அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

ன் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட
காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும்
மாவிலையும், களிமண்ணும்
காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு –

தெருவெல்லாம்
மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும்
மாணவக் கடவுள்களுக்கு –

நம்பினால்;
நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட
அந்த தெய்வமே இறங்குமென,
‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு

அன்னை தந்தையே என் உலகம் என சுற்றிக் காட்டி
விலங்குகளுக்குள்ளும்,
அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் இறைமையை உணர்த்தும்
தும்பிக்கை நாதனை கொண்டாடும் இந்த சிறப்பு விழாவிற்கு –

ஏழை பாழை வீட்டில் கூட
நல்லசோறு பொங்கும் பிள்ளையார் சதுர்த்திக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழர்களே!
—————————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக