம் நினைவில்
அந்த நிலவும் நினைவும்
நிழலைவிட நெருங்கியே இருக்கும்..
—————————————————————————————-

friendship-73a

4
ரு தோழனோ தோழியோ
தோள்சாய கிடைப்பது
மீண்டும் மடிசாய தாய் கிடைப்பதற்கீடு..

ஆம் நண்பா
நீயும் சரி
எனது தோழிமார்களும் சரி
அன்பில் அழுக்கு சேராதவர்கள்..

எல்லோரிடமும் நான்
பேசிக்கொள்வதில்லை
அத்தனையொன்றும்
கூடி உறவாடிக்கொள்வதில்லை

ஆனால் அத்தனைப் பேருமே
உள்ளே
அவ்வளவு நெருக்கமாய் இருக்கிறார்கள்..

காரணம்
அனைவருக்கும் முகமாய்
நீ இருக்கிறாய்,

ஒரு சொல்லில் இருக்கிறாய்
நட்பு எனும் ஒரு சொல்லில்..

நட்பு தாய்மையில் அடங்குவதில்லை
காதலில் அடங்குவதில்லை
சகோதரப் பாசத்திலும் அடங்குவதில்லை; ஆனால்
நட்பில் எல்லாமே அடங்கிப் போகிறது..

தோழியரும்
தோழர்களுமாய் இருக்கும்
எனதுயிர் நண்பர்கள் வாழ்க..
—————————————————————————————-
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

Alone-46

 

 

 

 

 

 

 

 

து உண்மையிலேயே ஒரு
இனிய காலம் தான்..

நீயும் நானும்
மேடுபள்ளங்களில் நடப்போம்
மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை..

பேசி பேசி சிரிப்போம்
பொய்யிற்கோ பகட்டிற்கோ
துளிகூட சிரித்ததேயில்லை..

கட்டிப்பிடித்துக்கொண்டு
வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம்
முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை..

முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட
நமது ஒருநாள் பிரிவைத் தாண்டி
போனதேயில்லை..

நெற்றியில் ஒற்றைப் பொட்டிருப்பதுபோல்
உனக்கு நானும், எனக்கு நீயும்
மிக அழகாகத் தெரிந்தோம்..

மழை பெய்கையிலும்
முறுக்கிவிட்டுக்கொள்ளும் மீசையைப்போல்
நமதன்பு எதிலுமே தாழாதிருந்தது..

பிழை ஒன்றுதான்
நாம் வளர்ந்தேயிருக்கக் கூடாது
அல்லது வளர்ந்ததும்
கொள்கை கருத்து சாக்கடை என்றெல்லாம்
பிரிந்திருக்கக் கூடாது..

போகட்டும் –

உயிர் ஒன்றுதானிருக்கிறது
மீண்டும் சந்திக்கையில் அன்றைப்போலவே
கட்டி அணைத்துக்கொள்வோம்

நட்பில் நாசமாய்ப் போகட்டுமந்த
கொள்கை கருத்து சாக்கடையெல்லாம்..
————————————————————-
வித்யாசாகர்

Posted in ஒரு கண்ணாடி இரவில் | பின்னூட்டமொன்றை இடுக