Monthly Archives: ஓகஸ்ட் 2010

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் – பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் இன்றி வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.. நல் – இரவு வணக்கம்! ———————————————————————– மீட்டுமொரு வீணையின் இசையாய் உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது, … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | Tagged , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை காப்பதாக எண்ணி கொவில்களைமட்டுமே காக்கிறான், அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள். கடவுள், உடைந்த கோவிலின் வெளியே நின்று மனிதனை தேடி அலைவார் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் – மனசை அடையாளாம் காணாமல், உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில் மனசெங்கோ அன்பின் குவியலாக இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்! ஒரு பார்வையில் பரிதவித்து முத்தத்தில் நிறைந்து பிரிவில் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக