கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்..

டவுளை கைவிடுங்கள்
வெறும் பூசைக்கும்
பண்டிகைக்குமானக் கடவுளை
கொஞ்சமேனும் கைவிடுங்கள்;

கேட்டுத் தராத
கண்டும் காணாத
காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள்
நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்;

தீயோர் குற்றம்
தெருவெல்லாம் இருக்க
நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க
நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள்
நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்;

கோவிலில் கற்பழிப்பு
தேவாலையத்தில் கொலை
மசூதியில் மதச்சண்டை
உள்ளே சாமி வெளியே பிச்சை
மரணமெங்கும் அநீதி
மாசு அறுக்காதக் கடவுளிங்கே யாருக்கு வேண்டும்?
வேண்டாம் கைவிடுங்கள்;

காசு தேவை
வீடு தேவை
சொத்து தேவை
வேலை தேவை
வசதி தேவை
பொண்ணு தேவை
ஏன், அடுத்தவன் பொண்டாட்டியை காதலிச்சாக் கூட
அதுக்கும் கடவுள்தான் தேவைன்னா
பிறகெகெதற்கு கடவுள் – கண்மூடி விட்டுவிடுங்கள்;

நீங்கள் உண்டியலில் பணம் போடவும்
தலைக்கு மொட்டை இடவும்
நிம்மதிக்கு ஆடு வெட்டவும்
தன்னம்பிக்கையில் நெருப்பு மிதிக்கவும்
சீலர்கள் வணங்கும் கடவுளை
சொந்தக்காலில் மிதிப்பதைவிட – பாவம் போகட்டும்
கைவிட்டுவிடுங்கள் அந்த
சுயநலக் கடவுளை;

உங்களுக்கு முதலில்
கடவுள் புரியட்டும்,
கடவுளை காட்சியாக்கிய படி
வாழப் புரியட்டும்,
கடவுளைக் காட்டும் மதத்தின் சாரமும்
மதவழி காணத்தகும் கடவுளின் சாராம்சங்களும்
ஏதேதென்றும்
எதற்கென்றும் புரியட்டும்,

கைதொழும் மனதிற்குள்
கடவுள் யாதுமாய்
எங்கும் நிறைந்த சத்தியமாய் உள்ளதை
விருப்புவெறுப்பின்றி அறியும் வரை
கடவுளை
கைவிட்டுவிடுங்கள்;

கையேந்தியதும்
பிச்சைப்போடுவது கடவுளின்
வேலையல்ல,
பிச்சை விடுபட இச்சை அறுபட
ஒருமுகப்பட்டு உயிர்மூச்சு வழியே
உள்நின்றுப் பார்ப்பதில் –
கடவுள் ஏதென்றுப் புரியும்,

அது சமதர்மமாகப் புரியாதவரை
கைவிட்டுவுடுங்கள்
நீங்கள் சண்டைக்கும் சாட்சிக்கும்
வெறும் –
கற்களாக மட்டும் வைத்திருக்கும்
கடவுள்களை!!
———— —————————-
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16, தன்னை தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,
நினைத்ததைச் சாதித்தும்
நடக்காததில் நோகும் பிறப்புகள்;

ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே
நித்தம் வாழ்பவர்கள்,
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;

வந்தவர் போனவர் பற்றியெல்லாம்
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;
அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;

எதிலெல்லாம் ஏற்றம் உண்டென
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,
இருக்க இருக்க மேலேறி
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;

குடிக்க கஞ்சு போதும்
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;

பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;

இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே – நாம்
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்
பெறுவதைப் பேறென்று வாழுவமே’ என உணர்தலேப் பேரறிவு;

இருப்பதும் மறைவதும் இயல்பு தானே
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,
இயல்பில் – மாற்றமும் தோற்றமுமே மாறாதது;

ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் –

மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.,

கலங்காத மனம் அறியாமை நோயின்றி
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!

எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!
—————————————————————-
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்..

டகுவைத்து
மீட்டமுடியாத நகைகளைப்போல
ஆசைப்பட்டு கிடைக்காமல்
காலாவதியாகிப்போன நினைவுகளுள்
நிறைய இருக்கிறாய் நீ;

உன்னைத் தொடாமல்
அதிகம் பார்க்காமல்
ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல்
ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில்
என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ;

படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும்
சிலைக்கீடாக
நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான்
எனக்கு சூரியன் உதிப்பதும்
நிலா மறைந்த இருளில் கனவுகள் பூப்பதும்
நாட்கள் –
வாழ்வதற்கென வசப்படுவதும்;

சிலிர்த்த வார்த்தைகளுள்
புற்கள் முளைத்துவிடும் பசுமையாய்
என்றேனும் –
தூரத்தே காற்றோடு சேர்ந்துகேட்கும்
உனது குரலும்,
சட்டென எதிர்பாராது –
நீ எனை நேராகப் பார்த்துவிடும் பார்வையும்
மொட்டவிழ்த்து மேகம் களையும் இடைவெளிக்குள்
வானம் பார்க்கும் செம்பருத்தியின்
மகரந்தம் போன்றதெனக்கு;

சங்குப்பூவின் மீது நீளம் கீறி
பளிச்சென தகிக்கும் வெண்மையாய் – நீ
எதிர்ப்படும் நாட்களில்
கிழிகிறது என் மனசு,
நித்தமும் அந்த கிழிதலில் வடியும் வலிக்காக
தவம் பூணும் தருணங்களே இப்பொழுதுதுவரை
உறைந்துக்கிடக்கிறது உள்ளே;;

கல்லூரி வாசல்,
உங்கள் வீட்டின் இரும்புக் கதவு,
தெருவில் வரும் போகும் ஐஸ்வண்டி,
கூவாமல் வந்து –
கொடுத்துப்போகும் மல்லிகை பூக்காரி,
உனை தொட்டு தொட்டு விலகாமல் –
எப்பொழுதும் கூட வரும் உனதழகிய நிழல்,
நிற்பது நீயெனில் நான் விலக – சிலவேளை
நானெனில் நீ விலக –
அவ்வப்பொழுது நம் மௌனத்தை உடைத்துவிடும்
வரப்பேறிய நம் குறுக்குவழிச் சந்து,

இன்னும்..

உன்கூட வருகையில் எனை முறைக்காத
உன் அப்பா,
எனைக் கண்டிக்க முண்டாசு கட்டிக்கொள்ளாத – எனது
பெற்றோர்,
இப்படி நமைச் சுற்றி
உனைச் சுற்றி
நாளெல்லாம் டிக் டிக்கென்று அடித்துக்கொண்டே
கணப்பொழுதும் நகர்ந்துகொண்டிருக்கும்
கடிகார முட்களாக
எனக்குள்
எத்தனை எத்தனை நினைவுகள்
மறக்கப்படாமல் நரைமறந்திருக்கிறது..

சுதந்திரம் என்பது விடுபடுவது எனில்
அது முழுமையாக நிகழாமல்
முழுச் சுதந்திர உணர்வை
உனது சிந்தனைக்குள் தருவது
இந்தக் காதல்; காதலொன்றே..

செத்து
பிணம்போகும் தெருவில் கூட – நாளை
எனக்காகப் போடப்படும் மலர்களோடு
தெருவெல்லாம் உதிர்ந்திருக்க’
வாசனை பூத்து உனையே நினைத்திருக்க’ மேள
சப்தங்களோடு –
மனக்கூச்சலாக இரைந்துக்கொண்டே வர’
நிறைய வைத்திருக்கிறேன் ‘உனது நினைவையும்
நமது பிரிவின் வலி தீராத ‘எனது கண்ணீரையும்…
——————————————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

15
கொசு பாவம்
பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது;

நாம்தான் கொலைக்காரர்கள்
வலிக்கு பதிலாக –
கொசுவையே கொன்றுவிடுகிறோம்.

கொசு
அதன் இயல்பில்
அது சரி;

எனில்  –

நாம்?
——————————————————

வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

14

டத்தை
சுத்தம் செய்வதாக
நினைத்து
வெட்டிய
மரங்களில்லா இடத்தில்
எத்தனை மரணம் (?)
எத்தனை மரணம்.. ?!!
——————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக