Daily Archives: ஓகஸ்ட் 25, 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை காப்பதாக எண்ணி கொவில்களைமட்டுமே காக்கிறான், அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள். கடவுள், உடைந்த கோவிலின் வெளியே நின்று மனிதனை தேடி அலைவார் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் – மனசை அடையாளாம் காணாமல், உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில் மனசெங்கோ அன்பின் குவியலாக இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்! ஒரு பார்வையில் பரிதவித்து முத்தத்தில் நிறைந்து பிரிவில் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 22

மனதில் கனக்கின்றன சில முகங்கள், என்னால் நேரே அவர்களை பார்த்து பேசிட இயலாத பழைய முகங்கள். ஆனால் இப்பொழுது முடிகிறது அனிச்சையாய் அது நிகழ்கிறது முகம் பார்த்து இரண்டு கண்களை நேராக பார்த்து மட்டுமே பேசுகிறேன் நான்; ஆனால் அன்று முடியாததன் காரணம், இன்றும் நிறைய பேர் நேராக பார்த்துப் பேச விருப்பம் கொள்ளவோ இயலாமலோ … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரைகுடத்தின் நீரலைகள் – 21

எங்கெங்கோ சுற்றி மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம் ஒன்று கடவுள் மற்றொன்று மரணம்; இல்லை இல்லை கடவுள் இல்லை எனில் மரணமாக மட்டுமே போ, மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம் அல்லது மரணத்தில் மரணிக்கும் கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக