Tag Archives: vidhyasagar

7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..

ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது எனக்கான பார்வை.. நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த பழைய ஊருக்குச் செல்கையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன ஜூலி இறந்துப் போயிருந்தாள் மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம் ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார் இட்டிலி விற்கும் ஐயா காய்கறி மாமா யாருமில்லை அங்கு.. யாருமில்லா அந்தத் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை!!

என் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்