Monthly Archives: மார்ச் 2010

பிரிவுக்குப் பின் – 36

சாமிக்குத் தந்த அர்ச்சனையில் – தவறுதலாய்.. உன் பெயரை – எழுதிவிட்டேன்; பரவாயில்லை- உனக்கும் எனக்குமாய் நடுவில் நிற்பது – அந்த – சாமி மட்டும் தானே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 35

நீயும் நானும் சேர்ந்திருந்த நாட்களில்- உன்னை தான் எனக்கு சரியாகப் புரியவில்லை என்பேன்; உன்னைவிட்டு வந்த பிறகு- என்னையே கூட எனக்கே – புரிய மறுக்கிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 34

நான் குளிக்கும் போது ஊற்றிய நீரில் உப்புக் கரித்ததே மிச்சம்; வாளி நீரில் கண்ணீரே – கலங்கலாக!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 33

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 32

உன்னிடம் நூறுமுறை காதலிக்கிறேனென்று சொல்ல ஆசை ஒரு முறை கூட சொன்னதில்லை – எங்கே, இதயங்கள் தான் ஒன்றோடொன்று – இதழோடு இதழ் போல ஒட்டிக் கொள்கிறதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக