கவனிக்கவேண்டிய காருண்யம்..

13

புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,

மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

12
வீடுகளை
நினைக்கமறந்த இடத்தில்
கோயில்களைக் கட்டி
என்ன பயன்?

மனிதர்களை
அலட்சியம் செய்துவிட்டு
கடவுளை கைதொழுது
என்னபயன்?

மனிதம் ஒட்டாத
மண்மீது மலையைக் குடைந்து
கொணர்ந்தக்
கோவில்களெல்லாம்
மன்மீதான மனசாட்சியின்மையின்
கனம்; கனம் அவ்வளவுதான்;

அதற்காக
கோயில்களின் கதவுகளை
அடைத்துவிடாதீர்கள்,

புதிதாகத் திறக்கும்
கோயிலின் கதவுகளை
மனக்கதவின் வழியே சென்று
திறக்க முயலுங்கள்..

அப்போதங்கே –
திறந்த மனதுள்
தெய்வமிருப்பது தெரியலாம்,
கோயில்கள்
இருப்பது –
இருப்பதோடும் இருந்துப்போகலாம்..
——————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11
யிற்று வலி
தலை வலி
நெஞ்சு வலி
தனக்கு வந்தால் மட்டுமே
துடிக்கநினைக்கும் உலகிற்கு
கவலையேயில்லை –

ஒரு ஏழைச் சிறுவனின்
பசி பற்றியும்;

ஒரு ஏழ்மைச் சிறுமியின்
படிப்பைப் பற்றியும்..
——————————————————

வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

10
பொதுக் கழிவறைகளுக்கு
வாயிருந்தால்
காரி உமிழ்ந்துவிடும்
மனிதர்களின் முகத்தில்..

நிறைய ஜென்மங்களுக்குப்
புரிவதேயில்லை –
தான் உபயோகித்த இடத்தை
தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்று;

போகட்டும்..
போகட்டும்..

குறைந்தபட்சம்
ஒரு வாலி நீரேனுமள்ளி

ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?)

அதுவரை –
கழிவறைகளுக்கு
வாயில்லாமலே போகட்டும்!!
——————————————————

வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

9
ரவில் தெரியும்
நட்சத்திரங்களைப் போலவே
நமது வாழ்வின் நாட்களும்
கூடியும் குறைந்துமே இருக்கிறது,

அதிலிருந்து
ஒன்றிரண்டை யெடுத்து
எளியோருக்காக
பயன்படுத்திப் பாருங்களேன்;

ஒன்றிரண்டு
நட்சத்திரங்களேனும்
மோட்சம் பெற்றுக்கொள்ளட்டும்!!
——————————————————

வித்யாசாகர்
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக