மனிதம் வளர்கத் தானே
கடவுள் கல்லாகவோ
அல்லது கல்லில் கடவுளோ
அல்லது கல்லின்றியோ கூட கடவுள்
கற்பிக்கப் பட்டது?
மனிதன் தான் பாவம்
மனிதனை கொன்றாவது
கடவுளை காப்பதாக எண்ணி
கொவில்களைமட்டுமே காக்கிறான்,
அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன
கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள்.
கடவுள்,
உடைந்த கோவிலின் வெளியே நின்று
மனிதனை தேடி அலைவார் போல்!
————————————————————–