26 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

கோவிலில்
பிரசாதம் தருகிறார்கள்.

நீ ஓடிவந்து ஓடிவந்து
வாங்கினாய்.

நான் கூட
ரொம்ப பசியோ என்று நினைத்தேன்.

பிறகு வெளியே வருகையில்

எனை வாழ்த்திய
பிச்சை காரர்களால் புரிந்தது –
நீ எனை பார்க்கத் தான்
அத்தனை முறை வந்து போனாய் என்று!!
—————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக