Daily Archives: மார்ச் 28, 2010

பிரிவுக்குப் பின் – 40

கல் முள் மீது நடந்திருந்தாலும் இத்தனை வலித்திருக்காது; உன் அழுத விழிகளின் மேல் கண்ணீராய் நடந்ததில் விதியென வலிக்கிறதடி வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 39

நம்மைப் போன்ற காதலர்களிடம் – வாள் வேல் கத்திகள் ஒன்றுமே செய்வதில்லை; மெளனம் ஒன்றே வெட்டி வீழ்த்திவிடுகிறது

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 38

எனக்கு முத்தம் கொடுக்க உனக்குப் பிடிக்குமா? எனக்கு மிகப் பிடிக்கும் நான் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறேன் என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும் உன் இதயத்தை சற்று தொட்டு இதழ்களில் பதிந்த ஈரம் பார் அதில் – நானுமிருப்பேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 37

உனக்கும் எனக்குமொரு ஒப்பந்தம். இன்றிரவு எட்டு மணிக்கு நீயும் வெளியே – வந்து நில்; நானும் – நிற்கிறேன்; நம் முகம் தெரியாவிட்டாலென்ன, நிலவிற்காவது நம்முகம் – ஒருசேர தெரியட்டுமே!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 36

சாமிக்குத் தந்த அர்ச்சனையில் – தவறுதலாய்.. உன் பெயரை – எழுதிவிட்டேன்; பரவாயில்லை- உனக்கும் எனக்குமாய் நடுவில் நிற்பது – அந்த – சாமி மட்டும் தானே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக