13
புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,
மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————
வித்யாசாகர்
13
புற்களை
பூஞ்செடிகளை
காடுகளை அழித்து அழித்துப்
பரவிய நாம் –
சிறுத்து சிறுத்தேப் போகிறோம்,
மனிதம்
அறுந்து அறுந்து
மறைகிறது..
——————————————————
வித்யாசாகர்
மனிதர்களை
அலட்சியம் செய்துவிட்டு
கடவுளை கைதொழுது
என்னபயன்?
மனிதம் ஒட்டாத
மண்மீது மலையைக் குடைந்து
கொணர்ந்தக்
கோவில்களெல்லாம்
மன்மீதான மனசாட்சியின்மையின்
கனம்; கனம் அவ்வளவுதான்;
அதற்காக
கோயில்களின் கதவுகளை
அடைத்துவிடாதீர்கள்,
புதிதாகத் திறக்கும்
கோயிலின் கதவுகளை
மனக்கதவின் வழியே சென்று
திறக்க முயலுங்கள்..
அப்போதங்கே –
திறந்த மனதுள்
தெய்வமிருப்பது தெரியலாம்,
கோயில்கள்
இருப்பது –
இருப்பதோடும் இருந்துப்போகலாம்..
——————————————————
வித்யாசாகர்
ஒரு ஏழைச் சிறுவனின்
பசி பற்றியும்;
ஒரு ஏழ்மைச் சிறுமியின்
படிப்பைப் பற்றியும்..
——————————————————
நிறைய ஜென்மங்களுக்குப்
புரிவதேயில்லை –
தான் உபயோகித்த இடத்தை
தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்று;
போகட்டும்..
போகட்டும்..
குறைந்தபட்சம்
ஒரு வாலி நீரேனுமள்ளி
அதுவரை –
கழிவறைகளுக்கு
வாயில்லாமலே போகட்டும்!!
——————————————————
அதிலிருந்து
ஒன்றிரண்டை யெடுத்து
எளியோருக்காக
பயன்படுத்திப் பாருங்களேன்;
ஒன்றிரண்டு
நட்சத்திரங்களேனும்
மோட்சம் பெற்றுக்கொள்ளட்டும்!!
——————————————————