Monthly Archives: மார்ச் 2010

பிரிவுக்குப் பின் – 31

பேசிக் கொண்டு தானிருக்கிறாய் இதயங்கள் மட்டும் இடையே – உனக்கும் எனக்கும் தெரியாமல் உன்னையும் என்னையும் மாறி மாறி தொட்டுக் கொள்கிறது; குவைத்தின் – இரண்டாயிரம் மைல் தூரம் இடையே – ஒன்றுமே செய்ய வில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 30

உன் மீதெழுந்த ஒரு சின்ன்ன்னன்ன… கோபத்திற்காய் – என்னை நானே தண்டிக்கிறேன் உன்னிடம் பேசாதிருந்து!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 29

காலத்தில் தவழும் உலகிற்கு மத்தியில் நான் மட்டும் தான் நொடிகளை கூட உனக்குள் கடக்கிறேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 28

இன்று நம் திருமண நாள் – தினமும் இரவின் நடுநிசியிலாவது யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும் நான் – இன்றாவது அழவேண்டாமென நினைக்கிறேன்; தயவுசெய்து இன்று கனவில் ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்