Monthly Archives: பிப்ரவரி 2010

48. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

எத்தனை லட்சியங்கள் உனக்கும் எனக்கும்; படிக்க வேண்டும் நன்றாக வளர வேண்டும் சமூகம் புரியவேண்டும் எதையேனும் சாதித்து – நான் – இன்னார் பிள்ளையென்று சொல்லல் வேண்டும் திருமணத்திற்கு முன் என் உறவுகளுடனான இருப்பை முழுதாய் வாழவேண்டும் என் அன்பில் பிணைந்தென் குடும்பம் உன்னை முழுதாய் ஏற்கும் வரை உனக்காய் – காத்திருக்கவும் வேண்டும். இதலாமென்ன … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உலகெல்லாம் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்; காதலில் தோல்வி என்கிறார்கள்; காதலால் தற்கொலை என்கிறார்கள்; காதலித்தால் தனிக் குடும்பமாய் போவோம் என்கிறார்கள்; காதல் ஏதோ கொடுப்பதும் வாங்குவதும் என்கிறார்கள்; அதலாம் தான் காதலென்றால் – யாரேனும் கேட்கும் போது நீயும் நானும் காதலிப்பதாய் சொல்லவே சொல்லாதே. காதலிப்பது – யாரிடமும் சொல்வதற்கல்ல காதலிக்க. காதலென்பது – எனக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

46. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உனக்கும் எனக்கும் ஆயிரம் – பொருத்தமுண்டோ இல்லையோ எதையும் விட்டுக் கொடுக்க முனைந்ததில் – எதையும் ஏற்றுக் கொள்ள மனதொத்துப் போனதில் வீட்டில் கேட்காமலேயே கொடுத்துக் கொண்டோம் நம் காதலுக்கான சம்மதத்தை!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

45. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

அது ஏனோ உனக்கு அப்படி ஒரு வெட்கம் – சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தாய் வாசலில் நான் நிற்பதை கண்டதும் – நின்று – தயங்கி – நிமிர்ந்தென்னைப் பார்த்து திரும்பி வீட்டிற்குள்ளேயே ஓடுகையில் சத்தமில்லாமல் சிரித்தாயே அந்த சிரிப்பும் பார்வையும் தவிர வேறொன்றுமே இல்லை நீஎன்னை காதலிப்பதற்கான சாட்சி!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

44. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் கைப்பையில் என்னென்னவோ வைத்திருக்கிறாய் இடையே என் புகைப்படம் கூட வைத்திருப்பதாய் – உன் தோழி சொன்னாள்; உன் காதலின் அர்த்தம் நீ திரும்பிப் பார்க்காமல் செல்வதில் வலிக்கத் தான் செய்தது; சரி போடி என விட்டுத் தான் பார்த்தேன் – நீ அலைந்து அலைந்து என்னை தேடியதில் – உயிர் கொள்கிறது உனக்கான காத்திருப்பு!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்